நெருங்கி வா தேவதையே

(1)
  • 4.3k
  • 0
  • 1.5k

ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் இருந்தது. அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூடுதல் மகிழ்ச்சி. மறுநாள் காலையிலேயே தென்றலும், சுகன்யாவும் ரஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்ன ரஷ்மி நைட்டெல்லாம் தூங்கலியா என்றாள் தென்றல். ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்பலாமா என்றாள் . அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ரஷ்மி. ரஷ்மி காலேஜ் பஸ்சில் போவதாய் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள்.

1

நெருங்கி வா தேவதையே - Part 1

ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூடுதல் மகிழ்ச்சி. மறுநாள் காலையிலேயே தென்றலும், சுகன்யாவும் ரஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்ன ரஷ்மி நைட்டெல்லாம் தூங்கலியா என்றாள் தென்றல். ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்பலாமா என்றாள் . அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ரஷ்மி. ரஷ்மி காலேஜ் பஸ்சில் போவதாய் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள் . பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா என்றனர். ஹேய் உனக்கு தெரியுமா லாஸ்ட் சமயத்துயல அருணும் நம்ம கிளாஸ் ல ஜாயின் பண்ணியிருக்கானாம் என்றாள் சுகன்யா. நேத்து நைட் ஃபோன் பண்ணினான். நம்ம கூட ஸ்கூல் படிச்ச அருணா ஆமாம் அவனேதான். அவன் இருக்குறது ஒரு வகையிலே ...மேலும் வாசிக்க

2

நெருங்கி வா தேவதையே - Part 2

சௌமியா மேம் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல கூட இல்லை. ரஷ்மி எப்படி போகிறது சௌமியா மேம் கிளாஸ் என விசாரித்தாள். நன்றாகத்தான் இப்போது லேசாக தன்னம்பிக்கை வந்திருக்கிறது என்றான். வெரி குட் என்றாள். அடுத்த வாரம் தென்றலின் பர்த்டே வருகிறது நாங்கள் சிம்பிள் ஆக ஒரு ரெஸ்டாரன்ட் புக் செய்துள்ளோம் நீயும் வர வேண்டும் என்றாள். ஜோவும், அருணும் கூட வருகிறார்கள் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் என்றாள். அது ஒரு சண்டேவாக இருந்தது. தென்றலுக்கு என ஒரு கிப்ட் ஜோ, அருண், ராகவ் மூன்று பேரும் சேர்ந்து வாங்கினார்கள். தென்றலுக்கு ரொம்ப சந்தோஷம். சௌமியா மேம் வந்திருந்தார்கள். அவர்கள் வருகையை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தாள் ரஷ்மி. என்னப்பா என்ன பார்த்ததும் freez ஆகி விட்டீர்கள் நானும் சின்ன பொண்ணுதான் என சிரித்தாள். எல்லோரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்கள். கேக் வெட்டினாள் தென்றல். அவள் ஜோவுக்கு முதலில் ...மேலும் வாசிக்க

3

நெருங்கி வா தேவதையே - Part 3

அருண் போனை எடுக்கவில்லை. 10 நிமிடம் கழித்து கூப்பிட்டான். என்னாச்சு என கேட்டான் அருண் ஒண்ணுமில்லை ரஷ்மிக்கு ஃபோன் பண்ணினேனா ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அதுவா நாங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வந்திருக்கிறோம் அவளுக்குத்தான் பக்தி அதிகம் ஆச்சே அதுதான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா என்றான். நான் அவ கிட்டயே போனை குடுக்குறேன் பேசு என்றான். என்ன கல்யாண பார்ட்டி எப்படி போகுது என்றாள். ம் நல்லாத்தான் போகுது . உன்னைய மிஸ் பண்ணுகிறோம் என்றான் . நானும் தான் உன்னைய மிஸ் பண்ணுறேன் என்றாள். அருண் மறுபடி வாங்கி பேசினான். இப்போதான் கோவில் வரைக்கும் வந்துருக்கோம் இனிமே ஃபோன் பண்ணாதே ராகவ் பிளீஸ் என்றான். எதற்காக ரஷ்மியின் நினைப்பு திடீரென வாட்டி எடுக்கிறது என புரியவில்லை. சீக்கிரம் கிளம்பி போய் அவளை பார்த்தால் தேவலை என்று இருந்தது. அவள் சொன்ன பொருட்களை கன்யாகுமரியில் வாங்கிகொண்டான். ஜோ ...மேலும் வாசிக்க

4

நெருங்கி வா தேவதையே - Part 4

ராகவ் தென்றலுடன் நிதானமாகவே பழகினான். அவளும் அவனை புரிந்து கொண்டாள் . ஆனால் இவர்களுடைய புரிதல் ரஷ்மிக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் தன்னை தயார் ஜோவும் , அருணும் நடப்பதை கவனித்து வந்தனர். ஒரு புறம் படிப்பு மறுபுறம் நட்பும் , காதலும் இரண்டையும் பேலன்ஸ் செய்வது கஷ்டம்தான். அப்போதுதான் ரஷ்மி மியூசிக் பாண்ட் ஒன்றை துவங்குவதாக முடிவெடுத்து இருந்தாள். மெம்பர்களை சேர்க்கும் பணியில் இறங்கி இருந்தாள். ராகவுக்கு மியூசிக் மீது இஷ்டம் தான் ஆனால் அனுபவம் இல்லை. அருணுக்கு அதில் நல்ல ஆர்வம் இருந்தது. அருணை சேர்த்துக்கொண்டாள் ரஷ்மி கூடவே சுகன்யாவையும் சேர்த்து கொண்டாள். காலேஜில் மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அரேஞ்ச் செய்து தருவதாக சொல்லி இருந்தார்கள். ஜோவும் ராகவும் கிரிக்கெட்டில் மூழ்கி கிடந்தார்கள். மியூசிக் பாண்ட் துவங்கும் நாளையொட்டி எல்லோரையும் வர சொல்லி இருந்தாள். சிறிய இசை அறிமுகம் ஒன்றை அருண் செய்தான். அருணை நினைத்தால் பெருமையாக ...மேலும் வாசிக்க

5

நெருங்கி வா தேவதையே - Part 5

ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை. ரஷ்மியின் மனதிலும்,ராகவின் மனதிலும் குழப்பமான சூழ்நிலையே இருந்தது. அன்று மாலை ரஷ்மியின் மியூசிக் பாண்ட் ஒத்திகை நிகழ்ச்சியை காண போயிருந்தான் ராகவ் ஜோவும் தென்றலும் வந்திருந்தார்கள். ஒத்திகை என்றாலும் சிறப்பாக இருந்தது. அருண் அருமையாய் மியூசிக் compose செய்து இருந்தான். ரஷ்மி பாடிய விதமும் அருமையாய் இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னான். தென்றலும் பாராட்டினாள் .ஏன் ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை என்றான். தென்றல் இப்போதெல்லாம் என்னை எங்கும் கூப்பிடுவதில்லை என்றாள் ரஷ்மி. நீ அதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றான். நாளைக்கு சௌமியா மேடம் வருவார்கள் மதியம் 2 மணிக்கு ட்ரீட் கொடுப்பதாக சொல்லி இருக்கிறாய் நினைவு இருக்கிறது அல்லவா என்றாள். நன்றாக நினைவு இருக்கிறது. நான் எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டேன். மதியம் ஒரு மணிக்கெல்லாம் நான் அங்கு இருப்பேன் . நீ மேடத்தை 12 30 போல ஃபோன் செய்துவிட்டு பிக்அப் செய்து கொள் ...மேலும் வாசிக்க