காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு இருந்தார்கள். அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வரலையா? அதுக்கு அங்க இருந்த மற்றவர்கள் எங்கள கேட்டு என்ன பண்றது அவளோட தோஸ்த கேளு, ஜெனிஃபர் கதிரிடம்(தோஸ்த் ) திரும்ப அங்க அவர்களால் பட்டாசுன்னு அன்புடன் அழைக்கப்படுற நந்தனா உள்ளவரவும் சரியாய் இருந்தது. ஒருவாரம் விடுமுறை முடிஞ்சு அலுவலகம் வந்த நந்தனாவை நண்பர் பட்டாளம் சூழ்ந்துகொண்டது . ஹே பட்டாசு டான்ஸ் போட்டி எப்படி போச்சு, யார் எல்லா வந்து இருந்தாங்க,அடுத்த ரவுண்டு எப்போ? இப்படி பலகேள்விகள் எல்லாத்திற்கும் பதில் சொன்ன நந்தனா அங்கிருந்த டேபிள் மீது அமர்ந்துகொண்டு தான் இல்லாத போது அலுவகத்தில் நடந்தவை பற்றி கேட்க தொடங்கினாள். அதை கேட்டதும் அனைவரும் அமைதியாக இருக்க நந்தனா கதிரை

1

நந்தவனம் - 1

காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வரலையா? அதுக்கு அங்க இருந்த மற்றவர்கள் எங்கள கேட்டு என்ன பண்றது அவளோட தோஸ்த கேளு, ஜெனிஃபர் கதிரிடம்(தோஸ்த் ) திரும்ப அங்க அவர்களால் பட்டாசுன்னு அன்புடன் அழைக்கப்படுற நந்தனா உள்ளவரவும் சரியாய் இருந்தது. ஒருவாரம் விடுமுறை முடிஞ்சு அலுவலகம் வந்த நந்தனாவை நண்பர் பட்டாளம் சூழ்ந்துகொண்டது . ஹே பட்டாசு டான்ஸ் போட்டி எப்படி போச்சு, யார் எல்லா வந்து இருந்தாங்க,அடுத்த ரவுண்டு எப்போ? இப்படி பலகேள்விகள் எல்லாத்திற்கும் பதில் சொன்ன நந்தனா அங்கிருந்த டேபிள் மீது அமர்ந்துகொண்டு தான் இல்லாத போது அலுவகத்தில் நடந்தவை பற்றி கேட்க தொடங்கினாள். அதை கேட்டதும் அனைவரும் அமைதியாக இருக்க நந்தனா கதிரை ...மேலும் வாசிக்க

2

நந்தவனம் - 2

அன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற நந்தனா, யாருடனும் பேசாமல் தனக்குள்ளேயே அர்ஜுனைத் திட்டிக்கொண்டு இருந்தாள். நந்தனா அர்ஜுனைத் திட்டி முடிப்பதற்குள் நாம் நந்தனா குடும்பத்தைப் தெரிந்துகொள்வோம். நந்தனாவின் அப்பா சதாசிவம் பேங்க் மேனேஜர், அம்மா சாவித்ரி பள்ளி ஆசிரியராக இருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்று வீட்டைக் கவனித்து கொண்டிருக்கிறார். அவர் விருப்ப ஓய்வு பெற முக்கிய காரணம், அவரது செல்ல மருமகள் சந்தியா, நந்தனாவின் அண்ணன் விக்ரமின் காதல் மனைவி, இப்போ ஆறு மாத கர்ப்பிணி. விக்ரம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான், சந்தியா கல்லூரி விரிவுரையாளராக இருக்கிறாள். கல்லூரிக் காலத்தில் இருந்து ஐந்து வருடமாகக் காதலித்து வந்த விக்ரம்-சந்தியா ஜோடியின் கல்யாணத்திற்கு முக்கிய கரணம் நம்ம நந்தனாவும்,அவளோட தோஸ்த் கதிரும்தான். தாய் தந்தை இல்லாத சந்தியாவிற்கு திருமணத்திற்குப் பிறகு விக்ரமின் வீடே அனைத்துமாகிப்போனது. நந்தனாவும், சந்தியாவும் தோழிகள் போல ரகசியம் பேசிப்பாங்க. இவங்க இத்தனைபேர் இருந்தாலும் ...மேலும் வாசிக்க

3

நந்தவனம் - 3

கதிர் நந்தனாவிடம் ஆமா, இப்ப எதுக்கு கப்பல் கவுந்தமாதிரி மூஞ்சவெச்சுருக்க மச்சான் என்றான். ஓ கப்பல் கவுந்தா மூஞ்ச இப்படித்தான் வெச்சு இருப்பாங்கன்னு உனக்கு யாரு என்று அவனிடம் பாய்ந்தாள், அவனோ அலட்டிக்கொள்ளாமல் நீ நல்லாத்தான் இருக்கியா? எதோ கவலைல இருக்கனு நினைச்சு ஆறுதல் சொல்லான்னு பாத்தேன் ஓகே ஓகே நீ உன் ஆராய்ச்சிய நடத்து என்றான். என்னடா கிண்டலா? பின்ன என்ன அந்த அய்யனார் கிட்ட பேசிட்டு வந்ததுலயிருந்து எதோ ஞானி லெவெல்க்கு பீலிங்ஸ் விட்டுட்டு இருக்க என்றான். அர்ஜுன் சொன்னதை கதிரிடம் சொல்ல தோணாமல் அந்த பேச்சை மாற்றினாள், கதிரிடம் இருந்து நந்தனா மறைக்கும் முதல் விஷயம் இது. அதனை அவள் உணரவேயில்லை. திடீரென எதோ தோன்ற நந்தனா கதிரிடம் ஏன் தோஸ்த் நீ அர்ஜுன் இடத்துல இருந்து உன்கிட்ட ஒரு பொண்ணு சவால் விட்டு அவளே அத மறந்ததுக்கப்புறம் நீயா கூப்பிட்டு நான் தோத்துட்ட அப்படினு ...மேலும் வாசிக்க