Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 14

அனன்யா விடை பெற்றுக் கொண்டு விட்டாள் இனி அடுத்த வாரம் தான் அவளை பார்க்க முடியும். விஷாலும் வீட்டுக்கு கிளம்பினான். சுபாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான் . எல்லாம் சரியாயிடுச்சு இல்ல கொஞ்ச நாளைக்கு இப்படியே இருங்க என்றாள் சுபா. நீ எப்படி இருக்க சுபா நான் நல்லா இருக்கேன் என்றாள் . இனி எப்ப வருவ சுபா எக்ஸாம் முடிஞ்சு தான் வர முடியும். சரி சுபா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்றான்
வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றினான் அனன்யாவின் மணம்
இப்போதும் அவனிடத்தில் இருந்தது. கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனான் அங்கு தீபாவை பார்த்தான் ரொம்ப தேங்க்ஸ் தீபா லெட்டர் கொடுத்ததுக்கு என்ன நடந்துச்சு என்றாள் தீபா அனன்யா அப்பாவுக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு ஓ அப்படியா அதான் அவளை பார்க்கவே முடியல ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு விஷால். சரி தீபா

திவ்யாவுக்கு போன் செய்தான் ரொம்ப தேங்க்ஸ் திவ்யா இதில் என்ன இருக்கு இது ஒரு சாதாரண ஹெல்ப் தானே என்றாள் . அனன்யா கூட இல்லாமல் இருப்பது ரொம்ப சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டு தன்னுடைய கவனத்தை வேறு எதிலாவது செலுத்தலாம் என நினைத்தான் மறுபடியும் டான்ஸ் கிளாஸ் போவோமா என யோசித்தான். சுபாவிடம் கேட்டபோது அது நல்லது நீ டான்ஸ் கிளாஸ் போ என்றாள். இவன் டான்ஸ் கிளாஸ் போக துவங்கினான் . நீண்ட நாட்கள் கழித்து போனதால் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அனன்யாவிடம் இருந்து போன் வந்தது மறுபடியும் டான்ஸ் கிளாஸ் போறியாமே வாழ்த்துக்கள் என்றாள். இந்த வாரம் நிச்சயம் மீட் பண்ண முடியுமா.கண்டிப்பா விஷால் ஃபோனை வைத்து விட்டாள். இவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் போனை பார்த்தான். வேறு ஏதாவது கிளாசில் கூட சேரலாம் என நினைத்தான். தீபா போன் பண்ணி இருந்தாள் அவள் வீட்டு சிஸ்டம் பழுதாகி விட்டது கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா என்று கேட்டாள்
சரி வருகிறேன் என்று சொன்னான். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது. 15 நிமிடத்தில் சரி செய்து கொடுத்தான். ரொம்ப தேங்க்ஸ் விஷால் ஏதாவது சாப்பிடுறியா என்றாள் ஒன்னும் வேண்டாம் தீபா.நானும் டான்ஸ் கிளாஸ் வரலாம் என்று இருக்கிறேன் என்றாள் . வாயேன் மற்ற டீடைல்ஸ் எல்லாம் சுபாவுக்கு தெரியும் அவளிடம் பேசிக் கொள் என்றான். தீபா எளிமையாக இருந்தாள். சரி வரேன் தீபா என்றான். டான்ஸ் கிளாஸில் மீட் பண்ணுவோம் என்றாள் . விஷால் வண்டி சாவியை மறந்து விட்டு வந்து விட்டான் .மீண்டும் மாடிக்கு சென்றபோது விஷாலும் அவளும் இருந்த புகைப்படத்தை தீபா பார்த்துக் கொண்டிருந்தாள் . என்ன ஆச்சு விஷால்? வண்டி சாவி . எடுத்துக் கொடுத்தாள் .

அடுத்த சண்டே மீட் பண்ணும் போது தீபாவும் டான்ஸ் கிளாஸ் வராளாமே என்றாள் அனன்யா ஆமாம் அவள் டான்ஸ் கிளாஸில் சேர்ந்து இருக்கிறாள்
திவ்யா ரூமுக்கு போனார்கள். திவ்யா ரூமிலே இருந்தாள் . வாங்க வாங்க என்றாள். அனன்யா லேப்டாப்பை எடுத்து சில வேலைகள் செய்து கொண்டிருந்தாள் இவன் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான் போன வாரம் என்ன பண்ணீங்க என்று கேட்டால் சும்மா தான் பேசிட்டு இருந்தோம் கேசரி பண்ணி கொடுத்தா என்று சொன்னான் அவ்வளவுதானா இன்னைக்கு என்னோட ஆள் வரான் என்று சொன்னாள் அப்ப நாங்க கிளம்பட்டுமா அதெல்லாம் வேண்டாம் அவன் சாயங்காலம் தான் வரான் நீங்க ப்ரீயா இருங்க என்றாள் அனன்யா இவனை கூப்பிட்டு என்ன விஷால் ஸ்டடிஸ்ல ஏதாவது சந்தேகம் இருக்கா இருந்தா கேளு என்றாள்.

சிறிது நேரத்தில் திவ்யா வெளியே கிளம்பினாள் . பக்கத்துல கடைக்கு போறேன் உங்களுக்கு ஏதாவது வேணுமா? கூல்டிரிங்ஸ் ஏதாவது வாங்கிட்டு வா என்றால் அனன்யா. அவள் போனதும் தீபாவ உனக்கு பிடிச்சு இருக்கா விஷால்? அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவ உன்னை விரும்புகிறேன் என்று சொல்றா இந்த லெட்டரை கொடுத்தா கிழிச்சு போட வேண்டியதுதானே அது எப்படி விஷால் நீ படிச்சு பாரு.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று கிழிக்க போனான்.. வேண்டாம் விஷால் இது எங்கிட்டே இருக்கட்டும் என்னைக்காவது தேவைப்படும் அப்ப படி என்றாள் . நீ எதுக்கு இதை வாங்கிட்டு வந்த என் மேல நம்பிக்கை இல்லையா என்றான். என்ன செய்றேன்னு பார்த்தேன். சிரித்துக் கொண்டே அவள் மீது பாய்ந்தான்.. இருவரும் கட்டி உருண்டார்கள். டேய் விஷால் விடுடா என்னை என்றாள்.


சமையலறைக்குள் போய் பிஸ்கட் எடுத்து வந்தாள் . திவ்யா வந்து விட்டாள் இருவரும் கூல்டிரிங்ஸ் குடித்தனர் . சில புகைப்படங்களை திவ்யா காட்டினாள் இதுதான் என் ஆளு பேர் என்ன என்று கேட்டாள் அனன்யா குமார் என்று சொன்னாள் . சுபாவிடமிருந்து அனன்யாவுக்கு போன் வந்தது என்ன பண்றீங்க என்று கேட்டாள் பிஸ்கட்டும் கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுகிட்டு இருக்கோம் அவ்வளவுதானா நான் என்னமோ பண்றீங்கன்னு நினைச்சேன் திவ்யா இங்க இருக்கா என்றாள் . ஓ அப்படியா அவ கிட்ட போன குடு என்று திவ்யாவிடம் கொஞ்ச நேரம் சுபா பேசினாள். திவ்யா குளிச்சிட்டு வரேன், வந்ததுக்கு அப்புறம் மூணு பேரும் கடைக்கு போகலாம், கடைக்கு போய் சாப்பிடலாம் என்றாள் .

நாம எப்போ ஒன்னா குளிக்கிறது என்றான் விஷால்.. நாளைக்கே என்னை கல்யாணம் பண்ணிக்க அப்புறம் என்ன டெய்லி ஒன்றாக குளிக்கலாம். இது அநியாயம் என்றான் விஷால் . திவ்யாவும் இவர்களும் ஒன்றாக கடைக்கு போனார்கள். திவ்யா தாராளமாக ஆர்டர் செய்தாள் . சில சமயம் அந்த கடைகளில் கிடைக்காத ஐட்டம் கூட ஆர்டர் செய்தாள் . சாப்பிட்டு முடித்ததும் அனன்யா பணம் கொடுத்தாள் . சரி நாங்க கிளம்பட்டுமா என்றான் விஷால். நீங்க எப்ப வேணாலும் வரலாம் எப்ப வேணா போகலாம் இந்தாங்க ஒரு சாவி. எனக்கு ஒரு போன் மட்டும் பண்ணுங்க என்றாள் திவ்யா
ரொம்ப தேங்க்ஸ் என்றான். இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் என்றாள் திவ்யா

டான்ஸ் கிளாசில் தீபா இவனை பார்த்தாள் என்ன ஆச்சு விஷால் லெட்டர் கொடுத்தேனே அது வந்து தீபா உங்களுக்கே தெரியும் நான் ஏற்கனவே ரெண்டு பேர லவ் பண்றேன் இப்போ உங்களையும் லவ் பண்ண சொன்னா அதுக்கு பேரே வேற. எனக்கு ஓகே நீங்க யோசிச்சு சொல்லுங்க நானும் அவங்கள மாதிரி உங்கள நல்லா பாத்துக்குவேன் இதைக் கேட்டு சிரித்தான் விஷால் . ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள் சுபா அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு நன்றாகவே ஆடினாள் தீபா. நல்லா டான்ஸ் ஆடுறீங்க தீபா . தேங்க்ஸ் விஷால். என்ன உங்களுக்கு பிடிக்கலையா என்றாள் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் ஆல்ரெடி கமிட்டேட் அதனால எனக்கு வேற எந்த சிந்தனையும் இல்லை என்றான் விஷால்.


சுபாவிடம் தீபா தன்னை விரும்புவதாக சொன்னதை பற்றி சொன்னான். விஷால் நீ என்ன சொன்ன? நான் என்ன சொல்ல முடியும் ஏற்கனவே ரெண்டு பேர் இருக்காங்க என்று சொன்னேன் .அவ என்ன சொன்னா? அவளுக்கு அதை பத்தி கவலை இல்லை, சும்மா டைம் பாஸ்க்கு, அப்படி சொல்லாத விஷால் அவ சீரியஸாவே உன்ன லவ் பண்றா. அதுக்கு நான் என்ன செய்ய முடியும். சும்மா ட்ரை பண்ணி தான் பாரேன்.. என்ன விளையாடுறியா ஏற்கனவே உன்னை பிரிஞ்சு நான் படுற அவஸ்தை எனக்கு தான் தெரியும்.. ரொம்ப நடிக்காத என்றாள். உனக்கு இது நடிப்பா தெரியுதா.. என்ன வந்து மறுபடி பார்க்கவே இல்லையே.. நீ தான் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே.நான் சொன்னா நீ வர மாட்டியா அடுத்த வாரம் வா அனன்யாவையும் அழைத்துக்கொண்டு வா ஓகே சுபா நான் அனன்யா அப்பாகிட்ட பேசுறேன் ஒரு வழியாக அனன்யா அப்பாவிடம் சுபா பேசி பர்மிஷன் வாங்கி விட்டாள்.
விஷாலும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தான். அடுத்த சண்டேவிற்காக ஆவலுடன் காத்திருந்தான் .அனன்யா போன் பண்ணி இருந்தாள் என்ன யோசிச்ச தீபா விஷயத்த பத்தி,என்ன நீயும் அதையே கேக்குற சுபாவும் அதையே கேட்கிறாள் .இல்ல நிஜமாவே உனக்கு அவளை பிடிச்சிருந்தா யோசிச்சு சொல்லு அவ போன் பண்ணிக்கிட்டே இருக்கா பாவமா இருக்கு உனக்கு பாவமா இருந்தா நான் லவ் பண்ணி மாட்டிக்கணுமா நாலு பேர் என்ன நினைப்பாங்க? இல்ல அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா . சண்டே உனக்காக காத்திருக்கிறேன். சுபாவ பாக்க போகணும் ஏதாவது வாங்க வேண்டுமா எனக்கு மெசேஜ் பண்ணு என்றான். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சொல்லிட்டா. அப்ப சரி இனிமே நீ தீபா மேட்டர் பத்தி என்கிட்ட பேசாத நம்ம மேட்டர் பத்தி மட்டும் பேசு என்றான் விஷால்.
சுபா இந்த முறை வெளியில் இருந்த அவளுடைய ஃப்ரெண்ட் ரூமுக்கு அழைத்துச் சென்றாள் .எப்படி இருக்க சுபா நல்லா தான் இருக்கிறேன் உன் கண்ணுக்கு தான் தெரிய மாட்டேங்குது.. என்ன ஆச்சு தீபா மேட்டர் முடிச்சிட்டியா என்றாள் . இவன் அமைதியாக இருந்தான் .இனி அத பத்தி பேசாத சுபா.நானே நொந்து போய் இருக்கிறேன் என்றான். எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ண சுபா நல்லா பண்ணி இருக்கேன் முடிஞ்சதும் லீவுல வந்து பார்க்கிறேன். என்ன அனன்யா எதுவும் பேசாம இருக்க இல்ல ரொம்ப நாள் கழிச்சு பேசுறீங்க நான் என்ன பேசுறது நீ சாப்டியா சுபா சாப்பிட்டேன் நீ இல்லாம ஒரே போர் அதான் அனன்யா இருக்காளே.. அப்பா எப்படி இருக்காரு அனன்யா நல்லா இருக்காரு அவரு ஏதாவது பேசினாரா இல்ல சுபா ஆனால் என்ன வாட்ச் பண்ணிட்டு இருக்காரு. விஷால் சுபாவை அருகில் கூப்பிட்டான் கண்ண மூடு என்ன பண்ண போற விஷால் அவள் கையில் ஒரு புதிய வாட்ச்சை கட்டி விட்டான் எதுக்கு விஷால் இது எப்போதுமே என் நினைப்பு உன் கூடவே இருக்கணும் அதுக்காக தான் தேங்க்யூ விஷால். வெளியே மழை பெய்ய தொடங்கியது. சுபா டீ போட்டு தாயேன் என்றான் விஷால். மூவரும் சமையலறைக்குள் போயினர் .. அனன்யா இவன்மேல் சாய்ந்து கொண்டாள் . திவ்யா ரூமுக்கு போனீங்களே சும்மாதான் பேசிட்டு இருந்தீங்களா? அந்த கதையை ஏன் கேக்குற ..என்றான் விஷால். டீ குடித்தான் நல்லா டீ போட்டு இருக்கிற ..மழை விடுகிற மாதிரி தெரியவில்லை. நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்றாள் அனன்யா.
சரி அனன்யா. சுபா நானும் போறேன் என்றாள் அவளுடைய துப்பட்டாவை பிடித்து இழுத்தான். வேணாம் விஷால் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது அது எப்படி என்று அவளை கட்டிப்பிடித்தான் அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டான் மெல்ல அவளுடைய இடையை பிடித்தான் .அவளுடைய பின்புறங்களையும் தடவினான் . அவள் இவனை இறுக்க அணைத்துக் கொண்டாள் .விஷால் விஷால் என்று முனகினாள் . அவளுடைய மார்புகள் விம்மி துடித்தன. மெல்ல அவளை தரையில் படுக்க வைத்து உதட்டில் முத்தமிட்டான். போதும் விஷால் என்னால இதுக்கு மேல முடியாது என்றாள்.


அனன்யா தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் போய் அனன்யா மழை விட்டுடுச்சு நாம போகலாமா என்றான். அவள் சுபா எங்கே என்று கேட்டாள். தூங்குகிறாள் அப்ப கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம் என்று சொன்னாள். நீ தூங்கலையா விஷால் இல்லை. அனன்யா போய் முகம் கழுவி வந்தாள். சுபாவை எழுப்பினாள் . மழை நின்னுடுச்சா என்று கேட்டாள் சுபா. மழை நின்னு ரொம்ப நேரம் ஆச்சு. சுபாவும் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். மூவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.சுபாவிடம் விடை பெற்றுக் கொண்டான் விஷால் . அவள் லேசாக அழுதாள் . அனன்யா அவளை சமாதானப்படுத்தினாள்.போய் சேர்ந்து விட்டு எனக்கு ஃபோன் பண்ணு அனன்யா என்றாள் சுபா.இன்னும் பத்து நாள் கழித்து சுபா வந்து விடுவாள் என்று சொன்னாள் அனன்யா .