Sivavin Yoga Ellam Maya Part 10 books and stories free download online pdf in Tamil

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 10



நான் உங்கள் சிவா..
மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com


நான் கார்த்தி...


என் வாழ்நாளில் இந்த மாதிரி அற்புதமான தருணத்தை, சந்தோஷத்தை நான் எப்பவும் அனுபவித்ததில்லை.
Car ல் என் பக்கத்தில் என் மனசுக்கு பிடித்த அழகான மாயா.. நான் மிகவும் நேசித்த, ஒரு சமயத்தில் எங்கே என் லவ் வை Reject பண்ணிடுவாளோ என்று பயந்து பயந்து.. இருந்து, அப்பறம் அவளுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வம்பிழுத்து கொண்டு.. அவளின் கோபமான முகம்.. பேச்சுக்கள்.. இதெல்லாம் ஞாபகம் வர, சிரித்து கொண்டே அவளின் வலக்கையை நான் drive செய்து கொண்டே எடுத்து அழுத்தமாக முத்தமிட.. மாயா என் கண்களில் இருந்த ஆனந்தத்தை பார்த்து என்னாச்சுடா? என்றாள்.

நான் ஒண்ணுமில்லை என்று தலையாட்டியபடியே.. பழைய ஞாபகங்கள்.. உன்னை வம்பிழுத்தது, நம்ம சிறு சிறு சண்டைகள்.. உன் கோபம்.. முதல் முத்தம்.. .. உன் கோபமான பார்வை, நான் பயந்தது.. ஸ்ருதி யை வம்பிழுத்தது.. எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.

மாயா என்னை செல்லமாக அடித்து... என் தோளில் முத்தம் கொடுத்து என் இடக்கையை தன் கையால் கோர்த்து கொண்டு என் மேல் சாய்ந்து கொண்டாள்.

இப்ப என்னோட அருமை மாயா, உயிருக்கு உயிரான மாயா.. என்னை லவ் பண்றா.. என் கூடவே இருக்கிற ங்கிறதை நினைக்கும் போது.. நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு மாயா.

டேய் நீ என்னய ரொம்ப melt பண்றடா.
எனக்கும் நீ என் Life ல வந்தது.. நீ எனக்கு கிடைச்சது., I am so lu..c.. k..y..
என்று சொல்லும் போதே அவள் குரல் தடுமாறியது..

அப்போது நாங்கள் ஒரு traffic signal ல் நின்று கொண்டிருந்தோம். நான் திரும்பி மாயா வை பார்த்த போது அவள் தன் வலப்புறம் என் பக்கத்தில் நின்றிருந்த THAR Jeep ல் யாரையோ பார்த்து மிரளுவது தெரிந்தது. நான் நன்றாக திரும்பி யார் என்று பார்க்கையில் ஒரு young man வயது 28 லிருந்து 32 இருக்கலாம். அவனும் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
என் இடது கையை பிடித்திருந்த மாயா வின் கைகள் பயத்தில் என்னை இறுக்கி.. மெதுவாக கிரண்.. என்றாள். அதற்குள் signal clear ஆக.. car move ஆக, அவன் எங்களை பார்த்தபடியே Right side ல் திரும்ப.. நாங்கள் straight ஆக proceed ஆனோம்.

என்ன மாயா? யார் அது கிரண்? நீ ஏன் பயப்படுற?

மாயா ஒன்றும் பேசவில்லை.

இதற்குள் hotel வர, car யை Park பண்ணிவிட்டு உள்ளே போய் menu பார்த்து lunch order பண்ணிவிட்டு sofa ல் உட்கார்ந்து .. மாயா கொஞ்சம் cool ஆனதற்கு பிறகு.. மாயா வின் கைகளை பிடித்து கொண்டு..

என்ன மாயா, என்ன problem? எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன். நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் என்றேன்.

என்னை நிமிர்ந்து பார்த்து, பயத்துடன் அவன் பேர் கிரண்..

கார்த்திக், எனக்கு அப்பா கிடையாது. என் சின்ன வயசிலேயே தவறிட்டார்.. அம்மா நான் Bangalore outer ல சொந்தவீடு, மேலே வீடு கட்டி வாடகை யும் வருது. அம்மா வோட தம்பி என் Uncle Family தான் அம்மா வை அங்க பார்த்துகிறாங்க. கொஞ்சம் விவசாய நிலமும் எங்களுக்கு இருக்கு. மாமா தான் எல்லாம் பார்த்துக்கிறாரு.

நான் Bangalore ல college படிக்கும் போது
என் பின்னாடியே சுத்தினவன் தான் இந்த கிரண் என்று.. flashback மொத்தமும் சொன்னாள். அதிலிருந்து..

மாயா Bangalore ல் UG பண்ணும் போது, கிரண் அவ collegemate, மாயா பின்னாடியே சுத்தி love பண்றேன், நீயும் love பண்ணனும் னு ரொம்ப நாள் torture கொடுத்து.. அவன் கையெல்லாம் blade ஆல் அறுத்து.. sentimental block பண்ணி.. ஒரு பலவீனமான சமயத்தில் மாயா அவன் love யை accept பண்ற level க்கு போயி... அதற்கப்புறம் அவன் நிஜ சுயரூபம் தெரிய வர.. like மாயா வேற யார்கிட்டேயும் பேசகூடாது, modern dresses போடக்கூடாது,, Cell phone calls, chat check பண்றது, even அவளுக்கு girl friend கூட இருக்ககூடாது பேசக்கூடாது போன்ற orders போட்டு.. அவளை கஷ்ட்டபடுத்தி..
கொஞ்ச நாள்ல, மாயா எல்லாம் தெரிஞ்சி அவனை விட்டு வெளியே வர.. அவன் suicide attempt பண்ண.. college ல மாயா னாலதான் கிரண் suicide attempt னு பரவ.. police case.. local ல தலைகாட்ட முடியாமல், நரக வேதனையை அனுபவித்து.. கிரண், மாயா நீ எங்க போனாலும் உன்னை நான் விடமாட்டேன் னு அவன் சவால் விட..

அப்பறமா மாயா PG க்கு இங்கே coimbatore வந்து course complete பண்ணி, கோவை ரொம்பவும் பிடிச்சி போக, ஸ்ருதி மாதிரி நல்ல ஃப்ரண்ட்ஸ் கிடைக்க, நல்ல buisness oportunity யும் வர, இங்கேயே settle ஆனது எல்லாம் விவரமாக சொன்னாள்.

சரி இப்ப அதுக்கு என்ன மாயா?
எதுக்கு பயப்படுற..? நான் தான் உன் கூடவே இருக்கேன் ல. அவன் உன்னைய எதுவும் பண்ண முடியாது.

இல்ல கார்த்தி.. அவன் ஒரு sadist. அவனுக்கு ஏதாவது தேவைனா எந்த extream level க்கும் போவான். இன்னைக்கு அவன் நம்மளை பார்த்த பார்வை எனக்கு உடம்பே நடுங்குது.

மாயா அதெல்லாம் அங்க Bangalore ல.
இப்ப இங்க coimbatore ல அவனால ஒண்ணும் பண்ண முடியாது. நான் உன் கூட இருக்கிற வரை உன் மேல ஒரு துரும்பு கூட விழ விடமாட்டேன், என்று பயந்து நடுங்கிய அவளை அணைத்து கொண்டேன். மாயா கொஞ்சம் சமாதானம் ஆனது போல் தெரிந்தது.

அவள் mood யை மாற்ற யாருக்கும் தெரியாமல் அவள் கையை முத்தமிட்டு.. அவள் என்னை பார்க்கையில் ஒரு lips kiss please என்று நான் கெஞ்ச.. அவள் சிரித்தபடி ஐயோ இங்கேயா? என்று சொல்லி விட்டு, என் கிட்டே நெருங்கி வந்தாள். அந்த அரை குறை இருட்டில் இச் என்ற சப்தம் மட்டும் எங்கள் இருவருக்கு மட்டும் நன்றாக கேட்டது.
சிரித்து கொண்டோம்.

என் மனதிற்குள் இப்ப தான் சர்வா matter நல்ல படியாக முடிந்தது.. இப்ப கிரண்.. நாம கொஞ்சம் அலர்ட் ஆக இருக்கணும் னு decide ஆனேன். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள வில்லை.

கொஞ்சம் நேரத்தில் order பண்ணிய Lunch வர இரண்டு பேரும் எல்லாவற்றையும் மறந்து விட்டு மகிழ்ச்சியாக சாப்பிட ஆரம்பித்ததோம்.

Lunch முடித்து நேராக மாயா Flats க்கு போய் சேர்ந்தோம். இருவருமே ஒரு வித மயக்கத்தில்.. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, மனசு ஒன்றாய் கலந்த நிலையில் ஒரு வித வசீகரித்து டன் இருந்தோம். இருவர் மனசும் நிறைந்து போய் ஒருவருக்கொருவர் காதல் ததும்பியிருந்த நிலையில் எந்த வித எதிர்பார்ப்பும் ego வும் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எதையும் செய்வதற்கு தயாராக இருக்கும் மனநிலையில் இருந்தோம்.

Room க்கு போனவுடன் இருவரும் fresh up ஆகி விட்டு.. ஒருவரையொருவர் பார்த்து கொள்ள.. எங்கள் பார்வையில் காதல் காமம் எல்லாம் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தது.
ஆசையுடன் ஒருவரையொருவர் இறுக அணைத்து கொண்டோம். மாயா ஒரு படி மேலே போய் தன் முத்தத்தினால் என்னை மூர்ச்சையாகி போகும் அளவிற்கு முகம், நெற்றி உதடு மார்பு, கை கால், எல்லா இடங்களிலும் கொடுத்து கொண்டே இருந்தாள்.
பின் மாயா வை அப்படியே என் இரு கைகளாலும் அள்ளி படுக்கை யில் போட்டு ஆசை தீர பார்க்க.. காமதேவனின் களியாட்டம் துவங்க.. இருவரும் ஒன்றாய் கலந்தோம். காமத் தீ இருவரின் உடலெங்கும் பற்றி எரிய உச்சம் அடைந்து சொர்க்கம் கண்டோம். எல்லாம் முடிந்து ஓய்ந்து வேர்த்து கடைசியில் மாயா பக்கத்தில் அப்படியே நான் சரிய.. மாயா என் பின்னந்தலை முடியை இறுக்கிப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டு கார்த்திக் எப்படி இருந்தது? போதுமா? என்றாள்.

நான் பக்கவாட்டில் தலையாட்டியபடியே பத்தாது இன்னும் வேணும் என்று சொல்ல.. சிரித்து கொண்டே என் கண்களில் கன்னத்தில் முத்தமிட்டு உதட்டை கவ்வினாள்.

என் உடம்பு சிலிர்க்க.. அதை உணர்ந்து கொண்ட மாயா அப்படியே என்னை இறுக அணைத்து முத்தமிட்டாள். இருவரும் உச்ச கட்ட இன்பத்தில் திளைத்து..ரொம்ப நேரம் ஒருவரையொருவர் அணைத்தபடி கிடந்தோம். இருவரது உள்ளமும் உடலும் பூரிப்புடன் நிறைந்திருந்தது.

ஆனால் அங்கே வேறோரு இடத்தில் கிரண் மன சாந்தியில்லாமல் அவன் ஃப்ரண்ட்ஸ் டம் கோபத்தில் கத்திக் கொண்டு இருந்தான்.

அவ மாயா என் கண் முன்னாலே எவன் கூடவோ கொஞ்சிகிட்டு போறா. நான் கையாகாலாதவன் மாதிரி இங்கே விரல் சூப்பிகிட்டிருக்கிறேன்.

நாளைக்கு இருக்கு அவளுக்கு deadline..
நாளைக்கு அவள எப்படியாவது தூக்கறோம். அவ வாழ்க்கைய நாசனம் பண்றோம். எனக்கு கிடைக்காதது.. வேற யாருக்கும் கிடைக்க கூடாது. கிடைக்கவும் விட மாட்டேன்.

முதல்ல அந்த acid bottle யை Ready பண்ணுங்கடா.. ரொம்ப அழகா இருக்கோம் னுத்தானே அவ ஆட்டம் போடுறா. நாளைக்கு பாரு அவ முகத்தில எப்படி acid அடிச்சி கோரமாக்குறேன்னு.. அப்ப தெரியும் இந்த கிரணை பத்தி. எங்க ஓடிப்போய் ஒளிஞ்சாலும் விடமாட்டேன் அவளை என்று கருவிக்கொண்டே liquor bottle யை வாயில் கவிழ்த்து கொண்டான்.

விதி வலியது...

தொடரும்..
உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com