Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 15

அந்த வாரம் வகுப்புகள் ஸ்வாரஸ்யமாக போனது. சுபா வர இன்னும் சில நாட்களே இருந்தன . அனன்யா இவனிடம் அதிகம் பேசுவதில்லை என்ற போதும் உற்சாகமாக இருந்தாள். தீபா இவனுக்கு ஃபோன் பண்ணினாள் . என்ன விஷயம் தீபா ஒரு டான்ஸ் competition வருது . நீயும் நானும் கலந்துக்கலாமா இல்லை தீபா அது வந்து நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நான் அனன்யா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் . ஓகே விஷால். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். அவ எனக்கும் ஃபோன் பண்ணினா நீ போய் கலந்துக்க. சரி அனன்யா. இன்னும் ஒரு வாரமே இருந்ததால் டான்ஸ் பிராக்டிஸ் பண்ண வேண்டும் நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்றாள் தீபா. சரி வா என்றான் விஷால்.

அவள் ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிகொண்டு வந்திருந்தாள் . காப்பி குடிக்கிறியா தீபா .. சரி விஷால். உன்னுடைய room neat ஆக உள்ளது விஷால் . இருவரும் ஒரு சில பாட்டுக்கு சேர்ந்தும், பிரிந்தும் ஆடினார்கள்.இன்னைக்கு இது போதும் தீபா, நாளைக்கு பார்க்கலாம் என்றான். ஓகே விஷால் பை. சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் எப்படி போகுது டான்ஸ் பிராக்டிஸ் .. ஏதோ போகுது.. அவ எப்படி ஆடுறா எனக்கு வீடியோ அனுப்பு, நான் பார்த்துட்டு சொல்லுறேன் . ஓகே சுபா.
மறுநாள் தீபா வரவில்லை . அவளுக்கு ஃபோன் செய்தான் கொஞ்சம் ஜுரமா இருக்கு .. அதான் வரலை டாக்டர் கிட்ட போனியா இல்லை வீட்டுல யாரும் இல்லை . சரி நான் வரேன் இல்ல அனன்யாவை அனுப்புறேன் . இல்லை பரவாயில்லை விஷால். இவன் அனன்யாவுக்கு ஃபோன் செய்தான் . ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது . தீபா வீட்டுக்கு போனான். ஆட்டோ ல போகலாமா என்று கேட்டான். சரி என்றாள். டாக்டர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய் விடும் . injection போட்டிருக்கேன் என்றார்.தீபா இவன் தோளில் சாய்ந்து கொண்டாள். சாரி விஷால் உன்னை ரொம்ப தொந்தரவு பண்றேன் . அதெல்லாம் பரவாயில்லை . நீ எப்படி தனியா இருப்ப? அவன் மறுபடி அனன்யா வுக்கு ஃபோன் செய்தான். என்னாச்சு விஷால் ஃபோன் ல சார்ஜ் இல்ல என்றாள்.விஷயத்தை சொன்னதும் நான் உடனே வரேன் என்றாள்.

அனன்யா தீபா இன்னைக்கு நைட்டு நாங்க இங்கேயே இருக்கோம் . நீ கவலைபடாதே என்றாள். இல்ல நான் சமாளித்து கொள்வேன் . அனன்யா நீ வேணும்னா போ விஷால் நான் பார்த்து கொள்கிறேன் . இல்ல அனன்யா நான் இருக்கிறேன் ஏதாவது எமர்ஜென்ஸி என்றாள் என்ன செய்வது ? ஓகே விஷால். தீபா கொஞ்ச நேரதில் உறங்கி போனாள். அவளுக்கு மூணு மணி நேரத்துக்கு ஒரு முறை மருந்து கொடுக்க வேண்டி இருந்தது . நீ தூங்கு அனன்யா நான் விழித்திருக்கிறேன் என்றான்.
அதெல்லாம் பரவாயில்லை . லேப்டாப் கொண்டு வந்திருந்தாள் அதில் ஏதோ பாட்டை போட்டு கேட்டு கொண்டிருந்தாள் . அப்படியே உறங்கி போய்விட்டாள். இவன் போய் தீபாவை எழுப்பினான். இப்போ ஜுரம் எப்படி இருக்கு என்று தொட்டு பார்த்தான். இந்த மருந்தை குடி என்று கொடுத்தான். அனன்யா அதற்குள் வந்து விட்டாள்.

நாளைக்கு லீவு சொல்லி விடலாமா அனன்யா ? சரி விஷால். நீ ஒண்ணும் கவலைபடாதே தீபா நாங்க இருக்கோம். அவள் மறுபடியும் உறக்கத்துக்கு போனாள். அனன்யா காப்பி போட்டு பிளாஸ்க் ஒன்றில் நிறப்பி வைத்தாள்.நீ ரொம்ப பாசமா இருக்கே அவ மேல என்றாள் அனன்யா. விடிந்து விட்டது. தீபாவுக்கு ஜுரம் ஓரளவு குறைந்து இருந்தது .அனன்யா நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன். நான் வந்ததும் நீ உன் வீட்டுக்கு போகலாம் என்றான். சரி விஷால். தீபா எழுந்ததும் எங்கே விஷால் என்று கேட்டாள். வீட்டுக்கு போயிருக்கான் இப்ப வந்துடுவான் என்றாள். நீ படுத்துக்க தீபா .. உனக்கு ரெஸ்ட் தேவை என்றாள்.விஷால் வந்ததும் தீபா எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டாள்.நைட் நீங்க சாப்பிடலை தானே இருங்க நான் போய் ஏதாவது பண்ணி எடுத்துட்டு வரேன் என்று சமயலறைக்குள் நுழைந்தாள். அதெல்லாம் ஒண்ணும் வேணாம் என்பதற்குள் மயங்கி விழுந்தாள் தீபா.
அவளை தோளில் சாய்த்துக்கொண்டு அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான் . அவள் அழுதாள் . எனக்கு யாருமே இல்லை விஷால் என்றவாறே அழுதாள். அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்.
அவளை சமாதானபடுத்தி படுக்கையில் விட்டான்.

அனன்யா டிபன் கொண்டு வந்திருந்தாள். மூவரும் சாப்பிட்டனர். நாம டாக்டர் கிட்ட போவோமா தீபா? வேண்டாம் விஷால் எனக்கு ஒண்ணும் இல்ல .. மயங்கி விழுந்துட்டா கொஞ்ச நேரம் முன்னாடி என்றான் விஷால். ஓ.. நல்ல வேளை நான் பக்கத்துல இருந்தேன். அனன்யா தீபா உடை மாற்ற உதவி செய்தாள். இவன் போய் பிரட் , பழம் எல்லாம் வாங்கி வந்தான். சுபாவிடம் இருந்து ஃபோன் வந்தது அவள் தீபாவிடம் பேசினாள் . நீ ரொம்ப நல்லா ஆடுறே தீபா நான் அந்த வீடியோ வை பார்த்தேன் . நீங்கதான் ஜெயிப்பீங்க . நீ உடம்பை பார்த்துக்க என்றாள்.அனன்யா நான் கொஞ்சம் கம்ப்யூட்டர் கிளாஸ் வரை போயிட்டு வந்து விடுகிறேன் என்றாள். தீபா விஷால் என்று கூப்பிட்டாள். என் பக்கத்துலேயே இரு விஷால். சரி தீபா . அவளுடைய கையை பிடித்து கொண்டான்.வேற யாரும் இப்படி ஹெல்ப் பண்ண மாட்டாங்க விஷால் என்றாள். நீ ரெஸ்ட் எடு நான் இங்கேயே இருக்கிறேன் என்றான்.

அனன்யா வந்து விட்டாள். நான் ஏதாவது சமைக்கிறேன். விஷால் நீ இதெல்லாம் வாங்கிட்டு வா என்றாள். சரி அனன்யா. கடைக்கு போய் அவள் சொன்னதையெல்லாம் வாங்கி வந்தான். அனன்யா உனக்கு ரொம்ப நல்ல மனசு. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அப்படி சொல்லக்கூடாது என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.சமைத்து முடித்ததும் தீபாவை அழைத்து வந்தான் விஷால். இப்போ எப்படி இருக்கு ? பரவாயில்லை . ஜுரம் முழுமையாக விட்டிருந்தது . இனி நீ இஷ்டபடி டான்ஸ் ஆடலாம் என்றான் விஷால். மூவரும் சாப்பிட்டனர்.
நான் மாடிக்கு போகிறேன் என்றாள் தீபா . சரி கொஞ்சம் காத்து வாங்கட்டும் என்றான் . அனன்யா நீ அந்த வீடியோ பார்த்தியா ? பார்த்தேன் நல்லாதான் ஆடி இருக்கீங்க ரெண்டு பேரும்.
அன்று மாலை தீபா அம்மா வெளியூரில் இருந்து வந்து விட்டாள். இவர்களுக்கு நன்றி சொன்னாள். தீபா ஏதாவது தேவை என்றால் ஃபோன் பண்ணு என்றான்.

மறுநாள் காலேஜ் வந்து விட்டாள் தீபா . என்ன எப்படி இருக்குற என்றான் விஷால். நல்லா இருக்கிறேன் இதுல சில பாட்டு இருக்கு உனக்கு பிடிச்சு இருந்தா இந்த பாட்டுல ஏதாவது ஒரு பாட்டுக்கு ஆடலாம் என்றாள். இப்போ இது தேவையா தீபா . கண்டிப்பா வேணும் நீ டிசைட் பண்ணிட்டு நைட் எனக்கு ஃபோன் பண்ணு என்றாள். நான் உனக்காக வெயிட் பண்ணுவேன். இன்னைக்கு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவோம் என் வீட்டுல.நேற்று ஜுரம் வந்தவள் மாதிரியே தெரியவில்லை . நிதானமாக ஆடினாள் .தீபா உன்னோட டான்ஸ் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . தாங்க்ஸ் விஷால்.
என்ன நேத்து நைட் டான்ஸ் பிராக்டிஸ் போயிருந்தியா என்றாள் அனன்யா . ஆமாம் அவ என்னமா ஆடுறா என்றான்.அவள் மையமாக சிரித்தாள்.

சுபா எக்ஸாம் முடிந்து வந்து விட்டாள். 10 நாட்கள் விடுமுறையில் வந்திருந்தாள். நானும் நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் பண்ணுறத பாக்க வரேன் என்றாள். அவளும் ஆடி காண்பித்தாள் . பிராக்டிஸ் முடிந்ததும் சுபாவை வீட்டில் விட்டான் விஷால் . எப்படியாவது கஷ்டப்பட்டு அவளை லவ் பண்ணுடா விஷால் . யாரை அந்த தீபாவைதான்,பாவமா இருக்கு.அதெல்லாம் ஒண்ணும் வேணாம் . சரி உள்ள வா என்றாள்.
ஏண்டா அவளை வேணாம்னு சொல்லுற . இப்போ இருக்கிற நிலமைல இதெல்லாம் தேவையா ? என்றான்.நாளைக்கு ஈவினிங் நான் , நீ , அனன்யா எல்லாரும் வெளியே போறோம் . எங்க? கொஞ்சம் ஷாப்பிங் . சரி சுபா.

மாலை மூன்று மணிக்கே காலேஜ் விட்டு கிளம்பி விட்டார்கள் அனன்யாவும், விஷாலும் .சுபாவுக்கு ஃபோன் செய்தான் நம்ம கூட தீபாவும் வருகிறாளாம் என்றாள். சரி வரட்டும் என்றான் விஷால். விஷாலும் அனன்யாவும் ஒரு வண்டியிலும் , சுபாவும் தீபாவும் இன்னொரு வண்டியிலும் வந்தனர். சுபா டான்ஸ் competition கலந்து கொள்ள நல்ல உடைகள் வேண்டும் என்றாள்.தீபாவும், சுபாவும் ஆடைகள் செலக்ட் செய்தனர்.தீபா விஷாலுக்கு ஒரு ஷர்ட் எடுத்தாள் . உனக்கு பிடிக்கிருக்கா ? எனக்கு ஓகே என்றான். தீபா வீட்டில் கெஸ்ட் வந்து இருந்ததால் அன்று பிராக்டிஸ் போகவில்லை விஷால்.சுபாவும் இவனும் ரொம்ப நாட்கள் கழித்து டான்ஸ் ஆடினர். சூப்பர் சுபா என்றான். சுபாவின் டான்ஸ் திறமை இவனை வியக்க செய்தது . சரி சாப்பிட்டு விட்டு போலாம் விஷால் என்றாள்.

சுபாவே ஏதோ ஒன்றை சமைத்திருந்தாள் .நல்லா இருக்கு சுபா என்றான். நான் தூங்குகிற வரை இரு விஷால் என்றாள். சரி சுபா. அவள் போய் நைட்டி மாற்றி கொண்டு வந்தாள் . இவனும் அவளும் சிறிது நேரம் டிவி பார்த்தனர். சுபா இவன் மடியில் படுத்தாள் . அவளை தட்டி கொடுத்தவாரே இருந்தான். அவள் எழுந்து தூக்கம் வரல என்றாள். மாடிக்கு போலாமா நீ சேட்டை பண்ணுவ .. பண்ண மாட்டேன் . மாடிக்கு வந்ததும் விஷால் ஹாஸ்டல் ரொம்ப போர் என்றாள். ம் எல்லாம் கொஞ்ச நாளைக்குதானே.. இங்க ரொம்ப நல்லா காத்து அடிக்குது .அப்போது தீபாவிடம் இருந்து ஃபோன் வந்தது . தம்பி நான் தீபா அம்மாபேசுறேன் . தீபா மறுபடி மயக்கம் போட்டு விழுந்துட்டா . இப்போதான் ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கோம் . உங்களை பார்க்கணும்னு சொல்லுறா கொஞ்சம் வாங்களேன் . இவன் சுபாவிடம் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் விரைந்தான்.

இவனை பார்த்ததும் எங்க போன விஷால் என்றாள் தீபா . இங்க பக்கத்துல தான் இருக்கேன் . டாக்டர் அவங்க ரொம்ப depressed ஆக இருக்காங்க. நீங்கதான் பக்கத்துல இருந்து பாத்துக்கணும் என்றார். ஒண்ணும் இல்லை தீபா எல்லாம் சரியாகி விடும் என்றான். வெளியில் ரிசப்ஷன் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தான். சுபாவுக்கும், அனன்யாவுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி காலையில் வந்தாள் போதுமென்று சொன்னான். தீபா மயக்க நிலையில் இருந்தாள்.
சுபாவும், அனன்யாவும் வந்து பார்த்து போனார்கள்.

இரண்டு நாட்கள் கழித்துதான் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.தீபாவை வீட்டில் விட்டு விட்டு வீட்டுக்கு போனான். குளித்து உடை மாற்றி விட்டு தீபா வீட்டுக்கு போனான். அங்கே சுபாவும் இருந்தாள். தீபா இப்போ எப்படி இருக்கிறாய் எங்களையெல்லாம் பயமுறுத்தி விட்டாயே என்றான் விஷால் .எனக்கு ஒண்ணும் இல்லை.சுபா நீ ஒரு நிமிஷம் வெளியே வா விஷால் என்றாள். இவ்வளவுக்கு பிறகும் நீ அவளை கைவிடுவது நல்லா இல்லை விஷால் என்றாள். சுபா என் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லை. நான் அனன்யாகிட்ட பேசிட்டேன் . நீ நல்ல முடிவா சொல்லு விஷால் . நான் வீட்டுக்கு போறேன் என கிளம்பி விட்டாள்.

தீபாவை பார்க்க மிகுந்த சிரமமாய் இருந்தது . தீபா அவனை சைகையால் கூப்பிட்டாள். இவன் அருகே போய் கையை பிடித்து கொண்டான். என்னை விட்டு போகாதே விஷால் என்றாள். விஷாலுடைய கையை பிடித்து அவள் நெஞ்சின் மீது வைத்து கொண்டாள். இவன் மௌனமாக அமர்ந்திருந்தான். அவள் மயக்க நிலைக்கு போனாள். சிறிது நேரத்தில் அவள் அம்மா வந்து கடைக்கு போயிட்டு வரேன் தம்பி கொஞ்சம் பார்த்துக்க என்றாள். தீபா எழுந்து தண்ணீர் வேண்டுமென்று சொன்னாள் . இவன் போய் எடுத்து வந்து கொடுத்தான். மெதுவாக குடிக்க வைத்தான். உடனே படுக்க வேண்டாம் என்றான். நான் கொஞ்சம் நடக்கிறேன் என்றாள். அவளை தாங்கி பிடித்தான்.அவளுடைய உடை நழுவுகிற மாதிரி இருந்தது . அதை இழுத்து பிடித்தான். அவள் அவனை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்டாள்.ஐ லவ் யு விஷால் என்றாள். விஷால் திகைத்து போய் நின்றான்.