ஒரு நாளும் உனை மறவேன்

(0)
  • 4.8k
  • 0
  • 1.7k

அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். கொஞ்ச நேரம் எழுதலாம் என முடிவெடுத்தான்.

1

ஒரு நாளும் உனை மறவேன் - Part 1

அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். ...மேலும் வாசிக்க

2

ஒரு நாளும் உனை மறவேன் - Part 2

ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி இனிமேலாவது என் மனைவியை விட்டுவிடுவாய் என நம்புகிறேன் . ஆனந்த் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க . எல்லாம் எனக்கு தெரியும் உன்னைபற்றி என்றவாறு போனை வைத்தான் ஆனந்த். இரண்டு நாட்கள் கழித்து சேகருக்கு ஃபோன் செய்து விசாரித்தான். என்னாச்சு சேகர் அரவிந்த் ஊரில் இருந்து வந்துவிட்டாரா? ம் வந்துட்டாரு நானே உனக்கு ஃபோன் பண்ணணும்னு நெனைச்சேன் . நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு அவரு ஆபீஸ் ல வந்து பார்க்க சொல்லி இருக்காரு நீயும் வரியா என்றான். சரி வரேன். ஒருவேளை ஆனந்தும் வந்து பிரச்சனை ஆயிடுமோ அப்படின்னு யோசிக்கிறேன். அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதப்பா நீ சும்மா வா . சேகரும், சிவாவும் அரவிந்தின் ஆபீஸ் வந்திருந்தார்கள். எதிர்பார்த்த மாதிரி ...மேலும் வாசிக்க

3

ஒரு நாளும் உனை மறவேன் - Part 3

மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் என்ன நடந்தாலும் நீ என்னை கை விட மாட்டேல சிவா . நிச்சயமா இல்லை என்றான்நான் வேணா ஃபோன் பண்ணி பாக்கட்டுமா சேகருக்கு ஃபோன் செய்தான். நானே உன்னை கூப்பிடுறேன் இப்போதான் பாட்டில் ஓபன் பண்ணியிருக்கான் ஆனந்த். ஆனந்த் நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன் ஸ்வேதா கர்ப்பமாயிருக்கா நான் அப்பாவாகிட்டேன் என்றான் சேகரிடம். சாரி சேகர் உங்க கிட்ட எல்லாம் நான் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன் . அதெல்லாம் பரவாயில்லப்பா .. சரி வா குடிச்சது போதும் இங்கே பக்கத்துல ஒரு ஹில் டாப் இருக்கு அங்கே போவோம். ரம்யா வரல? அவளுக்கு லேசா தலைவலி அதான் வரல என்றான். சரி அவளை ஒருதடவை பார்த்திட்டு போயிடலாம் என்றான் ஆனந்த். ரம்யா ரூமுக்கு போய் ...மேலும் வாசிக்க

4

ஒரு நாளும் உனை மறவேன் - Part 4

விடிந்ததும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்வேதா சாரி ஏதோ அசதில அப்படியே தூங்கி போயிட்டேன் . சரி குளிச்சு ரெடி ஆகு நாம கோவிலுக்கு சரி ஸ்வேதா, கடவுள் சந்நிதானத்தில் நாங்க எந்த தப்பும் செய்யல சீக்கிரம் ஸ்வேதாவை கல்யாணம் பன்னிக்கணும் என்று வேண்டிக்கொண்டான் . சேகர் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. சேகர் தலைமறைவாய் இருப்பதை பற்றி கவலையாய் இருந்தது சிவாவுக்கு . ஸ்வேதாவிடமும் சொன்னான்.ஆனந்த் விஷயத்துல என்ன நடந்திருக்கும்னு என்னால கணிக்கவே முடியல.. சிவா நீ அனாவசியமா பயப்படுறே என்றாள் ஸ்வேதா.இரண்டு நாட்கள் கழித்து சேகர் ஃபோன் செய்தான். அவசரம் நீ உடனே புறப்பட்டு ஹோட்டல் ஜெயண்ட்க்கு வந்துடு என்று சொன்னான். சேகர் இளைத்து போயிருந்தான். அவனுடைய கண்கள் தூக்கத்துக்காக ஏங்கி கொண்டிருந்தன. என்ன நடந்துச்சு ஏன் இப்படி இருக்கே உடம்பு சரியில்லையா என கேள்விகளை அடுக்கினான் சிவா. எனக்கு ஒண்ணும் இல்ல. அன்னைக்கு ஆனந்த் ...மேலும் வாசிக்க

5

ஒரு நாளும் உனை மறவேன் - Part 5

வாட்ச்மேன் அவங்க ஊருக்கு போயிருக்காங்களே .. இல்லைனா அவங்களுக்கு ஃபோன் பண்ணி பாருங்களேன் என்றார் . ஃபோன் ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. அவங்க ஹஸ்பண்ட் காணாம போனாரு அதனால ரொம்ப மன உளைச்சலோட இருந்தாங்க. உள்ளே லைட் எரிவது போல தெரிந்தது. நாம போலீஸ் கிட்ட போகலாம். அதெல்லாம் வேணாம் சார் அசோசியேஷன் செகரெட்டரி கிட்ட இன்னொரு கீ இருக்கு அதை வைத்து திறந்து பார்ப்போம் என்றார், சுமதி மேடம், மேடம் என கூப்பிட்டு கொண்டே உள்ளே போனார். அங்கே சுமதி தூக்கில் தொங்கியவாறு இருந்தாள் அரவிந்த்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான் சிவா. போலீஸ், ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டது .போலீஸ் சிவாவையும், ஸ்வேதாவையும் தனி தனியே விசாரித்தனர் . பிறகு எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும் என்றனர். அரவிந்த் தடுமாறி போனார், சிவா தான் அவருக்கு ஆறுதல் கூறினான். இதுக்கு மேல நீங்க எதுலேயும் involve ஆகாதீங்க சிவா ...மேலும் வாசிக்க