Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 39

காலையிலேயே மண்டபம் களை கட்டியிருந்தது . நிச்சயதார்த்ததுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ரஷ்மி அப்பா செய்து கொண்டிருந்தார். அருண், ஜோ, பூஜா, சுகன்யா ஆகியோர் வந்திருந்தனர். தென்றல் தன் கணவனோடு வந்திருந்தாள். ராகவும் நிச்சயதார்த்ததுக்கு வந்திருந்தான். எல்லோருக்கும் அது கேள்விக்குறி நிரம்பிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கூடவே கிருஷ்ணனும் சௌமியாவும் நிச்சய ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தனர். சௌமியா ரஷ்மி கூடவே நிழல் போலவே இருந்தாள். பூஜா என்னடா நடக்குது இ ங்கே என்றாள் அருணிடம் . எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா என்றான். ஒருவேளை கல்யாணம் அப்ப ரஷ்மி ராகவ் ஓடி போவார்களோ என்னவோ என்றான். நிச்சயதார்த்தம் நிறைவு பெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ராகவ் அமைதியாய் இருந்தான். அவன் ரஷ்மி மேல் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் காரணமாக அமைதியாய் இருந்தான். நண்பர்கள் விடை பெற்றுகொண்டனர். சௌமியா, பிரதீபா , ராகவ், கிருஷ்ணன் ஆகியோர் மட்டும் இருந்தனர். அப்போது ரஷ்மி வந்து எல்லோரும் சாப்பிட்டீர்களா என விசாரித்தாள் . இவ்வளவு தூரம் இழுக்க வேண்டுமா நீங்கள் என்றாள் பிரதீபா. அப்பாவுக்கு அப்போதான் சந்தேகம் வராது அதுதான் இவ்வளவு தூரம் பண்ண வேண்டியதாச்சு என்றாள் ரஷ்மி.

இரவு 11 மணி போல ரஷ்மி, ராகவ், சௌமியா ஆகியோர் காரில் நீலகிரி புறப்பட்டனர்.பார்த்து டிரைவ் பண்ணு சௌமியா வாழ்த்துக்கள் ராகவ் என்றார் கிருஷ்ணன். நான் இரண்டு நாளில் வந்து பார்க்கிறேன் என்றார். விடிந்ததும் ரஷ்மியை காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது, எல்லா இடங்களிலும் தேடினார்கள். ரஷ்மி அப்பாவுக்கு போலீசில் போக மனமில்லை.எப்படியோ போய் தொலையட்டும் எப்படியெல்லாம் அவளை வளர்த்தேன் என்று வருத்தப்பட்டார், கிருஷ்ணன் அவரை சமாதானப்படுத்தினார். என்ன பண்ணுறது இந்த காலத்து பொண்ணுங்க விருப்பம் என்னவா இருக்கும்னு யாருக்கு தெரியுது என்றார் கிருஷ்ணன்.சௌமியா நீலகிரி சென்றடைந்ததும் குளித்து ரெடி ஆகுங்க நாம கோவில் போய் ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வருவோம். அப்போதான் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் பண்ண முடியும் என்றாள் . ரஷ்மி எதுவும் சொல்லவில்லை. அவளால் காதலையும் விட்டு கொடுக்க முடியவில்லை அப்பா அம்மாவையும் விட்டு கொடுக்க மனம் வரவில்லை.

மூவரும் புறப்பட்டு கோவிலுக்கு போனார்கள். பதிவு செய்து திருமண நேரம் போன்றவற்றை கேட்டுக்கொண்டு திரும்பினார்கள். நாளைக்கு இருவரும் வேலையில் சேர வேண்டும் அல்லவா பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்றாள் சௌமியா. சௌமியா பூஜாவின் அறையில் தங்கியிருந்தாள். கிருஷ்ணன் மறுநாள் வந்தார் பிரதீபாவையும் அழைத்து வந்திருந்தார். என்ன அண்ணா கல்யாணமாமே சொல்லவே இல்லை என்று ஆதங்கப்பட்டாள் . இன்னும் ஒரு வாரம் ரஷ்மி ராகவ் கல்யாணம் முடியும் வரை நானும் பிரதீபாவும் இங்கு தான் இருக்க போகிறோம் என்றார். என்னாச்சு சார் ரஷ்மி அப்பா என்ன சொன்னார். அவர் ஆயிரம் சொன்னார், அப்புறம் அவரே மனதை தேற்றிக்கொண்டார், ரஷ்மி அழுதாள். எதுக்கு இப்போ அழறே ரஷ்மி எல்லாம் நல்லதுக்குத்தான் என்றாள் சௌமியா. என்ன சௌமியா கோவிலுக்கு போனியா எல்லா ஏற்பாடும் பண்ணி விட்டாயா என்றார். ம் பண்ணிவிட்டேன் என்றாள். சரி அருகில் உள்ள டூரிஸ்டு ஸ்பாட்களை பார்த்து வருகிறோம். நீங்கள் ரெண்டு பேரும் வேலைக்கு போய் வாருங்கள் என்றார் கிருஷ்ணன். அவர் காலில் விழுந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

என்ன ரஷ்மி வேலை எப்படி இருக்கிறது என்றான் ராகவ். படிப்பதை விட ஈசி ஆகத்தான் இருக்கிறது என்றாள். உனக்கு எப்படி இருக்கிறது வேலை. technician வேலைதானே பரவாயில்லை கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும் என்றான். பூஜா ஃபோன் பண்ணியிருந்தாள் . பூஜாவிடம் மட்டும் விஷயத்தை சொல்லியிருந்தாள் ரஷ்மி. கல்யாணத்துக்கு தான் அவசியம் வருவதாக பூஜா சொன்னாள்.எப்படியோ ஒரு வாரம் ஓடிவிட்டது. கல்யாணத்துக்கு தேவையான ஷாப்பிங் எல்லாம் கிருஷ்ணன் கூட போய் ரஷ்மியும் ராகவும் வாங்கினார்கள். அவர்களின் எல்லா செலவையும் கிருஷ்ணன் ஏற்றார். கல்யாண நாளும் வந்தது அதிகம் பேருக்கு சொல்லவில்லை பூஜா மட்டும் முதல் நாள் ராத்திரியே வந்து விட்டாள். தாங்க்ஸ் பூஜா எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கிருஷ்ணன் சார் தான் வேலையும் வாங்கி கொடுத்து கல்யாணமும் பண்ணி வைக்கிறார் என்றாள். ரஷ்மி ராகவ் கல்யாணம் அதிகாலை முகூர்த்தத்தில் நடைபெற்றது. கல்யாணம் முடிந்ததும் ரஷ்மி அவளுடைய அப்பா அம்மாவை நினைத்து அழுதாள் . ஒரு வழியாக ராகவ் அவள் கையை பிடித்துக்கொண்டு இல்லற வாழ்வுக்கு தயார் ஆனான். கிருஷ்ணனை கட்டிக்கொண்டு நீங்க இல்லேன்னா என்னவாயிருக்கும்னு தெரியல என்றான்.

பூஜா கிப்ட் ஒன்றை கொடுத்தாள் . அருண் கூட கல்யாணம் எப்போ என்றாள் ரஷ்மி. அதெல்லாம் இப்போ இல்லை ஒரு மியூசிக் பாண்ட் ஸ்டார்ட் பண்ணனும் அப்புறம்தான் கல்யாணம் என்றாள். பூஜாவோடு புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.மத்தவங்க எல்லாம் அடுத்த வாரம் வந்து பார்ப்பாங்க என்றாள் பூஜா. ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு பூஜா கிளம்பினாள். இரவு முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் ரஷ்மி. இப்போது இது அவசியமா என்றான் ராகவ் . வேணாம்னா போ என்றாள் ரஷ்மி. சும்மா உன் மூட் மாத்த சொன்னேன் ரஷ்மி. வா கிட்டே என்று அணைத்து கொண்டான். இனிமேதான் நாம ஜாக்கிரதையாவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்றான். அடுத்த வாரம் நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள் . எப்படியோ கல்யாணம் முடிஞ்சு ஒரு நல்ல வேலைல சேர்ந்து விட்டீங்க என்றான் ஜோ. தென்றல் வரவில்லை. சுகன்யா நலம் விசாரித்தாள் . எல்லோரையும் இரண்டு நாள் தங்கி போகும்படி சொன்னாள் ரஷ்மி. அருண் இப்படின்னு தெரிஞ்சா பூஜாவையும் கூட்டி வந்திருப்பேன் என்றான்.

இரண்டு நாட்கள் கொண்டாட்டம் போட்டுவிட்டு ஊர் திரும்பினார்கள் எல்லோரும். ரஷ்மியும் ராகவுக்கும் வேலை நேரமே சரியாக இருந்தது. சந்தித்து கொள்ளும் கொஞ்ச நேரமும் வீட்டு வேலை சரியாக இருந்தது. சண்டே ஒரு நாள் மட்டும் பரீயாக இருந்தார்கள். அவ்வப்போது பிரதீபா ஃபோன் செய்வாள். அப்போது சௌமியாவும் பேசுவாள். ஏதாவது தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள் என்று சொன்னாள் சௌமியா. நீங்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு நாங்கள்தான் உங்களுக்கு வாழ்நாளெல்லாம் நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம் என்றான் ராகவ். பிரதீபாவும், சௌமியாவும் சிங்கப்பூர் செல்ல இன்னும் ஒரு வாரமே இருந்தது. சென்னைக்கு வர சொல்லிவிட்டாள் பிரதீபா. இரண்டு நாட்கள் முன்பாகவே பிரதீபா,சௌமியா ,கிருஷ்ணன் சென்னை வந்துவிட்டார்கள். அங்கே ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்கள். ரஷ்மி ராகவுக்கும் ரூம் போட்டிருந்தார்கள். பிரதீபாவுக்கு ஒரே கொண்டாட்டம். அதே சமயம் ராகவ் ரஷ்மி விட்டு போகிறோமே என்று வருத்தம். ரஷ்மி ராகவோடு பீச் போனாள். சென்னையை சுற்றியுள்ள கோவில்களுக்கு போனாள்.ஏர்போர்ட் சென்று வழியனுப்ப ராகவ், ரஷ்மி இருவர் மட்டுமே வந்திருந்தனர். மற்றவர்களுக்கு ஏன் சிரமம் என்று சொல்லவில்லை என்றாள் சௌமியா. எல்லோரும் குழுவாக போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பிரதீபா கிருஷ்ணனை கட்டிக்கொண்டு அழுதாள் . நான் அடிக்கடி வந்து பார்க்கிறேன் என்றார் கிருஷ்ணன். சௌமியா அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.கிருஷ்ணன் கலங்கி போய்விட்டார். ராகவ் எதையோ சொல்லி சமாளித்தான்.

அருணும் பூஜாவும் காலேஜ் முடித்து புதிய மியூசிக் பாண்ட் துவங்க முடிவு செய்தார்கள். கிருஷ்ணனிடம் சொன்ன போது தாரளமாக செய்யுங்கள் என்னுடைய உதவிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு என்றார். அவர்கள் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும் நாளடைவில் சமாதானம் ஆயினர்.ஸ்ருதி,சுகன்யா ,ஜோ, அருண், பூஜா ஆகியோருடன் இன்னும் சில பேரை சேர்த்து கொள்ள முடிவு செய்தனர். ரஷ்மியும். ராகவும் இதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். பூஜா அருண் இருவரும் நிகழ்ச்சி நடத்த நண்பர்கள் மூலமாக நிதி திரட்டினர். அருணும் பூஜாவும் ஏற்கனவே காற்றே என் வாசல் வந்தாய் ஆல்பம் மூலமாக பாப்புலர் ஆக இருந்ததால் நிதி திரட்டுவது சுலபமாக இருந்தது. அவர்களுடைய முதல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது . அதை சிறப்பாக செய்வதற்கு ராகவ் , ரஷ்மி சென்னை வந்திருந்தார்கள். எல்லா நண்பர்களும் சேர்ந்து தங்களுடைய பாண்டின் முதல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொடுக்க கடுமையாக உழைத்தனர். தி லவ்லீ பாண்ட் என்றே மியூசிக் பாண்ட் பெயர் வைக்கப்பட்டது. டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன.

முதல் இசை நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பாக பூஜாவின் பாடலை பலரும் பாராட்டினர் . அருண் பூஜா இணை இன்னும் சாதனைகள் படைக்க வேண்டும் என எல்லோரும் வாழ்த்தினர், என்ன பூஜா இப்போ கூட என் மேல நம்பிக்கை வரலையா என்றான் அருண். எனக்கு உன் மேல எல்லா நம்பிக்கையும் இருக்கு என எதிர்காலமே நீ தாண்டா அதுதான் தைரியமா முடிவு எடுக்கிறேன் என்றாள். இப்படியே பேசு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு கச்சேரி பண்ண கூடாதா என்றான் அருண். அதெல்லாம் கஷ்டம் அப்புறம் குழந்தை எல்லாம் பார்க்கணும் அதுக்காகத்தான் . அப்போ உனக்கு அந்த நெனைப்பெல்லாம் கூட இருக்குதா என்றான். உனக்கு வேற வேலையில்லை நீ டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் பண்ணாதே என்றாள். நீ டென்ஷன் ஆனா இன்னும் அழகா இருக்கே என்றான். ராகவ் ரஷ்மி எப்படி செட்டில் ஆனாங்க அதே மாதிரி நாமும் செட்டில் ஆகணும் என்றாள்.