Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

செய்யாத தவறு செய்தது

நான் ரகு ,,, 

நான் எட்டாவது படிக்கும் போது என் ஊரை சார்ந்த பதினோராவது படிக்கும் மூன்று பசங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது கோபப்படுவாங்க ,,, 

காரணம் என்னவென்றே தெரியாமல் நான் அவர்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்தேன் ,, 

அவர்களும் என்னை கண்டாலே கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசி என்னை அழுக வைப்பார்கள் ,,, 

நான் அவர்களை கண்டு அஞ்சி நடுங்கி வந்தேன் ,,, 

நான் ஒன்பதாம் வகுப்பு சென்ற போது அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு சென்றதும்

எனக்கு இனி இவர்கள் கொடுமை ஒரே ஒரு வருடம்தான் என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தேன் ,,, 

அந்த சீனியர் பசங்க பெயர் ,,, 

செந்தில் , அருண் , சேகர் இந்த மூன்று பேரும் யாருக்கும் அடங்காத பசங்க ,,, 

சில டீச்சர்ஸ் கூட இவுங்களை கண்டு பயப்படுவாங்க ,,, 

எங்க ஊரில் ஒரு அக்கா டியூசன் எடுப்பாங்க ,,, 

நான் அந்த அக்கா கிட்ட டியூசன் போக ஆரம்பித்தேன்,,, 

பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுக்கணும்னு அம்மா அப்பா என்னை சேர்த்து விட்டாங்க ,, 

அந்த அக்கா பெயர் தனஸ்ரீ எல்லாருமே 

தனா அக்கானு கூப்பிடுவோம்

அந்த அக்கா காலேஜ் எல்லாம் முடிச்சு வேலைக்கு எக்ஸாம்க்காக படிச்சுட்டு இருக்காங்க அந்த செலவுகளுக்காக ,, 

அப்படியே டியூசன் எடுக்குறாங்க ,,, 

தனா அக்கா என் அம்மாவுடைய தோழியின் பொண்ணு ,,, 

பார்க்க ஆங்கிலோ இந்தியன் பொண்ணு போல இருப்பா தனா அக்கா ,,, 

ஒரு நாள் ,,

செந்தில் அருண் சேகர் இந்த மூன்று பேரும் ,, 

டியூசனுக்கு வர வேண்டி தனா அக்காகிட்ட கேட்க வந்திருந்தாங்க ,,, 

அப்போ என்னை பார்த்துட்டாங்க அந்த மூன்று பேரும் ,,, 

அவனுகளுக்குள்ளேயே ஏதோ முனங்கிட்டு பேசிட்டு இருந்தாங்க,,, 

அப்புறம் தனா அக்கா வீட்டுக்குள்ள இருந்து வந்த உடனே ஒழுக்கமான பசங்க மாதிரி நடிச்சானுக , 

அவுங்க மூன்று பேரும் தனா அக்காகிட்ட டியூசனுக்கு வர பர்மிஷன் கேட்டாங்க ,,

தனா அக்கா அவுங்க அம்மா அப்பாவை வந்து சொல்ல சொல்லுங்கனு சொல்லி அனுப்பி வச்சுட்டாங்க ,,,

அவனுகளும் என்னை பார்த்துட்டு முறைச்சுட்டே கிளம்பி போனானுங்க ,,,

அடுத்த நாள் நான் பஸ் ஸ்டாப்பில் இருந்து என் கிளாஸ் டீச்சரின் ஹேண்ட் பேக்கை வாங்கிக்கொண்டு டீச்சருடன் நடந்து பள்ளிக்கு வந்து கொண்டு இருப்பதை அந்த மூன்று தடியனுகளும் பார்த்தார்கள்,,,

நான் டீச்சர் இருப்பதால் பயமில்லாமல் சென்றேன்

அவனுக என்னை முறைத்து பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள்,,

கிளாஸ் டீச்சர் எப்போதும் ஹெச்எம் ரூமுக்கு போய்ட்டு தான் டீச்சர்ஸ் ரூமுக்கு வருவாங்க 

நான் டீச்சரின் ஹேண்ட் பேக்கை நேராக டீச்சர்ஸ் ரூமுக்கு கொண்டு சென்று வைத்து விட்டு 

பிரேயர் கிரவுண்டுக்கு சென்று விடுவேன்

இது வழக்கமான ஒன்று தான் ,,,

அந்த தடியனுக எனக்கு அங்கே தான் வெடியை வெச்சு விடுவானுகனு தெரியாம போய்டுச்சு ,,,

ஒருநாள் நான் எப்போதும் போல டீச்சர் ஹேண்ட் பேக்கை வாங்கிக்கொண்டு டீச்சர்ஸ் ரூமில் கொண்டு போய் வைத்து விட்டு கிரவுண்டுக்கு சென்று விட்டேன்,,,

பிரேயர் டைம்க்கு என் கிளாஸ் டீச்சர் கிரவுண்டுக்கு வரவே இல்லை,,,

எனக்கு சரி ஏதும் முக்கியமான வேலையா இருக்கும் என்று நினைத்து விட்டு நான் எப்போதும் போல இருந்தேன்

கிளாஸ் ரூமில் டீச்சர் ஏதோ ஒரு வருத்தத்துடன் இருப்பதை அவுங்க முகத்தில் பார்க்க முடிந்தது

எனக்கு என்ன என்றே தெரியவில்லை ,,,

டீச்சர் என் முகத்தை எப்போதும் அடிக்கடி பார்ப்பாங்க ,,,

ஆனால் அன்று என் முகத்தையே பார்க்கவில்லை ,,,

மறுநாள் டீச்சர் ஹேண்ட் பேக்கை வாங்க பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்

டீச்சர் என்னை பார்த்ததும் எதுவுமே பேசாமல் நடக்க ,,

நான் கொடுங்க டீச்சர் நான் கொண்டு வாரேன்னு சொன்னேன்

டீச்சர் இனிமேல் நீ வரவேண்டாம் அப்படினாங்க ,,

எனக்கு முகம் வாடியது ,,

உடனே டீச்சர் ஸ்டூடண்ட்ஸ் யாரும் பஸ் ஸ்டாப்பில் வந்து இப்படி டீச்சர்ஸ் ஹேண்ட் பேக்கை வாங்க கூடாது னு 

ஹெச்எம் சொல்லியிருக்காங்க

இனி நீ இங்கே வந்து நிற்க கூடாது சரியா என்று சொல்லவும்

எனக்கு மனது கொஞ்சம் தேறியது ,,,

ஆனால் டீச்சர் என் முகத்தை பார்க்காமல் பேசியதும் 

கிளாஸ் ரூமில் என்னை பார்க்காமல் இருப்பதும் 

மனதை உறுத்தியது ,,

அதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்,,,

அன்று மாலை எப்போதும் போல டியூசன் சென்றேன் ,,

அன்று மட்டும் தனா அக்கா டேய் பசங்களா ,,,

உங்க ஸ்கூல் பேக் எல்லாம் வைத்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்டில் மூன்று ரவுண்டு ஓடிட்டு வாங்க ,,,

அப்பதான் படிப்பு மண்டையில் ஏறும் என்று சொல்ல ,,

ஒன்பதாம் வகுப்பு பசங்களும் , பத்தாம் வகுப்பு பசங்களும் மொத்தம் 25 பேர் இருப்போம் டியூசனில் ,,,

தனா அக்கா சொன்னதை கேட்டு என்ன ஏதுன்னு புரியாம எழுந்து கிரவுண்டுக்கு சென்று ஓட ஆரம்பித்தோம்

பெரிய மைதானம் கிட்டத்தட்ட ,,,

முக்கால் மணிநேரம் பிடித்தது மூன்று ரவுண்டு ஓடிட்டு வர ,,,

மிகவும் சோர்வடைந்து டியூசன் ஹாலுக்கு வந்து சேர்ந்தோம் ,,

தனா அக்கா எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தாங்க ,,,

அப்புறம் பாடங்களை சொல்லித்தர ஆரம்பிச்சாங்க 

தனா அக்கா சொன்னமாதிரியே அவுங்க சொல்லிக்கொடுக்கும் விஷயங்கள் நன்றாகவே புரிய ஆரம்பித்தது,,,

டியூசன் முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரத்தில்,,,

ரகு நீ வெய்ட் பண்ணு அம்மா உன்கிட்ட ஏதோ கொடுத்து விடனும்னு சொன்னாங்க 

உன் அம்மாகிட்ட கொண்டு போய் கொடுக்கனுமாம் னு சொல்ல ,,

நானும் யதார்த்தமாக சரிங்க மிஸ் என்றேன்

டியூஷன் பசங்க எல்லோரும் போனபிறகு ,,

ரகு உள்ளே வா என்று வீட்டுக்குள்ள கூப்பிட்டாங்க தனா அக்கா ,,,

நானும் உள்ளே சென்றேன்

என் பின்னாடியே வாடா னு சொல்லிட்டு 

தனா அக்கா அவுங்க பெட்ரூமுக்கு என்னை கூட்டிட்டு போனாங்க ,,

நானும் அவுங்க பின்னாடியே சென்றேன்

நான் சுற்றி முற்றியும் பார்த்தேன் 

அவுங்க வீட்டில் யாரும் இருப்பது போலவே இல்லை ,,

தனா அக்கா மட்டும்தான் இருந்தாங்க ,,

தனா அக்கா அவுங்க படுக்கை அறை பெட்டின் மீது மூன்று புத்தகங்களை எடுத்து வீசினாங்க ,,,

அந்த புத்தகத்தை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது,,,

அந்த புத்தகத்தில் இருந்து போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் ,,,

தொடரும் ,,,