Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 24

ஒரு வழியாக சுபாவை சமாதானப்படுத்தி விட்டு ரூமுக்கு வந்தான் விஷால். சுபாவுக்காக அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது. இப்போது அவனுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது மறுபடியும் சுபாவுக்கு போன் பண்ணினான் சுபா சாப்பிட்டியா என்றான். இல்லை சுபா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்றான். தயவு செஞ்சு சாப்பிட்டு படுத்துக்கோ என்றான். சரி விஷால், நாளைக்கு போன் பண்றேன்.அனன்யாவுக்கு போன் பண்ணி சுபாவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுமாறு சொன்னான். நீ கவலைப்படாத விஷால் நான் பேசுறேன்

அன்றைய தின வேலைகளில் மூழ்கினான்.இரவு 8 மணி போல சுபா ஃபோன் செய்தாள். என்ன விஷால் பண்ற என்றாள். கொஞ்சம் வேலையா இருக்கேன் பத்து மணிக்கு பிறகு கூப்பிடட்டுமா என்றான் சரி விஷால். பத்து மணிக்கு போன் செய்தான் சொல்லு சுபா போன் பண்ணி இருந்தாயே நான் ஊருக்கு போயிட்டு அம்மாவை பார்த்து பேசிட்டு வரேன் ரெண்டு நாள் ஆகும் வர என்றாள். சரி சுபா பாசிட்டிவ்வா இரு என்றான். ஊருக்கு போய் விட்டு போன் பண்ணு. ஓகே விஷால்.

சுபா போன் பண்ணி அனன்யாவையும்.தீபாவையும் வீட்டுக்கு கூப்பிட்டாள் . இருவரும் போய் பார்த்தனர். என்ன சுபா இப்படி கவலைப்படுகிறாய் நீ கவலைப்படுகிற மாதிரி ஒன்னும் நடக்கல என்றாள் அனன்யா. அனன்யா சுபா அம்மாவிடம் பேசினாள் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் அவங்க அப்பா ஒத்துக்கணுமே. ஒரு ஆறு மாசம் டைம் வாங்கி கொடுங்க ஆன்ட்டி அதுக்குள்ள அவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிடும் .அப்புறம் எல்லாம் மாறிடும் என்றாள் அனன்யா. அம்மா ப்ளீஸ் இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுமா என்றாள் சுபா .சரி நிச்சயம் முயற்சி பண்ணுகிறேன் ஆனால் அதுக்கு மேல தள்ளி போட முடியாது என்றாள் சுபா .அம்மா இது போதும் ஆன்ட்டி எப்படியும் விஷால் முன்னுக்கு வந்துருவான் என்றாள் தீபா.

சுபாவுக்கு போன் செய்தான் விஷால் என்ன ஆச்சு சுபா போனே பண்ணல அதெல்லாம் இல்ல விஷால், எங்க அம்மா கூட பேசிட்டு இருந்தேன் அவங்க என்ன சொல்றாங்க? எப்படியாவது ஒரு ஆறு மாசம் டைம் கேட்டு இருக்கேன். அவங்களும் அப்பாகிட்ட பேசி டைம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காங்க.. அதுக்குள்ள நாம ஏதாவது செய்யணும் விஷால். சரி சுபா . நீ சென்னை வந்ததும் கால் பண்ணு.. ஓகே விஷால்

சுபா சென்னை வந்து விட்டாள். சுபா பிரண்டோட பர்த்டே பார்ட்டி இருக்கு ஈவினிங் வர முடியுமா என மெசேஜ் பண்ணி இருந்தாள். பர்த்டே பார்ட்டி ஒரு சிறிய பார்ட்டி ஹாலில் arrange செய்யப்பட்டிருந்தது. இவன் ஏழு மணி போல கிளம்பி சென்றான் சுபா வாசலில் நின்றாள். வா விஷால் விஷாலை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். பிறகு கேக் வெட்டி கொண்டாடினார்கள். ரூமுக்கு போயிட்டு போகலாம் விஷால் என்றாள் சுபா.

மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள் . அம்மா எப்படி இருக்காங்க? நல்லா இருக்காங்க. தீபாவும் அனன்யாவும் எப்படி இருக்காங்க? நல்லா இருக்காங்க..இருவரும் ரூமுக்கு போனார்கள் அனன்யா இந்த புது டவலை கொடுத்தாள். தீபா ஸ்வீட் செய்து கொடுத்து அனுப்பி இருந்தாள். சுபா எல்லாரும் பார்ட்டிக்கு போயிட்டு காலையில் தான் வருவாங்க.. நீ இங்கே இரு விஷால்.. உனக்கு ஒன்னும் பிரச்சனை வராதுல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று லேப்டாப் எடுத்து வந்து தந்தாள் இதுல ஏதாவது படம் பாக்குறதுன்னா பாரு நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் என்றாள்.தீபா குடுத்து அனுப்பிய ஸ்வீட் இருவரும் சாப்பிட்டனர். சுபா ப்ராஜக்ட் எந்த ஸ்டேஜ் ல இருக்கு விஷால் என்றாள். இப்போதான் ஆரம்பித்து இருக்கோம். பணத்துக்கு ஏற்பாடு பண்ணனும் . அடுத்த வாரம் பண்ணிடுவேன் என்றான். அவன் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள்.

விஷால் காலையிலேயே கிளம்புவதற்கு தயார் ஆனான். இரு coffee குடிச்சிட்டு போ என்றாள். coffee போட்டு தந்தாள் சுபா.சாயங்காலம் ஃபோன் பண்ணுகிறேன் என்றாள்.விஷாலுக்கு நிறைய வேலை இருந்தது . மதியம் அனன்யா ஃபோன் செய்தாள். நேத்து சுபாவை பார்த்தேன் அவ இன்னும் அப்படியேதான் இருக்கா என்றான். நான் சுபா அப்பாவிடம் போனில் பேசினேன். என்ன சொன்னாரு யோசிச்சு சொல்லுறேன் அப்படின்னு சொன்னாரு. தாங்க்ஸ் அனன்யா . தீபா என்ன பண்ணுகிறாள். பெயிண்டிங் பண்ணி கொண்டு இருக்கிறாள். நானும் அவ கிட்ட பெயிண்டிங் கத்துக்கலாம்னு இருக்கேன். நல்லது அனன்யா . விஷாலுக்கு ஒரு நாளும் அவர்கள் இல்லாமல் பொழுது ஓடாது.

அனன்யா அவள் வரைந்த சில பெயிண்டிங் போட்டோக்களை அனுப்பி இருந்தாள். நல்லா வந்திருக்கு என்று மெசேஜ் பண்ணினான். எப்படியோ ப்ராஜக்ட் பணத்தை ஏற்பாடு பண்ணி விட்டான். இல்லையென்றால் சுபாவிடம் கேட்கும்படி இருந்திருக்கும். சென்னை வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஊருக்கு போய் வந்தால் தேவலை என்று நினைத்தான். ஆனால் ப்ராஜக்ட் யார் பார்ப்பது ? அனன்யா மகாபலிபுரம் போன போட்டோக்களை பகிர்ந்து கொண்டிருந்தாள்.அதில் தீபாவும் இவனும் நல்ல நெருக்கத்தில் இருந்தனர். சுபாவும் ,அனன்யாவும் தீபாவை கிண்டல் செய்து மெசேஜ் போட்டிருந்தனர்.தீபா விஷாலுக்கு ஃபோன் செய்தாள் இப்ப என்ன நடந்துச்சு நான் உன் கூடத்தானே நெருக்கமா இருக்கேன் இதுல என்ன கிண்டல் பண்ண இருக்கு என்றாள்.தீபா அவங்க சும்மா விளையாட்டுக்கு பண்ணுகிறார்கள் . நான் அடுத்த வாரம் சென்னை வர போறேன் அம்மாவோடு என்றாள். எதுக்கு ? உன்னை பாக்க அதோடு எனக்கு டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் அம்மா வாங்கி இருக்காங்க . சரி நான் சுபா ரூம் ல தான் இருப்பேன் வந்ததும் உனக்கு கால் பண்ணுறேன் என்றாள்.

நாட்கள் ஓடின. தீபா அவள் அம்மாவோடு சென்னை வந்து சேர்ந்து விட்டதாய் சுபா சொன்னாள். அவர்கள் இரண்டு நாட்கள் சென்னையில் இருப்பார்கள் என்று சுபா சொன்னாள். இன்று டாக்டர் பாக்க போகிறார்கள் நீயும் போகிறாயா சுபா என்றான். ஆமாம் என்றாள். நான் சாயங்காலம் வந்து பார்க்கிறேன் என்றான் விஷால். தீபா டாக்டர் என்ன சொன்னாங்க உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ண சொன்னாங்க. விளையாடாதே தீபா. ஸ்கேன் , எக்ஸ்ரே எல்லாம் எடுத்துட்டு நாளைக்கு திரும்ப வர சொல்லி இருக்காங்க.சரி . பீச்சுக்கு போலாம் என்று ஆசையாக கூப்பிட்டாள். சுபாவும் வந்தாள். நான் ஒரு புளூ கலர் நைட்டி வாங்கினேன் என்றாள் தீபா. கடல் அலையில் சிறு பிள்ளை போல விளையாண்டாள் தீபா. நாளைக்கும் வருவோம் என்றாள்.டிரஸ் எப்படி நனைஞ்சு போச்சு பாரு என்றான். அதெல்லாம் காய்ந்து விடும் என்றாள்.

மறுநாள் தீபாவும் சுபாவும் டாக்டரை பார்த்துவிட்டு வந்தார்கள். ஒண்ணும் பிரச்சனை இல்லை. இப்போதான் நிம்மதியா இருக்கு என்றான் விஷால். சுபா வேலை இருந்ததால் பீச்சுக்கு வரவில்லை. தீபா இவனை நெருங்கி வந்தாள். அனன்யா என்ன சொன்னா? அவ சார்பா நாலு அடியும், 3 கிஸ்ஸும் கொடுக்க சொன்னா.வேற ஒண்ணும் சொல்லலியா ? அவ நல்லாத்தான் இருக்கிறாள் என்றாள் தீபா. உன் ரூமுக்கு போலாமா ?அங்கே இந்நேரத்துக்கு பசங்க இருப்பாங்க. சரி அப்போ வேண்டாம். தீபா நான் சீக்கிரமே ஊருக்கு வருவேன் என்றான்.தீபாவின் அம்மாவை பார்த்து பேசினான். அவர்களை ஸ்டேஷன் போய் வழி அனுப்பி வைத்தான்.

அனன்யா என்ன தீபா வந்து அடி கொடுத்தாளா இல்லை கிஸ் கொடுத்தாளா? அதை விடு சுபா அப்பா என்ன சொன்னார் . அவர் கொஞ்சம் பிஸி. எப்போ வரே விஷால். இன்னும் ரெண்டு வாரத்திலே.
இன்னும் ரெண்டு வாரமா? வந்து எத்தனை நாள் இருப்ப விஷால். ரெண்டு நாள் இருப்பேன்.சரி விஷால். டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. ஓகே அனன்யா. முடிந்தால் சுபாவையும் கூட்டிக்கொண்டு வா. அவளுக்கு லீவு இல்லையாம், நான் கேட்டு விட்டேன் என்றான்.
சுபாவை சந்தித்தான் விஷால். சுபா தீபாவுக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லையே, இருக்கு விஷால்.. என்ன சொல்லுற சுபா அவளுக்கு ஒரு சில பிரச்சனை இருக்கு . மறுபடி அடுத்த மாசம் வர சொல்லி இருக்காங்க. இது அவங்க அம்மாவுக்கும் எனக்கும் மட்டும் தெரியும். தீபாவுக்கு தெரியாது.

விஷால் வேக, வேகமாக வேலைகளை முடித்து கொண்டே வந்தான். டிக்கெட் புக் செய்து வைத்தான். ஊருக்கு போனாலும் காலேஜ் போய் பார்க்க வேண்டிய வேலைகள் இருந்தன.எல்லாவற்றையும் திட்டம் போட்டு செய்தான். அனன்யாவுக்கும், தீபாவுக்கும் ஏதாவது வாங்கலாம் என சுபாவை கூப்பிட்டு கொண்டு கடைத்தெருவுக்கு போனான். சில பொருட்களை வாங்கினர். சுபா ரெண்டு நாளிலே வந்து விடுவாயா என்றாள். அதுக்கு மேல இங்க லீவு சொல்ல முடியாது . அப்போ சரி . சுபாவை அழைத்துக்கொண்டு படம் பார்க்க சென்றான். அவள் இவன் தோளில் சாய்ந்தவாறே தூங்கி விட்டாள். ஊருக்கு கிளம்பும் போது சுபா ஸ்டேஷன் வந்திருந்தாள். சரி சுபா நான் போய் விட்டு வருகிறேன் நீ ஜாக்கிரதையா இரு என்றான். சரி விஷால்.

அனன்யாவும், தீபாவும் ஸ்டேஷன் வந்திருந்தனர்.தீபா புதிதாக வண்டி வாங்கியிருந்தாள். அதிலே வா விஷால் என்றாள் அனன்யா. தீபா இடுப்பை பிடித்தான். நல்லா பிடி விஷால் விழுந்து விட போகிறாய் என்றாள்.விஷாலை வீட்டில் விட்டாள் தீபா. நான் ரெடி ஆகி உங்க வீட்டுக்கு வரேன் அனன்யா என்றான். என்ன டிபன் பண்ணட்டும். உப்புமாவே பண்ணு என்றான். வீட்டுக்கு போய் குளித்து உடை மாற்றினான். அனன்யா டவல் தான் இப்போதும் பயன்படுத்தினான்.

அன்று மதியம் காலேஜ் போக வேண்டி இருந்தது . ஒரு சில கையெழுத்து வாங்க வேண்டி இருந்தது . அனன்யாவுக்கு ஃபோன் செய்தான் நானும் மதியம் காலேஜ் வருகிறேன் என்றாள்.அனன்யா வீட்டுக்கு போனான். தீபா உப்புமாவை கொண்டு வைத்து வைத்தாள். அவளுக்கு கொஞ்சம் ஊட்டினான். அனன்யா எங்கே என்று கேட்டான். குளிக்கிறாள் என்று சொன்னாள். நீ எப்படி இருக்கே . நல்லா இருக்கேன். ரொம்ப இளைத்து விட்டாய் என்றான். அவளை நெருங்கி முத்தமிட்டான். அனன்யா வந்து விட்டாள். அவளுக்கும் பரிமாறினான் விஷால். நீயும் சாப்பிடு தீபா என்றாள் அனன்யா. சரி என்றாள். கோவிலுக்கு போகணும் விஷால். எப்போ இப்போ தீபா நீ வீட்டில் இரு. நாங்க இப்போ போயிட்டு வந்து விடுகிறோம். சரி அனன்யா.

அனன்யா ஒரு கயிறு ஒன்றை இவனுக்கு கட்டிவிட்டாள் . சீக்கிரம் எல்லோரும் ஒண்ணு சேரணும் கடவுளே என்றாள். மதியத்திற்கு சாப்பாடு செய்கிறேன் என்றாள். நான் போய் கொஞ்சம் பேரை பார்க்கணும் பார்த்து விட்டு வருகிறேன் என்றான் விஷால். சரி . 11 30 போல வந்தான். தீபா சோபாவில் தூங்கி கொண்டிருந்தாள். அனன்யா கிச்சன் உள்ளே இருந்தாள். தீபா என்று எழுப்பினான் . அவர்களுக்கு சென்னையில் வாங்கிய பொருட்களை கொடுத்தான். நல்லா இருக்கு என்றனர். அனன்யாவுக்கு ஹெல்ப் பண்ணினான் விஷால். சமையல் 12 மணி போல முடிந்தது. ஒரு 1 மணிக்கு காலேஜ் கிளம்புவோமா என்றான் விஷால்.சரி . அனன்யா சாப்பாடு நன்றாக செய்திருந்தாள். தீபா அனன்யா இப்போது சூப்பர் ஆக பெயிண்டிங் பண்ணுகிறாள் என்றாள்.

காலேஜுக்கு பஸ்சில போகலாம் என்றாள் அனன்யா. சரி . தீபாவை வீட்டில் விட்டுவிட்டு பஸ் ஸ்டண்ட் போனார்கள் இருவரும். அனன்யா ஏதோ பேசிக்கொண்டே வந்தாள். காலேஜ் போய் எல்லா வேலையும் முடித்தான் விஷால். நைட் வர சொல்லி இருந்தாள் தீபா. அனன்யாவும் அவளுடைய வேலைகளை முடித்து விட்டு இவனுக்குக்காக தீபா வீட்டில் காத்திருந்தாள்.9 மணி போல வந்தான் விஷால் . ரொம்ப tired ஆக இருக்கிறது என்றான். அனன்யா மடியில் படுத்தான். தீபா போய் தண்ணீர் கொண்டு வந்தாள். அனன்யா எல்லா வேலையும் முடிஞ்சுதா என்றாள். நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றான். அனன்யா அவனை இழுத்து மார்போடு அணைத்து கொண்டாள்.