Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 38

என்ன சொல்லுற ரஷ்மி. ஆமாடா அப்பா எனக்கு alliance பார்க்கிறார் அப்படின்னு அம்மா சொன்னாங்க. நீ என்னை லவ் பண்ணுற விஷயத்தை அப்பா கிட்ட சொன்னியா ? இல்லை எனக்கு பயமாயிருக்கு அவர் உன்னை ஏதாவது பண்ணிட்டா நான் சொல்ல மாட்டேன் விதிப்படி நடக்கட்டும் நாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்போம் என்றாள் ரஷ்மி. நீ சொல்லுறது உனக்கே நியாயமா படுதா? எனக்கு இதை தவிர வேறு வழியில்லை. நீ வந்ததும் மத்ததை பேசிக்கலாம் என்றாள். சௌமியாவிடம் ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். இதுக்கெல்லாம் பயப்படாதே தாலி கட்டும் நேரம் வரை அவகாசம் இருக்கிறது, நான் கிருஷ்ணன் சாரை விட்டு பேச சொல்லட்டுமா? வேண்டாம் மேம் அவள் எனக்கேதும் ஆகி விடுமோ என பயப்படுகிறாள். சீக்கிரம் நான் ஒரு வேலையை தேடிக்கொண்டு அவளை அழைத்துக்கொள்கிறேன் என்றான்.
அவசரப்படாதே ராகவ் நீ சின்ன பையன். நான் ஏதாவது செய்ய முடியுமா என்று கிருஷ்ணன் சாரிடம் கேட்கிறேன் என்றாள். கிருஷ்ணன் சௌமியா கல்யாண பத்திரிக்கை whatsappல் வந்திருந்தது. கிருஷ்ணன் ஃபோன் பண்ணி அவசியம் வந்து விடும்படி சொல்லி இருந்தார். கல்யாணம் கோவிலில் சிம்பிள் ஆக நடைபெறுவதாக இருந்தது.

இவன் ப்ராஜக்ட் முடித்து ஊர் திரும்பும் நாள் வந்தது. இன்னும் இரண்டு நாளில் சௌமியா மேம் கல்யாணம் . பிரதீபா ஃபோன் பண்ணியிருந்தாள். நீங்கள்தான் வந்து எல்லாம் செய்ய வேண்டும் அண்ணா என்று சொல்லி இருந்தாள். கல்யாணம் முடிந்த 3 மாதங்களில் சௌமியாவும்,, பிரதீபாவும் சிங்கப்பூர் போகிறார்கள் என்ற சேதியையும் சொன்னாள் .
ஊரில் இருந்து வந்த அன்றே சாயங்காலம் போய் ரஷ்மியை பார்த்தான். ரஷ்மி கோவிலுக்கு போயிருப்பதாக அவள் அம்மா சொன்னாள். கோவிலுக்கு போய் பார்த்த போது பக்தியோடு சுற்றி வந்து கொண்டிருந்தாள். என்ன ராகவ் என்ன பண்ண போகிறாய். இனிமேல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டாம் பெரிய பிரச்சனை ஆகிவிடும். இங்கிருந்து போய்விடு என்றாள். இவனுக்கு தலையே சுற்றியது. நான் பிறகு போனில் பேசுகிறேன் இப்போது தயவு செய்து போ என்றாள். இவனுக்கு பேச்சே வரவில்லை . அங்கிருந்து கனத்த இதயத்துடன் கிளம்பினான்.

கோவிலுக்கு சென்று சௌமியாவுடைய கல்யாண ஏற்பாடுகளை கவனித்தான். ஜோ அருண் ஆகியோரும் இருந்தனர். அருண் என்னடா ஆச்சு ரஷ்மி ஏதும் சொன்னாளா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான் ஜோ. அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்தான். நாளை மறுநாள் கல்யாணம் . சௌமியா அவனை வர சொல்லியிருந்தாள். வீடு அலங்கரிங்கப்பட்டு இருந்தது. பிரதீபா கிருஷ்ணனோடு ஷாப்பிங் போயிருந்தாள். என்ன பிரச்சனை உனக்கு ரஷ்மி என்னிடம் பேசினாள். அவள் தெளிவாய்த்தான் இருக்கிறாள். கிருஷ்ணன் இன்னும் இரண்டு மாதத்தில் உனக்கொரு வேலை அரேஞ்ச் செய்து தருவதாய் சொல்லி இருக்கிறார். நீ கவலைப்படாதே ராகவ் என்றாள் . சௌமியா கைகளில் மெகந்தி போட்டிருந்தாள். அவள் நிறத்துக்கு இன்னும் அழகு சேர்த்தது. சரி மேம் நான் ரஷ்மி எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறேன் என்றான். என்ன சிங்கப்பூர் போவது உறுதி ஆகி விட்டதாமே என்றான். ஆமாம் பிரதீபாவுக்கென ஒரு எதிர்காலம் வேண்டுமல்லவா அதற்காகத்தான் நானும் ஒத்துக்கொண்டேன் என்றாள் சௌமியா.

கல்யாண நாளன்று சௌமியா அலங்கரிங்கப்பட்டு மண மேடையில் அமர்ந்தாள். ரொம்பவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் பத்திரிக்கை அனுப்பபட்டதாக கிருஷ்ணன் சொன்னார். ஸ்ருதி,தென்றல்,சுகன்யா, ரஷ்மி, ராகவ்,அருண், ஜோ பூஜா ,பூஜா அப்பா ஆகியோர் பிரதானமாக வந்திருந்தனர். சௌமியாவின் மனநிலை விவரிக்க முடியாததாக இருந்தது. கிருஷ்ணன் சௌமியாவின் கழுத்தில் தாலி காட்டினார். எல்லோரும் அட்சதை தூவினார்கள். ரஷ்மி ஒன்றும் யாரிடமும் பேசவில்லை. சௌமியாவிடம் மட்டும் பேசிவிட்டு ஒரு கிப்ட் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டாள். என்ன ஆச்சு ரஷ்மிக்கு என்று எல்லோரும் பேசிக்கொண்டனர். கிருஷ்ணன் மகிழ்ச்சியில் திளைத்தார். மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதீபாவுக்கு மனம் நிறைந்து விட்டது. தென்றல் வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னாள். invitation அனுப்புகிறேன் எல்லோரும் நிச்சயம் மற்றும் கல்யாணத்துக்கு வந்து விடும்படியும் சொன்னாள் . ஜோ எதுக்கு இப்ப அவசரமா கல்யாணம் பண்ண போறாங்க ஒண்ணுமே புரியலையே என்றான்.

சௌமியா பால் சொம்புடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் . கிருஷ்ணன் நோ ஃபார்மாலிட்டீஸ் . உன் மனசு எப்போ இதை ஏற்று கொள்கிறதோ அப்போது வைத்துக்கொள்ளலாம் என்றார். சௌமியா நீங்கள் எனக்காக காத்திருந்தது போதும் , இனிமேலும் உங்களை சோதிக்க நான் விரும்பவில்லை என்றாள். பிரதீபாவை பற்றித்தான் என் கவலை இருந்தது. இனி அந்த கவலை இல்லை என்றார் கிருஷ்ணன். ஜோ, அருண், ராகவ் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் . ஜோ நீ ஏண்டா ராகவ் பேயறைஞ்ச மாதிரி இருக்க நாங்க எல்லாம் இருக்கோம் உனக்கு என்றான். பூஜா ஃபோன் பண்ணியிருந்தாள். சரி நான் கிளம்புகிறேன் ஸ்டேஷன் வருகிறாயா என்றாள். இதோ வருகிறேன் என்று கிளம்பினான். பூஜாவை ஸ்டேஷன் போய் விட்டு விட்டு வருகிறேன் என்றான் அருண். ஜோ குடித்து விட்டு மட்டையாகி இருந்தான். பூஜா என்ன அருண் ரஷ்மி இப்படி பண்ணுகிறாள் என்றாள். அதுதான் எனக்கும் புரியவில்லை என்றான். நீயும் என்னை கைவிட்டுவிடாதே என்றாள் பூஜா. அவள் நானும் ஒரு பிளான் வைத்திருக்கிறேன் பிறகு சொல்கிறேன் என்றாள் . டிரைன் கிளம்பி விட்டது. பூஜா ஏன் அப்படி சொன்னாள் என யோசித்தவாறே அங்கிருந்து அருண் கிளம்பினான்.

கிருஷ்ணன் ரஷ்மியின் அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என சொன்னார். ரஷ்மியிடம் அவள் அப்பா ஃபோன் நம்பர் வாங்கிக்கொண்டார். அவரிடம் அவசரப்படவேண்டாம் ரஷ்மி ஒரு வேலைக்கு போகட்டும் என்றார். அவள் கல்யாணம் பண்ணிக்கொண்டு எந்த வேலைக்கு வேண்டுமானாலும் போகட்டும் என்றார் உறுதியாக. அதற்கு மேல் கிருஷ்ணன் கட்டாயப்படுத்தவில்லை . நடப்பது நடக்கட்டும் பார்த்துக் கொள்வோம் சௌமியா என்றார். ரஷ்மிக்கு பார்த்த மாப்பிள்ளை போட்டோ whatsappபில் வந்தது, இதை பார்த்த எல்லோருமே ஆச்சர்யபட்டனர். ரஷ்மி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதிக தொடர்ந்து ரஷ்மி எங்கேஜ்மெண்ட் invitation வந்தது. என்னதான் ரஷ்மி மனதில் இருக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. மியூசிக் கிளாஸ் மாஸ்டர் கிட்டேயும் புலம்பினான் ராகவ். அவள் உன்னை கைவிடமாட்டாள் என்றே அவரும் சொன்னார். ரஷ்மி ராகவுக்கு ஃபோன் செய்தாள் . invitation பார்த்தாயா சந்தோஷமா என்ன ரஷ்மி இப்படி பேசற அப்புறம் என்ன பேச எங்கேஜ்மெண்ட் நடக்குற அதே தேதில நாம இந்த ஊரை விட்டு போறோம் என்றாள். நான் கிருஷ்ணன் சார் கிட்ட பேசிட்டேன் . அவரோட வீடு ஒண்ணு நீலகிரில இருக்கு நாம அங்க போறோம் என்றாள். அடுத்த ஒரு வாரத்தில் நம்ம கல்யாணம் என்றாள். உனக்கும் எனக்கும் அங்கேயே வேலைக்கு ஏற்பாடு பணி இருக்காரு கிருஷ்ணன் என்றாள் . உங்க அப்பா அதை கிருஷ்ணன் சார் பார்த்துக்குவாரு நீ கவலைப்படாதே என்றாள்.

தென்றல் கல்யாணத்துக்கு எல்லோரும் போயிருந்தனர். தென்றல் தலையை குனிந்தவாறே தாலியை கட்டிக்கொண்டாள். தென்றல் கல்யாணத்துக்கு ராகவும் போயிருந்தான். அவனை பார்த்ததும் தென்றல் நீயாவது நல்லா இருடா என்றாள். ரஷ்மியை கட்டிக்கொண்டு நல்லா வாழ்க்கை நடத்து என்றாள். ரஷ்மியும் இவனும் சேர்ந்து கிப்ட் ஒன்றை கொடுத்தனர். ஸ்ருதி,ஜோ சுகன்யா அருண் எல்லோரும் வந்திருந்தனர்.சௌமியா கிருஷ்ணனோடு வந்திருந்தாள். புது தாலி மின்ன சௌமியா ஆளே மாறி இருந்தாள். வாழ்த்துக்கள் தென்றல் . பழசையெல்லாம் மறந்து புது வாழ்க்கையை சந்தோஷமா வாழு என்றாள் . பிரதீபா வரவில்லை. ரஷ்மியும் ராகவும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நான் ஏதுவாக இருந்தாலும் சௌமியா மேம் மூலமாகவே உனக்கு சொல்கிறேன் என்றாள். கிருஷ்ணன் நாளைக்கு உன்னுடைய சர்டிபிகேட் மற்றும் ரஷ்மி சர்டிபிகேட் இரண்டும் ஜெராக்ஸ் எடுத்து எனக்கு whatsapp பண்ணு என்றார். சரி சார் என்றான். வேலை கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா என்ன சார் நான் ரஷ்மிக்காக எந்த கஷ்டத்தையும் தாங்குவேன் என்றான்.

சௌமியாவும், பிரதீபாவும் வெளிநாடு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் கிருஷ்ணன். அதற்கு தேவையான ஷாப்பிங் முழுவதும் மூவரும் சேர்ந்து செய்தனர். என்ன சௌமியா ரஷ்மியும் ராகவும் நம்முடைய நீலகிரி வீட்டில் தங்குவது ஓகே தானே என்றார். நாம் போய் செட் செய்து கொடுத்து விட்டு வரவேண்டும் அப்போது தான் சரியாக இருக்கும் என்றாள். நீ மட்டும் போய் வா நான் இங்கு ரஷ்மி அப்பவோடு இருந்து அவரை பார்த்துகொள்கிறேன் என்றார் கிருஷ்ணன். நீங்கள் பயங்கரமான ஆள்தான் என்றாள் சௌமியா. இன்டர்வியூ கால் ரஷ்மிக்கும் , ராகவுக்கும் வந்தது. வீட்டிலே சொல்லிவிட்டு இருவரும் நீலகிரி பயணமானர்கள். ரஷ்மியை அவள் அப்பா முதலில் அனுமதிக்கவில்லை அப்புறம் அது நல்ல வேலை இப்போதே போனால் நல்லது என்று சொல்லி பர்மிஷன் வாங்கினாள். ராகவுக்கும், ரஷ்மிக்கும் வெவ்வேறு கம்பெனியில் வேலை. இருவரும் ஓரளவுக்கு நன்றாகவே இன்டர்வியூ அட்டென்ட் பண்ணியிருந்தார்கள். என்ன ரஷ்மி வேலை கிடைத்துவிடுமா நிச்சயம் கிடைத்துவிடும் அப்படியே உனக்கு கிடைக்காவிடிலும் பிரச்சனை இல்லை என்றாள் .அதெல்லாம் எனக்கும் கிடைத்து விடும் என்றான். ரஷ்மி எங்கேஜ்மெண்ட் நாள் வந்தது. துணிமணிகள் ,சர்டிபிகேட் , எல்லாவற்றையும் பேக் செய்து பாக் ஒன்றில் மண்டபத்தில் வைத்திருந்தாள்.எல்லாம் முடிந்த பின்பு 11 மணிக்கு கிருஷ்ணன் காரில் சௌமியா , ராகவுடன் நீலகிரி போக வேண்டியதுதான். அவள் மனம் பதட்டதுடன் ராகவை எப்போது பார்ப்போம் என எண்ணி இருந்தது.