Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 37

எதிர்பார்த்த மாதிரி அருண், ஜோ, சுகன்யா மற்றும் பூஜாவின் ப்ராஜக்ட் 2 மாதங்களில் நிறைவு பெற்றது. ரஷ்மி, ராகவ் ப்ராஜக்ட் லேட் ஆனது. ரஷ்மி இன்னும் 6 மாதத்தில் படிப்பு முடிந்துவிடும் அப்புறம் என்ன என்றான் ராகவ். வேலைக்கு போக வேண்டியதுதான் என்றாள். ம் அப்படியா அப்போது உன்னை தினமும் சந்திப்பது கஷ்டம் அப்படித்தானே என்றான். டேய் இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது என்றாள். என் உலகமே நீதானே என்றான். அவள் அவனை அணைத்துக்கொண்டாள்.நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்டா என்றாள்.நாளைக்கு எல்லோரும் ஊருக்கு போகிறார்கள் தெரியும் அல்லவா என்றாள் ரஷ்மி.ம் தெரியும் என்றான் ராகவ், நாம் மட்டும் இங்கு இருப்பது போர் அடிக்கிறது என்றாள் ரஷ்மி. நாம் ஒரு நாள் பாண்டிச்சேரி போய் வருவோமா என்றான். நிச்சயமாக என்றாள் ரஷ்மி. மறுநாள் ரயில்வே ஸ்டேஷன் போயிருந்தார்கள் எல்லோரையும் ஊருக்கு அனுப்பி வைக்க. அருணும் பூஜாவும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். ராகவ் பார் அருண் இந்த பிரிவு கொஞ்ச நாள் தான் பூஜா நீயும் கவலைப்படாதே என்றான். சுகன்யா ஜோவுடன் பேசிக்கொண்டிருந்தாள். எல்லோருக்கும் விடை கொடுத்தார்கள் ராகவும், ரஷ்மியும்.


ரஷ்மியும், ராகவும் பைக்கில் பாண்டிச்சேரி சுற்றி பார்க்க புறப்பட்டார்கள். அங்கிருந்த போட் ஹவுஸ் , ஆசிரமங்கள், சர்ச்கள் போன்றவற்றை பார்வையிட்டனர். என்னவோ என் மனம் உன்னை நினைத்து பதட்டமாகவே இருக்கிறது என்றாள் ரஷ்மி. எங்கே பார்ப்போம் என்று அவள் நெஞ்சில் காது வைத்தான். அது அப்படித்தான் துடிக்கிறது என்றான். நீ விளையாட்டு பிள்ளையாக இருக்கிறாய் அதுதான் என கவலையாக இருக்கிறது என்றாள். நாம் பெரியவர்கள் ஆகி விட்டது போல பேசுகிறாய் என்றான். என் அப்பா என்ன சொல்லுவாரோ எனவும் யோசனை ஆகிய இருக்கிறது. நமக்கு சப்போர்ட் ஆக சௌமியா மேம் இருக்கிறார்கள் கிருஷ்ணன் இருக்கிறார் என்றான். நாம் நமது சொந்தக்காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் அப்போதுதான் எல்லோரும் நம்மை மதிப்பார்கள் என்றாள் ரஷ்மி. இப்போது எதற்க்கு இவ்வளவு சீரியஸ் ஆக பேசுகிறாய். இந்த அலைகள் பற்றி பேசு அவற்றின் அழகை பற்றி பேசு என்றான் ராகவ்.
ம் நீ திருந்த போவதில்லை என்று விலகி சென்றாள். அவளை இழுத்து அணைத்தான் இன்னும் ஒரு வருஷத்தில் நான் வேலைக்கு போகிறேன் பிறகு நம் கல்யாணம்தான் ஓகே வா இது என் பிராமிஸ் என்றான். நிச்சயமா நிச்சயம் என்றான்.
இன்னும் 2 வாரத்தில் என்னுடைய ப்ராஜக்ட் முடிந்து விடும் நான் ஊருக்கு போய்விடுவேன் என்றாள். இன்னும் இரண்டு வாரம் தானா ? எனக்கு இன்னும் டைம் எடுக்கும் என்றான்.

மகாபலிபுரம் அடுத்த வாரம் போவோமா என்றாள். ம் போவோம் ஆனால் அப்போதும் நீ அழுது கொண்டிருக்க கூடாது எனக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்றான். டேய் என்னை கிண்டல் பண்ணுகிறாயா என்றாள் ரஷ்மி. முத்தங்களால் தண்டனை கொடு ரஷ்மி இப்படி கிள்ளாதே என்றான் ராகவ். பிரதீபா போனில் பேசினாள். அடுத்த மாசம் கிருஷ்ணனுக்கு சென்னையில் சில வேலைகள் இருப்பதால் வர இருக்கிறார் நானும் வருகிறேன் வந்து உங்களை பார்க்கிறேன் என்றாள். அட்ரஸ் அனுப்பி வையுங்கள் என்றாள். ரஷ்மியுடன் மகாபலிபுரம் சென்றான் . அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தான். சென்ற முறை போலல்லாமல் இந்த முறை அவனோடு நெருக்கமாக இருந்தாள். என்ன ரஷ்மி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாய் அடுத்து உன்னை பார்க்க ஒரு மாதமாவது ஆகும் அதுதான் கவலை ஆக இருக்கிறது என்றாள். பிரதீபாவும், கிருஷ்ணன் சாரும் சென்னை வருகிறார்களாம் என்றான். அவர்களையும் அழைத்துகொண்டு சுற்றிக்காட்டு என்றாள் ரஷ்மி. மகாபலிபுரம் சிற்பங்களை வேடிக்கை பார்த்தார்கள். கடலலையில் காலை நனைத்தார்கள். போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்கள்.


ரஷ்மி அந்த வாரக்கடைசியில் ஊருக்கு புறப்பட்டாள். அவள் ரூமுக்கு காலையிலேயே வர சொல்லிவிட்டாள். அவள் ரூமில் யாரும் இல்லை. அவள் மட்டும் இருந்தாள். குறும்பு பண்ணக்கூடாது. நாம் குளித்து விட்டு கோவிலுக்கு போவோம் என்றாள். இருவரும் ரெடி ஆகி அருகில் இருந்த கோவிலுக்கு சென்றனர். ரஷ்மி ரொம்ப நேரம் வேண்டிக்கொண்டிருந்தாள். என்னதான் வேண்டினாய் ரஷ்மி என்றான். அதெல்லாம் ரகசியம் என்றாள். ரூமுக்கு வந்த போது இரு ஒரு அரை மணி நேரம் டிபன் பண்ணி விடுகிறேன் என்றாள். கிச்சன் உள்ளே இவனும் சென்றான். அவளுடைய இடுப்பில் கையை போட்டான். என்ன வேணும் தம்பிக்கு ? அதற்கு மேல் கையை கொண்டு போனான். டேய் ஏண்டா இப்படி பண்ணுற என்றாள். சரி வேணாம்னா போ என்றான். டேய் சமத்தா இருக்கணும் சமைத்து முடிக்கிற வரை என்றாள். சரி இந்த இந்த தேங்காய் தண்ணி குடி என்றாள். அவள் கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தன . அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
டிபன் ரெடி வா என்றாள். இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். ஏதாவது மூவி போகலாமா என்றாள். வேண்டாம் லேப்டாப் ல எதுவும் மூவி பாக்கலாம் என்றான். ஃபிஷ் ஸ்டோரி பாக்கலாமா நிச்சயமா எனக்கு பிடிச்ச படம் என்றாள். மதியம் ஹோட்டல் ஒன்றில் போய் பிரியாணி சாப்பிட்டார்கள். தூக்கமா வருதுடா உன் மடியில் படுத்துக்கட்டா நீ ஏதும் பண்ண மாட்டாயே என்றாள். நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் என்றான்.

இரவு 9 மணிக்கு டிரைன் ரஷ்மிக்கு . ரஷ்மி அழ தொடங்கி விட்டாள். அவளை சமாதானப்படுத்தினான். இரவு 8 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் போய்விட்டார்கள். அவளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுத்தான் ராகவ். அவளை பிரிவது அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. அவள் ஃபோன் பண்ணுடா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடு என்றாள். டிரைன் புறப்படும் முன்
அவளுக்கு முத்தமிட்டான். அவனுடைய கண்களும் கலங்கி விட்டன. ராகவ் இன்னும் ஒரு மாதம் ரஷ்மி இல்லாத தனிமையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று உணர்ந்திருந்தான். சௌமியாவிடம் இருந்து ஃபோன் வந்தது வீடுகாலி செய்து விட்டதாகவும் இப்போது கிருஷ்ணன் வீட்டில் தான் இருப்பதாகவும் சொன்னாள். ரொம்ப சந்தோஷம் மேம் என்றான். ரஷ்மி இல்லாமல் எதுவுமே ஓடவில்லை என்று சொன்னான். நாளைக்கு அங்கு வந்துவிடுவாள், நீங்கள்தான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றான். நீ ஒன்றும் கவலைப்படாதே நான் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்றாள் . கிருஷ்ணன் சார் அடுத்த வாரம் சென்னை வருகிறார் என்றாள் சௌமியா. பிரதீபா ஏற்கனவே சொல்லிவிட்டாள் என்றான்.


பிரதீபாவும், கிருஷ்ணனும் சென்னை வந்து விட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் லொகேஷன் அனுப்பி இருந்தார்கள். இவன் போய் பார்த்தான். வாப்பா இவள் துடியாய் துடிக்கிறாள் உன்னை பார்க்க என்றார். என்ன பிரதீபா வேறென்ன ஸ்பெஷல் என்றான், அண்ணா எனக்கு scholorship கிடைத்திருக்கிறது சிங்கப்பூர் மேல்படிப்புக்கு போக. அப்பா வேண்டாம் என்கிறார். நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றாள். முதலில் வாழ்த்துக்கள். நீ சௌமியா ஆண்ட்டியையும் அழைத்து போனால் என்ன என்றான்.இது ஒரு நல்ல யோசனை என்றாள் பிரதீபா. இரண்டு பேரையும் பிரிந்து இரண்டு வருடமெல்லாம் இருக்க முடியாது என்றார் கிருஷ்ணன். அப்பா பிளீஸ் அப்பா என்றாள் பிரதீபா. சரி இவ்வளவு தூரம் சொல்வதால் யோசிக்கிறேன் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்றார். நான் சௌமியா விருப்பத்தையும் கேட்க வேண்டும் என்றார். சரி சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது உங்கள் இருவரையும் பீச்சில் விட்டு போகிறேன் . வேலை முடிந்ததும் நானே வந்து அழைத்து போகிறேன் என்றார். சரி நீ ஏதாவது சாப்பிட்டாயா என்று கேட்டு ஆர்டர் செய்தார், பிரதீபா தான் எழுதிய சில ஸாங்க்ஸ் காண்பித்தாள் . எல்லாம் நன்றாக இருந்தது.

பீச் காற்று முகத்தில் அடித்தது . அண்ணா எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் உங்களை ரஷ்மி அக்காவை எல்லாம் விட்டு போகிறோம் என வருத்தமாக இருக்கிறது. அதெல்லாம் அங்கு போனவுடன் நீ எங்களையெல்லாம் மறந்து விடுவாய் என்றான். சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் அண்ணா. அப்புறம் அருண் அண்ணா பூஜா அக்கா எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தாள் . வெளிநாடு போக வேண்டும் என்றால் எல்லாவற்றையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் பிரதீபா என்றான். பிடிவாதம் பிடிக்க கூடாது என்றான். ம் ம் புரிகிறது . கிருஷ்ணன் வேலை முடிந்து வந்து விட்டார். இவர்களோடு பீச்சில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் மறுநாள் மாலை புறப்படுவதாக இருந்தார்கள். சரி போவோமா என்று கேட்டார். பிரதீபாவுக்கு கடற்கரையை விடவே மனசில்லை. பிறகு ஒரு வழியாக கிளம்பினார்கள். மறுநாள் அவர்கள் கூடவே இருந்தான், பிரதீபா எல்லோருக்கும் ஏதோ ஷாப்பிங் பண்ணிக்கொண்டு இருந்தாள்.

கிருஷ்ணன் காரில் வந்திருந்ததால் அவரே வண்டி ஓட்டி வந்திருந்தார். பிரதீபா அண்ணா ஊருக்கு வந்ததும் வீட்டுக்கு வாருங்கள் என்றாள். நிறைய பேச வேண்டி இருக்கிறது என்றாள். சௌமியாவுக்கு ஃபோன் செய்து சென்னையை விட்டு கிளம்பிவிட்டதாக சொன்னாள் . கிருஷ்ணன் கொஞ்சம் பணம் கொடுத்தார். எதற்கு அதெல்லாம் என்று சொன்ன போதும் பாக்கெட்டில் திணித்து விட்டார். இருக்கட்டும் இருக்கட்டும் நீயும் என் பையன் மாதிரி தானே என்றார். ரூமுக்கு போகவே பிடிக்கவில்லை வெறுமையாக இருந்தது. ரஷ்மிக்கு ஃபோன் செய்தான். என்ன ரஷ்மி ஏன் ஊருக்கு போய் ஃபோன் பண்ணவில்லை என்றான். அப்பா இங்கே எனக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறார் என சொல்லி அழுதாள் . இவனுக்கு தலையில் இடி இறங்கியது போல இருந்தது .