Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 40

இரண்டு வருடங்களுக்கு பிறகு :


ஜோவுக்கும் சுகன்யாவுக்கும் கல்யாணம் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் ராகவ். ரஷ்மியை கூப்பிட்டு சேதியை சொன்னான். கடைசியில் சுகன்யாவுக்கு ஒரு நல்ல துணை கிடைத்ததே என்றாள் ரஷ்மி. குழந்தை அழுகிறான் பார் என்றாள். அம்மா அங்குதான் இருக்கிறார்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றாள் . குழந்தை ஒன்று பிறந்தது, எப்படியோ ராகவின் பெற்றோரும் ரஷ்மியின் பெற்றோரும் சமாதானம் ஆயினர். யுவன் அழக்கூடாது என்றார் ரஷ்மியின் அப்பா . யுவனுக்கு என்ன வேணும் என்று கொஞ்சினார். ஜோவுடைய கல்யாணத்துக்கு நாம் அவசியம் போக வேண்டும் எல்லாரையும் பார்க்க வேண்டும் என்றாள் ரஷ்மி. பூஜா அருண் பிஸி ஆக இருப்பார்கள் அவர்கள் வருவார்களா என்றான் ராகவ், நிச்சயம் வருவார்கள். பூஜாவும் அருணும் பிரிந்து ஆறு மாதமாகிறது . இருவரும் தனித்தனியே ஆல்பம் தயாரிக்கிறார்கள். சௌமியா இந்த கல்யாணத்துக்கு வருவதாக சொல்லி இருக்கிறாள். கிருஷ்ணன் அவளுக்காகவும் பிரதீபாவுக்காகவும் ஆவலாக காத்திருக்கிறார் . பிரதீபா படிப்பு முடிந்து நல்ல ரேங்க் வாங்கியிருக்கிறாள் என்று கிருஷ்ணன் சொன்னார். தென்றலுக்கு கீர்த்தி என்ற பெண் குழந்தை இருக்கிறது.


சௌமியாவிடம் ராகவ் பேசினான் . எப்போ மேம் வருவீங்க இங்க என்னென்னவோ நடக்குது. நானும் கேள்விப்பட்டேன் அருணும் பூஜாவும் பிரிந்து விட்டார்களாமே என்றாள் வருத்தத்துடன் . ஆமாம் தென்றல் குழந்தையையும் உன் குழந்தையையும் பார்க்க ஆவலாய் இருக்கிறேன் . அடுத்த வாரம் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்பாகவே வருவேன் என்றாள் . பிரதீபா ஆளே மாறிவிட்டாள் . அவளுடைய ஸ்டைல் எல்லாம் மாறிவிட்டது என்றாள். சும்மா சொல்கிறார்கள் நான் அப்படியேதான் இருக்கிறேன் என்றாள் பிரதீபா. சீக்கிரம் வந்து சேருங்கள் என்றான் ராகவ். ஏர்போர்ட் போயிருந்தான் கிருஷ்ணன் கூட . பிரதீபாவும், சௌமியாவும் ரஷ்மியை கட்டிக்கொண்டனர். குழந்தையை கொஞ்சினர், உன் அப்பா இப்போது சமாதானம் ஆகிவிட்டாரே அதுவே எனக்கு பெரிய சந்தோஷம் என்றாள் சௌமியா. என்ன இருந்தாலும் பூஜா இப்படி செய்திருக்க கூடாது என்றாள். அதெல்லாம் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் என்றார் கிருஷ்ணன். ஜோ சுகன்யா கல்யாண வேலைகளை பூஜாவும் அருணும் சேர்ந்து செய்தானர். ஜோ சௌமியாவையும் கிருஷ்ணனையும் வரவேற்றான். அவர்கள் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான். பழைய களையான முகம் இப்போது இல்லையெனினும் அவன் பெரிய பொறுப்புள்ள மனிதன் ஆகி விட்டான்.

சுகன்யா வந்தாள். தென்றல் நாளை வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள் என்று சொன்னாள் . சுகன்யா ரஷ்மியின் குழந்தையை கொஞ்சினாள். அப்படியே ராகவ் போல இருக்கிறான் உம்மணாமூஞ்சி என்று கிண்டல் செய்தாள். ரஷ்மி ராகவிடம் நீயாவது பூஜாவிடம் சொல்லி அருணை கல்யாணம் செய்து கொள்ள சொல்ல கூடாதா என்றாள். அவளுக்கு இப்போது மியூசிக் மேல் தான் முழு ஈடுபாடு இனி அவளை மாற்ற முடியாது என்றான். நீயும் நானும் தான் மியூசிக் கற்றுக்கொண்டோம் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா என்றாள். சரி நாம் மியூசிக் மாஸ்டர் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிறது நாளை போய் பார்ப்போமா என்றான். நிச்சயம் போவோம் என்றாள். மியூசிக் மாஸ்டர் என்னப்பா கையில் ஒரே ஒரு குழந்தை தான் இருக்கிறது நீ போன வேகத்துக்கு 3 க்கு குறையாமல் குழந்தைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என்றார். ராகவ் எனக்கு ஓகே தான் ரஷ்மி தான் வேண்டாம்னு சொல்லுறா என்றான். எப்படி போகுது வொர்க் எல்லாம் மியூசிக் எல்லாம் விட்டு விட்டாய் எனக்கு ரொம்ப வருத்தம். என் பையனுக்கு அதிலே நிச்சயம் ஆர்வம் இருக்கு அவனுக்கும் நீங்கதான் மாஸ்டர் என்றான் ராகவ்.

தென்றல் தன் கணவனோடு வந்திருந்தாள். அவள் குழந்தை கீர்த்தியை வாங்கி கொண்டான் ராகவ். தென்றல் போலவே இருக்கா குழந்தை என்றான் ராகவ், எங்கே ஜோ அவனை பார்க்க வேண்டும் என்று போய் விட்டாள். பிரதீபாவிடம் ரஷ்மி பேசிக்கொண்டிருந்தாள். சிங்கப்பூர் லைஃப் எப்படி இருந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தாள் பிரதீபா. ராகவ் ரஷ்மி இருவர் இல்லாமல் ரொம்ப போர் அடித்ததாக சொன்னாள். ஜோ சுகன்யா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. பூஜா அப்போது தான் ராகவிடம் பேசினாள். என்ன பண்ணுறது ராகவ் அதுக்குள்ள எனக்கு நிறைய மியூசிக் கமிட்மென்ட்ஸ் வந்துவிட்டது . நானும் பிஸி அவனும் பிஸி. இனி சேர்ந்து வாழ்வதெல்லாம் கஷ்டம் என்றாள். மியூசிக் ஃபெஸ்டிவல் வருகிறது அதில் நானும் அருணும் போட்டி போடுகிறோம் . நீங்கள் எல்லோரும் அவசியம் வர வேண்டும் என்றாள் பூஜா. என்ன பூஜா போட்டி என்கிறாயே ,, போட்டி என்றால் காம்படிஷன் தான், அவன்தான் என்னை விட பெஸ்ட் ஆக இருக்கிறான் .இந்த முறை அவனை தோற்கடிக்க வேண்டும் என்றாள்.

மியூசிக் ஃபெஸ்டிவல் உற்சாகதுடன் துவங்கியது சுகன்யா பூஜா குழுவிலும் , ஜோ அருண் குழுவிலும் இடம் பெற்றிருந்தனர். சௌமியா, பிரதீபா, கிருஷ்ணன், ராகவ், ரஷ்மி ,ஸ்ருதி ஆகியோர் பார்வையாளராக வந்திருந்தனர். நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருந்தது. எல்லாமே மாறிவிட்டதாக ராகவ் சொன்னான். சுகன்யா வேறு லெவல் பெண்ணாக தோன்றினாள். அவளிடம் இருந்த பயம் , கூச்சம் எல்லாம் போய் முழுமையான ஆர்டிஸ்ட் ஆக தோன்றினாள் . ஜோவும் அப்படித்தான் அவனுடைய ஆட்டத்துக்கென தனி ரசிகர்கள் இருந்தனர். குழந்தையை வீட்டில் அம்மாவிடம் விட்டு வந்திருந்தாள் ரஷ்மி. தென்றலும் அவ்வாறே. தென்றல் தனியாக வந்திருந்தாள். அவள் கணவருக்கு இதில் எல்லாம் ஈடுபாடு இல்லையாம் . போட்டி உச்சத்தை எட்டியபோது பிரதீபா விசில் அடித்தாள். கம் ஆன் பூஜா அக்கா என்றாள் . சௌமியா கிருஷ்ணன் ஆளாக்கிய இசை பிள்ளைகள் என்று சொன்னாள். அதெல்லாம் இல்லை அவர்கள் திறமை உள்ளவர்கள் நான் சற்று உதவி செய்தேன் என்றார். மியூசிக் மாஸ்டர் வந்திருந்தார். பூஜா தான் ஜெயிப்பாள் என்று அடித்து சொன்னார். முடிவுகள் அறிவிக்க பிரபல சினிமா ஸ்டார் வந்திருந்தார். மேலும் சிலரும் அந்த போட்டியில் கலந்து கொண்டாலும் அருணும்,பூஜாவுமே பிரதான போட்டியாளர்கள் ஆக இருந்தனர்.

முடிவு அறிவிக்கபட்டது பூஜா வின்னர் என்றும் அருண் ரன்னர் என்றும் அறிவிக்கப்பட்டது. இருவரும் மேடையில் தோன்றினார்கள் அருண் கையால் கோப்பையை வாங்க வேண்டும்என்பது தன் விருப்பம் என பூஜா சொன்னாள் . இருவரும் ஒரு நிமிடம் கட்டிக்கொண்டனர். பூஜாவுக்கு கோப்பையை வழங்கினான் அருண். கரவொலி விண்ணை பிளந்தது. விடை பெற்றுக்கொண்டாள் பூஜா. மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து சௌமியாவிடம் கோப்பையை நீட்டினாள் . அவள் கால்களில் விழுந்தாள். என்ன பூஜா இதெல்லாம் என்றாள் சௌமியா. நீங்கள்தான் என்னை தி ஈகிள்ஸ் குழுவில் சேர்த்துவிட்டது என்பதை நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன் என்றாள். பிறகு எல்லோரிடமும் பார்ட்டி நாளை இருக்கிறது அவசியம் வர வேண்டும் என சொன்னாள். மீடியா அவளை சுற்றி சுற்றி வந்தது. அருண் எதுவும் பேசாமல் நான் வருகிறேன் சௌமியா மேம், நாளை பார்ட்டியில் பார்க்கலாம் என்றான் அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. கண்களை துடைத்தவாறே பார்க்கிங் பகுதிக்கு சென்று காரை எடுத்துக்கொண்டு மறைந்தான்.

மறுநாள் பார்ட்டியில் எல்லோரும் கூடி இருந்தார்கள். ரஷ்மி, தென்றல், ராகவ், ஜோ , சுகன்யா ,சௌமியா,பிரதீபா கிருஷ்ணன் . கிருஷ்ணனை பேச அழைத்தாள் பூஜா . காற்றே என் வாசல் வந்தாய் ஆல்பம் மூலமாக பற்றிய சிறு நெருப்பு பொறி இன்று காட்டுத்தீயாக மாறி உள்ளது. அந்த இசை நெருப்பு அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பூஜா பொறுப்பு என்றார். அடுத்து அருண் பேசினான். இங்கு நான் நிற்பதற்கு காரணமே பூஜா தான். அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை. எங்களுக்குள் பிரிவு இருப்பதாக சில மீடியாக்கள் எழுதுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. அவள் வளர்ச்சியில் நான் பெருமை கொள்கிறேன். அவள் மூலமாக நான் இசை கற்றுகொள்கிறேன் என்றான். கடைசியில் பூஜா பேசினாள். அருண் எவ்வளவு பெருந்தன்மையானவன் என்பது எல்லோருக்கும் தெரியும் வேண்டுமென்றே எனக்காக தன் வாழ்க்கையை வாழாமல் இருக்கிறான். உன்னை எப்படி தவற விடுவேன் அருண் . ஐ லவ் யு சோ மச் என்றாள். அருண் மேடையேறி அவளை தூக்கிக்கொண்டான். முத்தமிட்டான், கல்யாணம் பண்ணிக்கொள்வாயா என்றான் . நிச்சயம் என்றாள். கூட்டம் ஆரவாரம் செய்தது,


எல்லோரும் பூஜா அருண் கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள். அருண் பூஜா கல்யாணம் நல்ல முறையில் நடைபெற கிருஷ்ணன் வேண்டிக்கொண்டிருந்தார். சௌமியாவுக்கும் இதில் சந்தோஷம்தான். ஸ்ருதி,தென்றல் ஜோடி, சுகன்யா ஜோ ஜோடி ராகவ், ரஷ்மி ஜோடி எல்லோரும் வந்திருந்தார்கள். மியூசிக் மாஸ்டர் வந்திருந்தார், கெட்டி மேளம் முழங்க பூஜா கழுத்தில் அருண் தாலி காட்டினான். பிரதீபா எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள். சீக்கிரம் கிருஷ்ணன் வீட்டிலும் குட்டி கிருஷ்ணன் பிறக்க வேண்டும் என ரஷ்மி சொன்னாள். அது கிடக்கட்டும் நாம் ரெண்டாவது ட்ரை பண்ணுவோமே என்று ராகவ் சொன்னான், ஆசையை பார் உனக்கு , நாம் மீண்டும் இசை கற்றுக்கொள்ள துவங்குவோம் எங்கிருந்து விட்டோமோ அங்கிருந்து தொடங்குவோம் என்றாள். அதற்கு நீ இன்னும் நெருங்கி வர வேண்டும் தேவதையே என்றான். அவள் வெட்க சிவப்புடன் அருகில் வந்து நின்றாள் . அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவளும் பதிலுக்கு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். லவ் யு ராகவ் என்றாள்.

நிறைந்தது .. நன்றி! மீண்டும் சந்திப்போம் ..