Sivavin Malare Mounama.. - 11 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 11

Hi,
நான் உங்கள் சிவா,
Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக


கோவை..
The Big Jar Juice Shop.
காலை 11 மணி. நானும் மலரும் Milk shake Order பண்ணி விட்டு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். மலர் Black and Light Blue combination Chudi ல் வந்திருந்தாள். மையிட்ட பெரிய கண்கள், காலையில் தலை குளித்ததால் இன்னமும் கொஞ்சம் ஈரமான கூந்தல், நெற்றியில் Sticker பொட்டு அதன் கீழே சின்னதாக சந்தன கீற்று, அளவான lipstick, மலர் மிகவும் அழகாக என் கண்களுக்கு தெரிய, ரொம்ப நாள் கழித்து அவளை பார்த்ததில் மனதில் ஏதோ Something இனம் புரியாத ஒருவித பரவசமாக இருந்தது. அந்த பெரிய Juice Shop ல் Private Room போல நிறைய Cabins இருக்க, வெளி ஆட்களின் தொந்தரவு ஏதும் இல்லாமல், லவர்ஸ் க்கு ஏற்ற இடம் போல் Privacy யாக இருந்தது. நான் அங்கே வந்ததிலிருந்து வேண்டுமென்றே மலரின் முகத்தை சீரியஸாக பார்த்துக் கொண்டு இருந்தேன். மலர் என் முகத்தை என் கண்களை பார்ப்பது பின் தலையை குனிந்து கொண்டு வேறு எங்கோ பார்ப்பது மறுபடியும் என் கண்களை பார்ப்பது இப்படியே கொஞ்ச நேரம் போக..
பின் அவளே சிணுங்கியபடி, டேய் ரவி போதும்டா நீ Serious ஆ இருக்கிற மாதிரி இப்படி Act பண்றது.. உன் Face க்கு இது Suit யே ஆகலை. விட்டுடு.. என்னால முடியலை.

நான் சிரித்து கொண்டே சரி நீயே சொல்லு.. இப்ப என்ன பண்ணலாம்..

அம்மாடி இப்ப தான் Environment நல்லாயிருக்கு.. நானே.. நீ என் மேல கோவிச்சிகிட்டு இவ்வளவு நாள் எங்கயோ Ahmadabad போயிட்டியே னு Guilty யா வருத்தத்தில இருந்தா.. இங்க வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் என்னயே முறைச்சி பார்த்துகிட்டிருக்க.. அதான் நான் அப்பவே Thousand times Sorry கேட்டேன்ல. போடா, எனக்கு என்னமோ போல இருக்கு, என்று எழுந்து என் பக்கத்தில் Couch ல் வந்து உட்கார்ந்து கொண்டு என் இடது கையை தனது வலது கையால் பிண்ணி பிணைந்து கொண்டு.. இப்ப சொல்லு, போன வேலையெல்லாம் நல்ல படியாக முடிஞ்சதா? ஏற்கனவே எனக்கு உன்னை பத்தின News வந்துட்டு, கல்யாணி சொன்னாள்.. நீ Super ஆ Perform பண்ணி, உன்னய உன் Office ல எல்லாரும் Appreciate பண்ணது., Increment, Performance letter, எல்லாம் தெரியும். அதெல்லாம் ஓகே, But அங்க உன்னய நல்லா கவனிச்சிகிட்டாங்களா? Food லாம் Okay ஆ? Friendly யா இருந்தாங்களா? City எப்படி? என்று
வரிசையாக மலர் கேட்க..

மலர் நான் அங்கே போனதும் உன்னய ரொம்ப Miss பண்ணேன் என்று சொல்லி Gap விட,

மலர் தன் Favourite Smile டன் என்னை ஏறிட்டு பார்த்து என் கைகளில் முத்தமிட்டு பின் என் தோளில் சாய்ந்து கொண்டே என்னையே பார்த்து கொண்டிருக்க, மலர் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் நான் Answer பண்ணிக்கொண்டே வர நடுவில் Friendly என்ற வார்த்தைக்கு ஏனோ எனக்கு நீனா ஞாபகம் வந்து வார்த்தைகள் தடுமாறின.

அப்படியே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். பின் அவளுக்கு அங்கேயிருந்து வாங்கி வந்திருந்த Gift Pack யை கொடுக்க, புன்னகையுடன் Thanks சொல்லி வாங்கி கொண்டு என் மேல் சாய்ந்து கொண்டாள். மலர் என் கைகளை விடாமல் பிடித்து கொண்டு என் தோளில் சாய்ந்த படியே, நடுவில் ரவி உன் பக்கத்தில் இப்படி இருந்தால் ரொம்ப Happy யா, Safe ஆ Feel பண்றேன். மனசுக்கு இதமா இருக்கு. காலம் பூரா இப்படியே உன் கையை பிடிச்சுகிட்டே இருந்திரலாம் போல இருக்கு.

இருக்கலாம்.. ஆனால் இப்படியே இருந்தால் ஃபர்ஸ்ட் எனக்கு கையை வலிக்கும். அப்பறம் Juice Shop Owner ஒத்துக்க மாட்டான். ஏன்னா Night Shop யை மூடணும். அவனுக்கு Family இருப்பாங்கள்ள..

என் பேச்சை கேட்டு சீரியஸாக என்னை நிமிர்ந்து பார்த்த மலர் பொய்க்கோபத்துடன் பட்டென்று என் தோளில் அடிக்க, மலர் கை பட்டு Milk Shake jar Table ல் சாய, கொஞ்சம் போல் இருந்த Juice என்Shirt Pocket லும், மலர் நெஞ்சில் Chudi மீதும் பட,

நான் எவ்வளவு Serious ஆ Feelings ட ஒரு Flow ல சொல்லிகிட்டிருக்கேன். படுவா நீ என்னன்னா.. என்று சொல்லி, பின் என் Shirt கறை யை பார்த்து அச்சச்சோ.. என்று Tissue Paperயை Wet பண்ணி என் Shirtயை அழுத்தி துடைக்க, நானும் என் பங்கிற்கு Tissue Paper எடுக்க,

அதற்குள் மலர், அதான் நான் துடைச்சிகிட்டிருக்கேன்ல, நீ ஏன் இப்ப Tissue paper எடுக்கிற?

இல்ல உனக்கும் Chudi மேல Juice பட்டிருக்கு. அதான் நானும் அதை துடைக்கலாம்னு என்று மலரை பார்த்து கண்ணடித்தபடியே சொல்லி, அவள் நெஞ்சை நோக்கி என் கையை நீட்ட.. முதலில் புரியவில்லை என்றாலும் அடுத்த Second யே புரிந்து கொண்டு.. டேய் படுவா.. என்று பின்னால் தள்ளி சிரித்து,
யப்பா, என்னென்ன திருட்டு வேலை பண்ற.. ஒண்ணும் வேணாம், நானே துடைச்சிக்கிறேன். நீ சும்மா இருந்தாலே போதும் என்றாள் சிரித்தபடி என் குறும்பு தனத்தை ரசித்து கொண்டே.

மலர் என்றேன் குழைவாக

என்ன ரவி..

ரொம்ப நாள் கழிச்சு உன்னய பார்க்கிறேன். Special ஆ ஒண்ணும் இல்லையா?

புரிந்தும் புரியாமலும் என்னை மலர் குழப்பத்தோடு பார்க்க..

நான் அவள் சிவந்த உதடுகளை காண்பித்து.. என் கீழுதட்டை கடித்து காதலுடன் பார்க்க,

புரிந்து கொண்டு, வெட்கம் மேலிட, முகமெல்லாம் சிவந்து போய், உதடு சுழித்து கன்னக்குழி விழ புன் சிரிப்புடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
ஐயோ ரவி இதென்னது இங்கே போய்..

மலர், Atleast நம்ம Tamil Cinema Dialogue மாதிரி இதெல்லாம் Marriage க்கு அப்பறமா னு வாவது னு சொல்லேன்.

டக் கென்று தலையை குனிந்து கொண்டவள்..‌ பின் என்னை நேராக பார்த்து, ரவி நீ என் மேலே உயிரே வச்சிருக்கிறதுனால, என்னைய Deep ஆ Love பண்றதுனால இப்ப சொல்றேன்.
என்னய எடுத்துக்கோ.. ஒரு பொண்ணா இத சொல்ல கூடாதுதான். ஆனாலும் சொல்றேன். கண்ணீரோடு தழுதழுத்த குரலில் உன் கூட படுக்க நான் Ready. நீ பாவம். உன்னய நான் ஏமாத்த விரும்பலை. ஆனால் என்னய Marriage பண்ணிக்கிறேன்னு மட்டும் சொல்லாதே.

எனக்கு தேள் கொட்டியது போல சொரேர் என்றிருந்தது. பட்டென்று விலகி மலரை பார்த்து, கொஞ்சம் கோபத்துடன் சித்தி என்ன இது? நான் உன் கூட படுக்க மட்டும் தான் ஆசைப்பட்டேன்னு நினைச்சியா? உன்னோட உடம்புக்கு க்காகத்தான் உன் கூட பழகிகிட்டிருக்கேன்னு நினைச்சிகிட்டிருக்கியா?

இல்ல ரவி.. இல்ல.. என்று மலர் மறுத்து பேச முற்பட்டாலும் நான் அதை தடுத்து..
நான் என்னைக்கு அந்த Marriage ல உன்ன பார்த்தேனோ அப்பவே உன்னய லவ் பண்ண முக்கியமா உன் மனசை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

எனக்கு தெரியும் ரவி, ஆனா..

உன்னதான் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறதுல உறுதியாவும் இருக்கேன். என் நிர்ணயம் எப்பவும் மாறாது. தெரிஞ்சுமா நீ என்னய அப்படி கேவலமா அந்த மாதிரி.. நான் ஏதோ உன்னய என் கூட படுக்க சொல்லி ஆசைபட்ட மாதிரி..
Kiss ங்கிறது லவ்வர்ஸ் குள்ள நடக்கிற ஒரு அன்யோன்யம்..‌ Symbol of Love..

ஐயோ ரவி அதை நான் தப்பான கண்ணோட்டத்தில பார்க்கலை. என்னோட ரவி க்கு ஆயிரம் முத்தம் வேணும்னாலும் கொடுப்பேன். முத்தம் என்ன எது வேணாலும் கொடுப்பேன். ஏன்னா.. ஏன்னா.. நான் உயிருக்குயிராய் உன்னய லவ் பண்றேன் ரவி. என் மனசு முழுக்க நீ தான் நிறைஞ்சிருக்க. நீ தான் எனக்கு எல்லாமே.. ஆனால் Marriage..

நான் உடனே மலரின் கைகளை பிடித்து கொண்டு அப்பாடா இது போதும் சித்தி.. இன்னைக்கு தான் நீ உன்னோட வாயைத் திறந்து என்னய லவ் பண்றேன் னு சொல்லியிருக்க.. I am So Lucky. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மலர் இன்னும் ஏதோ சொல்ல போக..
நான் சொல்ல விடாமல் அவளை என் பக்கம் இழுத்து என் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள கொஞ்ச நேரம் விசும்பிய படியே இருந்தாள்.

அவள் சமாதானம் ஆகி Normal க்கு வந்த பின் மலரின் முகத்தை என் கைகளால் நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து மலர் I Love You.. என்று சொல்லி பின் அவள் லிப்ஸை ஆசையோடு பார்க்க.. மலர் அப்படியே என் உதட்டில் முத்தமிட்டு என் கீழுதட்டை கவ்வி லிப் லாக் பண்ணினாள். அதை அந்த சமயத்தில் நான் எதிர் பார்க்கவில்லை. உடம்பெல்லாம் ஏதோ ஷாக் அடித்தது போலிருக்க.. முதலில் இந்த Lips kiss மலரிடமிருந்து என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தெளிந்த பிறகு என் மனது உடம்பு எல்லாம் சிலிர்த்து பூரித்தது. ஏதோ சொர்க்கத்தில் மிதப்பது போல இருந்தது. மலரை அப்படியே ஆரத்தழுவி அவள் கைகளை நான் கோர்த்துக் கொள்ள, நிஜமாகவே எங்கள் இருவரது கண்களும் சொருகின. மலரின் உடம்பின் அதிர்வுகள் மேலும் என்னை பரவசப்படுத்தியது. அவளின் மெத்தென்ற மார்பகங்கள் என் நெஞ்சை அழுத்தியிருக்க, இருவரும் தன்னிலை மறந்தோம். மலரின் Perfume வாசனை, Lipstick, உதட்டு வாசனை, அவளின் பிரத்யேக Body smell எல்லாம் என்னை கிறங்கடித்தது. இந்த உலகத்தில் இப்போதைக்கு இது மட்டும் போதும் என்று எனக்கு தோன்றியது. மலரின் இந்த உதட்டு முத்தம் அப்படியே என்னுள் உறைந்து போய் விடக் கூடாதா என்று மனம் ஏங்கியது.

நடுவில் மலர் விலக முற்பட, நான் விடாமல் அவள் Lips யை என் Lips ஆல் Lock பண்ண, என் Feelings யை புரிந்து கொண்டது போல் அவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டே என் பின்னந்தலை முடியை இறுக்கிப் பிடித்துக் கொண்டே எனக்கு ஈடு கொடுத்தாள். மலரிடமிருந்து முதல் Lips kiss என்பதால் எனக்கு உடம்பெல்லாம் ஒரு வித இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மறுபடியும் இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற அச்சத்தில், வந்த வாய்ப்பை விடாமல் பூரணமாக அனுபவித்தேன். மலரும் தன்னை மறந்து போய் இன்பக் கடலில் மூழ்கி தானும் நன்கு அனுபவிப்பது போல இருந்தது.

சிறிது நேரம் கழித்து இருவரும் சகஜ நிலைக்கு திரும்பினோம். மலரை பார்க்க பார்க்க என் முகத்தை தன்னால் நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க, கன்னமெல்லாம் சிவக்க, நடந்ததை நினைத்து, நினைத்து அவள் தனக்குள் சிரித்துக் கொண்டதை பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. அவளை அப்படியே பொங்கி போய் அள்ளி அணைத்து கொண்டேன். என் மார்பில் அப்படியே மலரை சாய்த்துக் கொள்ள.. மலரின் கூந்தல் பூவின் வாசம் எனக்கு போதையேற்றியது. அவள் தலையில் நெற்றியில் முத்தமிட்டபடியே இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து மலர் என்னை பார்த்து ரவி, என்னமோ என்னய சொன்னியே.. இப்பவும் சொல்றேன் உனக்கு ஒரு முத்தம் என்ன ஓராயிரம் முத்தம் கூட கொடுப்பேன். நான் உனக்கு தான். ஆனால் என்னய Marriage பண்ணிக்க சொல்லி மட்டும் Compel பண்ணாத என்றாள்.

எனக்கு மறுபடியும் திக் கென்றது.
என்ன மலர் இது, மறுபடியும் முருங்கை மரம் ஏறுற.. இப்பதானே இரண்டு பேரும் அவ்வளவு சந்தோஷமா இருந்தோம். இந்த சந்தோஷம் நம்ம வாழ்நாள் பூரா நிலைச்சி இருக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுக்குள்ள..?

எதுவும் பேசாமல் தலையை வேறு பக்கம் திரும்பிக் கொண்டு பொங்கி வரும் தன் கண்ணீரை தன் கீழுதட்டை கடித்து கொண்டு, கைகளால் மறைக்க முயன்றாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது மலர் என்னய லவ் பண்றாள், தன்னையே எனக்கு தர Ready ஆகவும் இருக்கிறாள். ஆனால் கல்யாணம் என்று வரும் போது பிடிவாதமாக வேணாம் னு சொல்றாள். எனக்கு குழம்பியது. இவ்வளவு நடந்தும் கல்யாணம் வேணாம்னு சொல்றானா ஏதோ Strong Reason இருக்கனும். எந்த பொண்ணாவது இப்படி சொல்லுவாளா? Some thing Fishy.. அதை நாம கண்டு பிடிக்கனும். ஆனால் ஒரு சின்ன சந்தோஷம்.. என்னய லவ் பண்றேன் னு தான் வாயாலே சொல்லிட்டா.. அது போதும். இந்த பிரச்சினை என்னனு அலசி ஆராய்ந்து Solve பண்ணிட்டா.. அப்பறம் Marriage தான். கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

உங்கள் சிவா.

பகிரப்பட்ட

NEW REALESED