தி ஈகிள்ஸ் குழுவின் காற்றே என் வாசல் வந்தாய் ஆல்பம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. எல்லா பாட்டுக்களும் நல்ல ரீச் கிடைத்தது. கிருஷ்ணன், சௌமியா உட்பட எல்லோரும் மகிழ்ந்து போனார்கள்.மியூசிக் ஆல்பம் விமர்சனமும் மோசமில்லாமல் இருந்தது. கிருஷ்ணன் ஓரளவுக்கு நல்ல லாபம் அடைந்தார். என்ன ராகவ் யோசிக்கிறாய் என்றாள் ரஷ்மி. பேசாமல் படிப்பை விட்டு சினிமாவுக்கு போய்விடலாமா ஆசையை பாரு.. படிப்பு முடிச்சு நல்ல வேலைக்கு போய் என்னைய கல்யாணம் பண்ணுற வழியை பாரு என்றாள். கிருஷ்ணன் தி ஈகிள்ஸ் டீம் மொத்தமும் கூப்பிட்டு பார்ட்டி தந்தார். பிரதீபாவுக்கு நன்றி சொன்னார். பூஜாவுக்கும், அருணுக்கும் மோதிரம் அணிவித்தார். ஆல்பம் யுட்யூப் மூலம் பல லட்சம் பேரை சேர்ந்தது. பூஜா அப்பா கிருஷ்ணனுக்கு நன்றி சொன்னார். காலேஜ் ஃபைனல் இயர் ப்ராஜக்ட் சம்பந்தமாக எல்லோரும் சென்னைக்கு கிளம்பினர் . அருண்,ஜோ, ராகவ் ஒரு குழுவாகவும்,பூஜா, ரஷ்மி ,சுகன்யா ஒரு குழுவாகவும் சென்னைக்கு கிளம்பினர். தென்றல்
காலேஜிலேயே ப்ராஜக்ட் செய்தாள்.
சௌமியாவுக்கு விவாகரத்து கிடைத்து விட்டது . ஆனால் அவள் கொண்டாடவில்லை. 5 வருட காதல் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போனதை எண்ணி அழுதாள். கிருஷ்ணனும் பிரதீபாவும் அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று புரியாமல் தவித்தனர். அவள் தன்னையே நொந்து கொண்டாள். ஆண்ட்டி எல்லாம் நல்லதுக்குத்தான் என்றாள் பிரதீபா . இப்போது அவளை எங்கேஜ்மெண்ட்டுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என நினைத்தார் கிருஷ்ணன். சென்னையில் ஓரளவு வசதியான ரூமில் தான் அருண், ராகவ், ஜோ தங்கியிருந்தனர். பிரதீபா தான் ராகவுக்கு ஃபோன் பண்ணி சௌமியாவுக்கு விவாகரத்து கிடைத்த விஷயத்தை சொன்னாள். ராகவ் சௌமியா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் பிறக பேசலாம் என்று நினைத்தான். அதையே பிரதீபாவிடமும் சொன்னான். அருனுக்கும் பூஜாவுக்கும் வேறு ஆல்பங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன அவற்றை மறுத்து விட்டார்கள் பூஜாவும் அருணும்.
வீக்கெண்ட்களில் சந்தித்து கொண்டார்கள் அருண், பூஜா மற்றும் ரஷ்மி ,ராகவ் . என்ன ரஷ்மி எப்படி இருக்கிறது சென்னை பரவாயில்லை நீ இருப்பதால் எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்றாள். சுகன்யா அமைதியாய் இருந்தாள். மியூசிக் பாண்ட் இல்லாமல் வாழ்வே சரியாக இல்லை என்றாள் சுகன்யா. பூஜாவும் அதையே சொன்னாள். தென்றலுக்கு சென்னை வர பிடிக்கவில்லையா சுகன்யா, அவள் வருகிறேன் என்றுதான் சொன்னாள். அவள் அப்பாதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.ம் அவ்வப்போது தென்றலிடம் ஃபோன் பண்ணி பேசு ரஷ்மி என்றான் ராகவ். ஆல்பம் நன்றாக போவதாக கிருஷ்ணன் அருணுக்கு ஃபோன் பண்ணி தெரிவித்தார். உனக்கும் பூஜாவுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார், என்ன சார் நீங்கதான் எங்களுக்கு இவ்ளோ பெரிய வாய்ப்பு கொடுத்தீங்க என்றான், அது இருக்கட்டும் சார் சௌமியா மேம் கூட எங்கேஜ்மெண்ட் எப்போ சார். அதை பத்தி சொல்லுற மாதிரி இல்லை. சௌமியா இன்னும் அப்செட் ஆகத்தான் இருக்காங்க என்றார். சரி சார் நான் பேசி பார்க்கிறேன் என்றான், சரி அருண் ரொம்ப தாங்க்ஸ் என்றார்.
சௌமியா மனதில் எதிர் காலம் பற்றிய சிந்தனை அலை அலையாய் ஓடியது. மறுபடி ஒரு காதல் தோல்வி என்றால் தன்னால் தாங்க முடியாது என நினைத்தாள் . பேசாமல் இப்படியே இருந்து விடலாமா எனவும் யோசித்தாள். ரஷ்மி ஃபோன் செய்திருந்தாள். சொல்லு ரஷ்மி என்னை விட்டுட்டு போய்விட்டாயே என்றாள் சௌமியா. அத விடுங்க மேம் ஏன் இன்னும் சோகமா இருக்கீங்க. நீங்க கல்யாணம் பண்ணவில்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி இருக்காதீர்கள் என்றாள். எங்களுக்கு கஷ்டமாய் இருக்கிறது என்றாள்.ரஷ்மி என்னுடைய நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது வெளியில்தான் நான் சிரித்து பேசுகிறேன் என்றாள். நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் . நான் அடிக்கடி பேசுகிறேன் பை மேம் என்றாள். பிரதீபாவும்,கிருஷ்ணனும் சௌமியாவோடு கோவிலுக்கு வந்திருந்தனர். சௌமியா உருக்கமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். பிரதீபாவை நினைத்தாள் இன்னும் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது. பிரதீபா குங்குமத்தை சௌமியாவுக்கு வைத்து விட்டாள். அடுத்த வாரம் குல தெய்வம் கோவிலுக்கு போகிறோம் நீங்களும் வருகிறீர்கள் என்றார் கிருஷ்ணன். இங்கே தஞ்சாவூர் பக்கம் தான் . காரிலேயே போய்விட்டு வந்து விடலாம் என்றார்.
என்ன ரஷ்மி மேம் என்ன சொன்னார்கள் . அவர்கள் மனதளவில் உடைந்து போயிருக்கிறார்கள். உடனே இன்னொரு கல்யாணம் எல்லாம் சாத்தியமில்லை. கொஞ்சம் டைமே எடுக்கும். கிருஷ்ணனின் குலதெய்வம் கோவிலுக்கு மூவரும் பயணமானர்கள். பிரதீபா சௌமியாவை பரிவுடன் பார்த்துக்கொண்டாள். கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்கள். இங்கே பக்கத்தில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது போய் வருவோமா என்றார் கிருஷ்ணன்.சரி என்று இருவரும் சொன்னார்கள். அது மலை உச்சியில் இருந்தது. நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள் நான் போய் வருகிறேன் என்றார். உங்களுக்கும் சேர்த்து நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார். பிரதீபா பாவம் என் அப்பா என்றாள். மலை விட்டு இறங்கி வந்து குங்குமத்தை கொடுத்தார் கிருஷ்ணன். நீங்களே வைத்து விடுங்கள் என்றாள் சௌமியா. அவர் ஒரு நிமிஷம் தயங்கினார். பிறகு சௌமியா நெற்றி பொட்டில் குங்குமம் வைத்தார். குலதெய்வம் நல்ல பலனை கொடுத்திருக்கிறது என்று சொன்னாள் பிரதீபா.
விஷயத்தை கேள்விபட்டதும் அருண்,பூஜா , ரஷ்மி, ராகவ், ஜோ அருண் சுகன்யா எல்லோரும் மகிழ்ந்தனர். எங்கேஜ்மெண்ட் கூடிய சீக்கிரம் நடக்கும் என பிரதீபா கூறினாள். ஒரு வாரத்தில் எங்கேஜ்மெண்ட் invitation வந்துவிட்டது. கிருஷ்ணன் எல்லோருக்கும் தனித்தனியே ஃபோன் பண்ணி அவசியம் வருமாறு சொன்னார். டிக்கெட் புக் செய்தனர் எல்லோரும். அப்போது எல்லோரும் சேர்ந்து பாட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எல்லோரும் இரண்டு நாட்கள் முன்பாகவே வந்து விட்டனர்.சௌமியா வெட்க சிவப்பில் இருந்தார். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று அவள் மனம் படபடத்துக்கொண்டிருந்தது. ரஷ்மியும், ராகவும் அவளை கிண்டல் செய்தனர். ரொம்ப வெக்கபடாதீங்க மேம் என்றனர். தி ஈகிள்ஸ் குழுவின் கச்சேரியும் நடை பெற இருந்ததால் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்தது. ஜோ பிரமாதமாக டான்ஸ் ஆடினான். தென்றல் வந்திருந்தாள். அவள் அதிகம் பேசவில்லை. அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட்டதாக சுகன்யாவிடம் சொன்னாள். சுகன்யா ராகவ் மாதிரி இருப்பானா மாப்பிள்ளை என்றாள் சுகன்யா. நீ வேற ஏண்டி டென்ஷன் பண்ணுறே என்றாள்.
ராகவ், ரஷ்மி ஆட்டம் போட்டனர். மியூசிக் மாஸ்டர் வந்திருந்தார். ஆல்பம் பற்றி ரஷ்மியிடம் அரைமணி நேரம் பேசினார். நீயும் ராகவும் அவ்வாறு நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பூஜா அருண் கூட சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டாள். பூஜா அப்பா வந்திருந்தார், இதனால் பூஜா கொஞ்சம் அடக்கியே வாசித்தாள் . சௌமியா எல்லோருக்கும் மனமார நன்றி தெரிவித்தாள் . என்னால் ஆட முடியவில்லையே என்று பிரதீபா ராகவிடம் சொன்னாள். எல்லாம் சரி ஆகிவிடும் என்றான் ராகவ். கிருஷ்ணன் சௌமியாவுக்கு மாலை அணிவித்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். மோதிரம் மாற்றிக்கொண்டனர். அங்கே மண்டபமே உற்சாக வெள்ளத்தில் மிதந்தது. ரஷ்மி எங்கே இருக்கிறாய் ராகவ் என்றாள். இங்கே மாடியில் ஒரு கட்டிங் போடலாம் என்று ஜோ கூப்பிட்டான் என்றாள். அதெல்லாம் வேண்டாம் நான் இப்போதே வருகிறேன் என்றாள். மேலே போய் பார்த்த போது யாருமில்லை. எங்கே போய் தொலைந்தாய் என்று மறுபடி போனில் கேட்டாள். உன் முதுகுக்கு பின்னாடி தான் இருக்கிறேன் ஓவர் என்றான் ராகவ். சீ நான் பயந்தே விட்டேன் என்றாள். அவளை தூக்கி சுற்றினான். நமக்கு இன்னைக்கு ஒன்னுமில்லையா ? ஆமா ஃபர்ஸ்ட் நைட் பாரு என்றாள். ம் நானே எடுத்துக் கொள்கிறேன் என்று அவள் உதட்டில் முத்தமிட்டான் பிறகு கழுத்தில் முத்தமிட்டான்.
பூஜா நல்ல பிள்ளையா இருக்கணும் அருண் அப்பா இருக்கிறார் என்றாள். நான் தான் ஒன்றும் பண்ணவில்லையே என்றான். நீதான் மக்கு ஆச்சே என்று சொல்லிவிட்டு ஓடினாள். அவளை துரத்தினான். அவளை துரத்தி பிடித்து முத்தமிட்டான். கசங்குது பாரு டிரஸ் என்றாள்.ம் அயன் பண்ணிக்கலாம் என்றான். அப்பா என்ன சொன்னாரு. இவனை விட்டா வேறு இளிச்சவாயன் கிடைக்க மாட்டான் அப்படின்னு சொன்னார். ம் சொல்லுவாரு சொல்லுவாரு என்று அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தான்.நிச்சயதார்த்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுகன்யா கூட ஒரு வாழ்த்துப்பாடலை பாடினாள். சௌமியா நான் உன்னை கடைசி வரை நேசிப்பேன் என்றார் கிருஷ்ணன். எல்லோரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். பூஜா, அருண் மற்றும் ரஷ்மி ,ராகவ் ஜோடியாக போட்டோ எடுத்துக்கொண்டனர். இரவு டின்னர் களை கட்டி இருந்தது. சௌமியா சீக்கிரம் வீட்டை காலி செய்தது விட்டு என் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்றார் கிருஷ்ணன். ம் நான் ஏற்பாடு செய்கிறேன் என்றாள் சௌமியா. பூஜா அருணுக்கு ஊட்டி விட்டாள். ராகவ் ரஷ்மியை பார்த்தான். அதெல்லாம் சும்மா நம்ம கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் பாரு நான் உன்னை எப்படி கவனிக்கிறேன் என்று சொன்னாள் ரஷ்மி. எல்லோரும் சௌமியாவை பார்த்து சொல்லி விடை பெற்றுக்கொண்டார்கள். சௌமியா எல்லோருக்கும் நன்றி சொன்னாள். சௌமியாவுக்கு அவர்களை பிரியவே மனமில்லை.