ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

(0)
  • 4k
  • 0
  • 1.4k

அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி வரும்போது கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான்.

1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது பகுதி 1 அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான். இவனுடைய விருப்பமெல்லாம் அவள் கூட சகஜமாக பழக வேண்டும் என்பதுதான் ஆனால் ...மேலும் வாசிக்க

2

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 2

தான் தோற்றுப் போய் விட்டோம் என்பதை விஷால் நம்பவில்லை. மறுபடியும் முயற்சிக்க மனம் வரவில்லை. ரேணுகா டீச்சரின் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏனோ இவன் மனம் ஒட்டாமல் இருந்தது. சுபா இவனுக்கு உறுதுணையாக இருந்தாள் . ஏதாவது ஒன்றை செய்து அவனை அந்த தோல்வியில் இருந்து விடுபட செய்வதற்கு முயற்சி செய்தாள். ஒருவேளை அனன்யாவிடம் பிரதீப் விஷாலுடைய காதலைப் பற்றி சொல்லி இருப்பானோ என்று நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் இப்பொழுது அதைப் பற்றி பேசி என்ன பயன் இவன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். இப்போது அவன் முன்னே இருப்பதெல்லாம் அவனுடைய எதிர்காலம். கடந்த காலம் எல்லாம் வெறும் மாயையாக தோற்றமளித்தது. அனன்யாவை நினைத்து நினைத்து தான் முழுக்க வெறும் கண்ணாடி பிம்பமாகவே மாறிவிட்டதாக நினைத்துக் கொண்டான். அவள் எதை செய்தாலும் அதை தனக்காகவே செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். மேலும் பிரதீப் மூலமாக இன்னும் ...மேலும் வாசிக்க

3

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 3

அனன்யாவிடம் இருந்து கால் வந்ததும் இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளே பேசினாள் விஷால், சுபா எல்லாமே சொல்லி இருப்பாள் நீங்க ஒன்னும் அவசரப்பட தேவையில்லை யோசிச்சு சொல்லுங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். பிரதீப் ...அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அவன்கிட்ட ஏற்கனவே நான் பேசிட்டேன் அவன் இதுல தலையிட மாட்டான், அனன்யா நீங்க முழு மனசோட தான் இத சொல்றீங்களா? அவசரப்பட வேண்டாம் என்றான். விஷால் என் மனசாட்சிக்கு விரோதமா எதையும் என்னால செய்ய முடியாது நான் உங்களை விரும்புவது நிஜம் அதை தடுக்க என்னால முடியல என்றாள் . அனன்யா, காட்சிகள் மாறுவது போல் அனன்யாவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டாள். சரி அனன்யா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, சரி விஷால் ஃபோனை வைக்க இவனுக்கு மனம் வரவில்லை அனன்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆதலால் பொறுமையாக இருப்பதே நல்லது ...மேலும் வாசிக்க

4

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 4

விஷால் மறுபடி கண் விழித்து பார்த்த போது அவனுடைய வீட்டில் இருந்தான். சுபா கவலையோடு அவன் அருகில் இருந்தாள் . அனன்யா எங்கே என்று கேட்டான் மருந்து வாங்க போயிருக்கா இப்போ வந்து விடுவாள் யார் உன்னை இப்படி பன்னாங்க ? டான்ஸ் class பசங்களா ? ஆமாம் ..பிரதீப் அவங்க கூட இருந்தானா ? விஷால் அமைதியாய் இருந்தான். டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். சரி சுபா . அனன்யா வந்து விட்டாள் . பிரதீப் தான் இவனை இப்படி பண்ணி இருக்கான் என்றாள் சுபா .அனன்யா விஷால் அருகில் அமர்ந்தாள். சுபா வெளியே போய் விட்டாள் . அனன்யா என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்றாள் .மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள் . தாங்க்ஸ் அனன்யா என்றான். பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாமென நினைத்தான் ...மேலும் வாசிக்க

5

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 5

ஒரு கணம் அவனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. சுபாவும் தன்னை விரும்புகிறாள் என்பதை உணரவே சற்று நேரம் பிடித்தது. அவளுடைய அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டான். என்னாச்சு சுபா உனக்கு என்றான் விஷால். நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் நான் உன்னை விரும்புகிறேன் என்றாள் சுபா. அனன்யா என்ன சொல்வாளோ என யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன அனன்யா சிரிக்கிற என்றான் விஷால். எதுக்கு நீ பயப்படுற விஷால் என்னிடம் அவ முன்னாடியே சொல்லிட்டா என்னால அதை மறுக்க முடியல எங்க ரெண்டு பேரையும் நீ ஏத்துக்க தான் வேணும். என்ன அனன்யா சொல்ற இது யாராவது கேள்விப்பட்டால் உங்கள தான் தப்பா நினைப்பாங்க .நினைச்சுட்டு போகட்டும்.சுபா நீ மறுபடி யோசிச்சிட்டு சொல்லு. நானும் அனன்யாவும் நல்லா யோசிச்சுட்டு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன் கூடத்தான் இருப்பேன் ...மேலும் வாசிக்க