யாயும் யாயும்

(0)
  • 1.9k
  • 0
  • 797

கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் அனைவரும் அங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது க

1

யாயும் யாயும் - 1

1. வருகை கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் அனைவரும் அங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது க ...மேலும் வாசிக்க

2

யாயும் யாயும் - 2

2. தேவதை2024"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்."இல்லையே" என்று மாயா சொன்னாள்."அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர அனைத்து மாணவர்களும் "ப்ச்" என்று சலித்துக் கொண்டனர்."எப்பா டேய்! மொக்க மோகா, கீழ விழுந்ததுல உனக்கு ஏதாவது தலையில கீது பட்டுருச்சா" என்றான் மோகனது நண்பன் டெஸ்லா.ஹாக்கி அணியில் இருந்தவர்களில் ஒருவன், "மாப்ள இவன காலுல அடிச்சதுக்கு பதிலா வாய்ல போட்டிருக்கணும் டா" என்றான்.பிற அனைத்து மாணவர்களும் மெல்ல சிரித்து விட்டு, மோகனை அவனது ஹாக்கிக் குழுவிடம் விட்டு விட்டு அவரவர் பயிற்சிக்கு திரும்பினர். ஓடிக்கொண்டிருந்த மாயாவை அவன் மெல்ல சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மாயா திரும்பாமலே தெரிந்து கொண்டாள்.மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு மொத்தக் கல்லூரியே பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் போட்டியில் வென்று விட வெறித் தனமாக பயிற்சி எடுத்துக் ...மேலும் வாசிக்க

3

யாயும் யாயும் - 3

3. தந்தைஅந்த நள்ளிரவில் இருளும் அமைதியும் ததும்பிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று அங்கு ஆந்தையின் அலறல் கேட்டது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. தார் சாலையில் உராயும் ஓசை அந்த இரவின் அமைதியை உடைப்பது போல இருந்தது. வீட்டின் கதவை திறந்து கொண்டு மாயா வெளியே வந்தாள்.என்ன செய்தும் அவளால் அன்று தூங்க முடியவில்லை. கண்களை மூடினால், மோகனின் முகம் அவனது கள்ளமற்ற காதல் பொழியும் கண்கள் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்பதற்காக தன்னைத் தானே வெறுக்கக் கூடிய அவளது நிலையை நினைத்து அவள் மீதே அவளுக்கு சுய இரக்கம் உண்டானது.காற்றில் அவளது அவிழ்த்து விடப்பட்ட தலைமுடி அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த தார் சாலையில் நடந்து கொண்டே இருந்தாள். இப்படி நடந்த படியே எங்காவது கண் காணாத இடத்திற்கு போக முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சாலை முடிகிற வரை ...மேலும் வாசிக்க