Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 22

சரி அனன்யா நான் கிளம்புகிறேன் என்றான். இப்போதானே வந்த என்ன அதுக்குள்ளே போற.. நாம ஷாப்பிங் மால் போவோம் என்றாள். எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு என்றாள். சரி இரு டிரஸ் மாத்திட்டு வரேன். ஷாப்பிங் மாலில் வீட்டுக்கு தேவையான சாமான்கள் சிலவற்றை வாங்கினாள். அங்கேயே ஒரு கடையில் லஞ்ச் சாப்பிட்டார்கள். வீட்டுக்கு கொண்டுவந்து விட்டான். மணி மதியம் 3 ஆகி இருந்தது.விஷால் 3 மாசம் ரொம்ப அதிகம் என்றாள்.அவளுடைய கைகளை பிடித்து கொண்டான். நான் மட்டும் என்ன சந்தோஷமாவா போறேன் ? அவள் அழுதுகொண்டே உள்ளே போனாள். பிளீஸ் அழாதே உடம்புக்கு நல்லது இல்லை. அவள் அவனை கட்டிக்கொண்டாள்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுகிறேன். நிச்சயமா ? நிச்சயம். அவள் கன்னங்களை துடைத்து விட்டான். அவளை சோபாவில் படுக்க வைத்து கால்களை பிடித்து விட்டான். அவள் தூங்கும் வரை அங்கே இருந்தான். நெற்றியில் முத்தமிட்டான்.பிறகு கதவை சாத்திவிட்டு கிளம்பினான்.

தீபாவை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் போயிருந்தாள் அனன்யா. விஷாலுக்கு ஃபோன் செய்தாள் . ஒண்ணும் பிரச்சனை இல்லையே.. இல்லை கொஞ்சம் மருந்து எழுதி குடுத்து இருக்காங்க. சரி நான் தீபா வீட்டுக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறேன் என்றான். 8 மணி போல போனான். என்ன தீபா டாக்டர் என்ன சொன்னாரு எல்லாம் நார்மல் ஆனா ரொம்ப நேரம் நைட் கண் முழிக்க வேணாம்னு சொன்னாரு. அனன்யா ஆமாம் விஷால் என்றாள். மருந்து எல்லாம் கரெக்ட் டைம் சாப்பிடு தீபா என்றான். நீதான் என் மருந்தே என்றாள்.இல்ல தீபா நானும் வெளியூர் போறேன் அதுக்காக சொல்லுறேன் . ம் சரி. இதை சொல்லத்தான் வந்தியா? இல்ல இன்னைக்கும் உன் நைட்டி கூட விளையாட வந்தேன். இருவரும் சிரித்தார்கள். தீபா அவன் அருகில் வந்தாள் நான் போய் உனக்கு ஏதாவது சாப்பிட எடுத்து வருகிறேன் என்றாள். அந்த ஜீன்ஸ் பாண்ட் போட்டு வா பார்ப்போம் என்றான். சென்னைல வாங்குனியா விஷால் .ஆமாம்.

நல்லா இருக்கு என்றாள் அனன்யா . மூவரும் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். சுபாவுக்கு அனுப்பினாள். சுபா நல்லா இருக்கு என்றாள்.சுபா வருவதற்கு இன்னும் 3 நாட்கள் இருந்தன. இவன் சென்னை போகும் பரபரப்பில் இருந்தான். அனன்யா வீட்டில் லஞ்ச் சாப்பிட வர சொல்லி இருந்தாள். தீபாவும் அங்கு இருந்தாள். இருவரும் காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தனர். வா விஷால் ஜூஸ் குடிக்கிறியா என்று கொண்டு வந்து கொடுத்தாள் தீபா. எதுக்கு இதெல்லாம் அனன்யா . நீ அப்புறம் ஹோட்டல் சாப்பாடு தான் சாப்பிட போற . இன்னைக்கு ஒரு நாள் தானே .. சரி என்றான். அனன்யாவும், தீபாவும் கிச்சன் உள்ளே போனார்கள் . இவன் டிவி பார்த்து கொண்டிருந்தான்.

அனன்யா சமைத்து விட்டேன் வா சாப்பிடலாம் என்றாள். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்றான். தீபா உனக்கு பசித்தால் சாப்பிடு என்று சொன்னாள். இல்ல நானும் இவனோட சேர்ந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னாள். இன்னும் சில லேப்டாப் சந்தேகங்களை கேட்டாள் தீபா. இன்னுமா உனக்கு சந்தேகம் வருது. என்னவோ எனக்கு சில விஷயம் புரியவே மாட்டேங்குது . அது சரி என்றான். மத்த விஷயமெல்லாம் உடனே புரியுது, டேய் விஷால் சும்மா கிண்டல் பண்ணாதே..என்றாள் அனன்யா. தீபா பெயிண்டிங் வரைஞ்சு தறேன்னு சொன்னியெ . இன்னைக்கு நைட் வரிங்களா . அனன்யாவை பார்த்தான். சரி வரோம் என்றாள். சாப்பாடு நல்லா இருக்கு என்றான். அனன்யாவும், தீபாவும் பாத்திரங்களை கழுவி வைத்தனர். இவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

அனன்யா , தீபா இருவரும் பெருமூச்சுடன் அனன்யா அறைக்கு சென்றனர். அனன்யா, அனன்யா என்று கூப்பிட்டான் நான் கிளம்பட்டுமா கொஞ்சம் வேலை இருக்கு . சரி விஷால். தீபா எங்கே அவ அப்போவே போயிட்டா. நைட் மீட் பண்ணுவோம் என்றாள். சரி.
தீபா இருவரையும் சேர்ந்து உட்காருமாறு சொன்னாள். பெயிண்டிங் வரைய தயார் ஆனாள். இவன் அனன்யா தொடையில் கை வைத்தான். தொடையில் இல்லை, தோள் மேலே கை போடு . சரி அரைமணி நேரத்தில் வரைந்து கொடுத்து விட்டாள். சூப்பர் தீபா என்று பாராட்டினான். இதை என் வீட்டில் வைத்து கொள்கிறேன் என்றாள் அனன்யா.இன்னைக்கு ஸ்டடி உண்டா என்று கேட்டாள். கட்டாயம் உண்டு. இவன் ஊருக்கு போற வரை கட்டாயம் உண்டு. இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இவன் எதையோ புரட்டிக்கொண்டிருப்பதை பார்த்ததும் என்னாச்சு என்றாள் அனன்யா. ஒண்ணும் இல்லை என்னவோ மிஸ் பண்ணுகிறேன் . ம்ம் அதெல்லாம் இருக்காது நீ படி .தீபாவும், அனன்யாவும் சீரியஸ் ஆக படித்து கொண்டிருந்தனர். சுபா ஃபோன் செய்தாள். என்ன பண்ணுற விஷால். இப்போதான் புத்தகத்தை எடுத்தேன். சரி விஷால் இன்னும் ரெண்டு நாளில் வந்து விடுவேன் என்றாள்.சென்னைக்கு போய் எப்படி இவர்கள் மூவரையும் விட்டு இருக்கபோகிறோம் என்று கவலையாய் இருந்தது.

சுபா வந்துவிட்டாள். விஷாலுக்கு ஃபோன் செய்தாள வீட்டுக்கு வா என்றாள். இன்னும் அரை மணி நேரத்திலே அங்கு இருப்பேன் என்றான்.சாயங்காலம் இவன் சென்னைக்கு 11 மணி டிரைன் புக் செய்திருந்தான். சுபா வீட்டுக்கு போன போது அனன்யாவும், தீபாவும் அங்கு ஏற்கனவே வந்திருந்தனர். மூவரும் சேர்ந்து டிபன் சாப்பிட்டனர். எப்படி இருக்கே சுபா என்றான் . என்னவோ இருக்கேன். நான் என் ப்ராஜக்ட் சென்னைல பண்ண ட்ரை பண்ணுறேன்டா என்றாள் சுபா. அதெல்லாம் ரொம்ப கஷ்டம். உன்னை விட்டு இருக்குறதுதான் கஷ்டம் என்றாள் சுபா. மூவரும் மாடிக்கு போனார்கள். சரி எங்கேயாவது வெளியே போகலாமா ? பீச் போலாம் என்று சொன்னார்கள் அனன்யாவும் , தீபாவும். சரி நாங்க வீட்டுக்கு போய்ட்டு அரை மணி நேரத்துல வரோம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க என்றாள் அனன்யா. என்ன பண்ண போறீங்க நல்லா டிரஸ் பண்ணிட்டு வரோம் என்றார்கள். சுபா நீ அவசியம் போகனுமாடா . இப்படியே பேசிக்கிட்டு இருங்க .. நான் போறேன் என்றான். சாரி சாரி இன்னைக்கு ஒரு நாள் தானே இருக்க ஜாலி யா ஏதாவது பேசு சுபா என்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். என்ன பாக்குற ? அவளை நெருங்கி இடையை வளைத்து பிடித்தான். ரொம்ப மெலிஞ்சு போயிட்டே சுபா என்றான். அப்படியா ? அவளை அணைத்து முத்தமிட்டான். போதும் விஷால் . என்ன அதுக்குள்ள போதும்னு சொல்லற ? நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்டா விஷால்.


மூவரும் பீச் போனார்கள். அனன்யா வழக்கம் போல எல்லோர் மேலேயும் தண்ணீரை வாரி இறைத்தாள் . அனன்யாவை ஓடி பிடிக்க முடியாமல் தினறினான் விஷால். சுபா அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். வா சுபா நீயும் என்றான். தீபா சுபாவின் கையை பிடித்து இழுத்தாள். நான்கு பேரும் நனைந்து விட்டார்கள்.
இப்போதான் நீ இன்னும் அழகா இருக்கே அனன்யா . நீதான் அழ வச்சிட்டு ஊருக்கு போறியே என்றாள். இதோ வரேன் என்று அவள் இடையை பிடித்து இழுத்து சேர்த்து கொண்டான். அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். சுபா அவன் கையை பிடித்து கொண்டாள். தீபா சற்று தள்ளி கடலுக்குள் போய் நின்றாள். நீயும் வா விஷால் என்றாள் . உனக்கு ரொம்ப தைரியம் தான் என்றான். விஷால் தீபாவுடைய பின்புறத்தை செல்லமாக தட்டினான். அவளை கெட்டியாக பிடித்து கொண்டான் . விஷால் பாத்து என்றாள். இருவரும் பெரிய அலையில் மாட்டி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தார்கள். இவன் அவள் மார்பில் தலை மோத சாரி தீபா என்றான். அவள் அவனை இழுத்து பிடித்து நெஞ்சோடு சேர்த்தாள் . ஐ லவ் யு விஷால் என்றாள். போதும் நீங்க விளையாண்டது வாங்க என்றாள் அனன்யா. எல்லோரும் உடைகளை பிழிந்து கொண்டனர். அனன்யா இவன் தலையை டவல் கொண்டு துவட்டி விட்டாள். நல்ல வேலை டவல் கொண்டு வந்தே என்றான் விஷால்.

வீட்டுக்கு போய் சாப்பிடலாம் என்றாள் அனன்யா .சரி . உனக்கு பசிக்குதா விஷால்? இல்லை . அவள் மறுபடி அவன் தலையை தொட்டு பார்த்தாள். மூவரும் வீட்டுக்கு போய் உடை மாற்றிக்கொண்டனர். பீச்சில் சுபா போட்டோ எடுத்திருந்தாள் . அதை தீபா ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.மணி 12 ஆகி இருந்தது. நான் வீடு வரைக்கும் போய் வருகிறேன் என்றான். எதுக்கு அதெல்லாம் வேண்டாம் என்றனர். கொஞ்சம் துணி ஐயன் பண்ணனும் என்றான். சரி கொஞ்ச நேரம் கழிச்சு நாம எல்லோருமே போவோம் என்றாள் தீபா. ஐயன் பண்ண நாலு பேரா? அதெல்லாம் அப்படித்தான் என்றாள் சுபா. மதியம் லஞ்ச் சிறப்பாக இருந்தது . சரி வாங்க போவோம் என் வீட்டுக்கு. இரு போகலாம். கொஞ்ச நேரம் தூங்கிட்டு போலாம் .நீங்க 3 பேருமே தூங்கி ரொம்ப நாளாச்சு . சரி ரெஸ்ட் எடுப்போம். அனன்யா எப்பவும் போல இவன் மேலே படுத்துக்கொண்டாள். விஷால்?? என்ன அனன்யா. டெய்லி ஃபோன்பண்ணுவியா . நிச்சயமா.சுபா மடியில் தலை வைத்திருந்தான்.
தீபா டிவி பார்த்து கொண்டிருந்தாள். நீ போன உடனே எனக்கு அட்ரஸ் மெசேஜ் பண்ணு . சரி சுபா. நான் வந்து பார்ப்பேன் என்றாள் சுபா.ஒழுங்கா சாப்பிடணும் என்றாள் தீபா. அனன்யாவின் பின்புறத்தை அழுத்தி பிடித்தான் விஷால். என்ன பண்ணுறே விஷால்.. நல்லா பிடி விஷால் நான் கீழே விழுந்து விடுவேன். அனன்யா அடுத்த வருஷம் நாங்களும் வேலைக்காக சென்னை வந்து விடுவோம் என்றாள். உங்க வீட்டுல விடுவாங்களா . அதெல்லாம் தெரியாது நாங்க வந்து உன் கூட இருப்போம் . அனன்யா தூங்கி போனாள். சுபா அவளை எழுப்பி படுக்கை அறைக்கு அழைத்து சென்று தூங்க வைத்தாள்.


நால்வரும் விஷால் வீட்டுக்கு போனார்கள். நான் ஐயன் பண்ணுறேன் என்றாள் தீபா. சுபா அவனுடைய திங்க்ஸ் எல்லவற்றையும் பேக் செய்ய உதவினாள் . டிக்கெட் எல்லாம் மறக்காம எடுத்துக்கோ விஷால் . டிக்கெட் print அவுட் எடுக்கணுமே , நானும் வரேன் விஷால் என்றாள் அனன்யா.ரொம்ப வெயிலா இருக்கு பரவாயில்ல. சரி உன் இஷ்டம். print out எடுத்தார்கள். ஐஸ் கிரீம் சாப்பிடலாமா ? சரி வா .தீபாவுக்கும், சுபாவுக்கும் ஐஸ் கிரீம் வாங்கி கொண்டார்கள்.தீபா neat ஆக அயன் பண்ணி தந்திருந்தாள் . தாங்க்ஸ் தீபா. ஐஸ் கிரீம் குடுத்தான்.அப்புறம் என்ன 11 மணிக்குதானே டிரைன். மணி 4 தானே ஆகிறது. கோவிலுக்கு போகலாம் என்றார்கள். அனன்யா , சுபா , தீபா மூவரும் பயபக்தியாக கும்பிட்டார்கள். இவனை பாதியிலேயே திருப்பி அனுப்பிடு கடவுளே என்றாள் அனன்யா. அவள் காதை பிடித்து செல்லமாக திருகினான். இவனுக்கு குங்குமமும் திருநீரும் வைத்து விட்டார்கள். நான் என்னமோ போருக்கு போற மாதிரி இங்க இருக்குற சென்னைக்கு தானே போறேன் என்றான். சரி அனன்யா வீட்டுக்கு போவோமா? அவள் வீட்டில் போய் டீ சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவோம் என்றான்.அனன்யா சரி வா போகலாம் என்றாள்.கொஞ்ச நேரம் கழித்து டீ போடலாம் . உன் வீட்டையும் உன் பாட்டையும் மறக்கவே முடியாது பாட்டு பாடு அனன்யா என்றான். சோகபாட்டு பாடாதே என்றான். அவள் ஒரு அருமையான பாடலை பாடினாள். நீ அந்த நீல கலர் சுடிதார் போட்டு வா என்றான். அவள் போய் மாற்றிகொண்டு வந்தாள்.

டிவியில் ஏதோ ஓடி கொண்டிருந்தது . சுபா முகம் நேரத்தை பார்க்கும் போதெல்லாம் வாடி கொண்டிருந்தது. சுபா ?சுபா? அவள் எழுந்து அருகில் வந்தாள்.இழுத்து அருகில் அமர வைத்தான்.தீபாவும் ,அனன்யாவும் டீ போட்டனர். சுபாவுக்கு குடு முதலில் என்றான். அவள் வாங்கி பாதி குடித்து விட்டு இவனுக்கு குடுத்தாள். மறுபடி அதை வாங்கி குடித்தாள்.ம்ம் என்றாள் அனன்யா. அனன்யா எனக்கு ஒரு டவல் வேணுமே .. புதுசு வாங்கி தரவா. உன்னோடதே ஒண்ணு குடுத்தா என்ன என்றான். முன்னாடியே சொன்னா துவைத்து வைத்திருப்பேன் இல்ல . பரவாயில்லை உன்னோடது நல்லாதான் இருக்கும் என்றான். சரி மடித்து தருகிறேன் என்றாள்.