டிசம்பர் 7 ,2031சென்னை கடந்த ஐந்து வருடங்களில் பார்த்திடாத மழையை அந்த இரண்டு நாட்களில் பார்த்திருந்தது....தமிழகத்தின் மற்ற மாவட் டங்கள் அனைத்தும் சென்னையின் நிலையை பற்றி அறிய தங்கள் தொலைக்காட்சி முன் உட்கார ஆரம்பித்தனர்....இதுவரை அவ்வளவு மழை வெள்ளத்தை நேரில் கண்டிடாது ஆச்சிரியத்துடன் கண்டு களிக்கும் இளைஞர்கள்....தேனீர் கடையில் வாயில் பில்டர் சிகரெட்டை கவ்வியவாறு காற்றில் புகையை ஊதி தள்ளிக்கொண்டு இயற்கை மதிக்கா மனிதர்களுக்கு இயற்கையின் பதில் தான் இது என அன்று தன் நேரத்தை கழிக்க பேசுபொருளாக அதை

1

அதிதி அத்தியாயம் - 1

டிசம்பர் 7 ,2031சென்னை கடந்த ஐந்து வருடங்களில் பார்த்திடாத மழையை அந்த இரண்டு நாட்களில் பார்த்திருந்தது....தமிழகத்தின் மற்ற மாவட் டங்கள் அனைத்தும் சென்னையின் நிலையை பற்றி தங்கள் தொலைக்காட்சி முன் உட்கார ஆரம்பித்தனர்....இதுவரை அவ்வளவு மழை வெள்ளத்தை நேரில் கண்டிடாது ஆச்சிரியத்துடன் கண்டு களிக்கும் இளைஞர்கள்....தேனீர் கடையில் வாயில் பில்டர் சிகரெட்டை கவ்வியவாறு காற்றில் புகையை ஊதி தள்ளிக்கொண்டு இயற்கை மதிக்கா மனிதர்களுக்கு இயற்கையின் பதில் தான் இது என அன்று தன் நேரத்தை கழிக்க பேசுபொருளாக அதை ...மேலும் வாசிக்க

2

அதிதி அத்தியாயம் - 2

மே 14,1975இரவு பதினொன்று மணியளவு மோகன்ராஜாவின் வீடே அமைதி காடாக இருக்கிறது அந்த நிசப்தத்தை உடைக்கும் வண்ணம் ஓர் சப்தம் மல்லிகா ஹாலில் இருக்கும் மீன்தொட்டியை போட்டு உடைக்கிறாள்.சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் தனது போட்டோவை எடுத்து கீழே போடுகிறாள்.மோகன் ராஜா தன் பொறுமையை இழுந்து மல்லிகாவின் கையை பிடித்து இழுக்கிறான்."என்னடி ஆச்சு உனக்கு"மோகள். மல்லிகா எதும் பேசாமல் மோகனை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்."ஏன் இப்படி மென்டல் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் உடைச்சிகிட்டு இருக்க..."மோகன்."என்னால என்ன ப ...மேலும் வாசிக்க

3

அதிதி அத்தியாயம் - 3

மோகன் சென்னைக்கு வந்தவுடன் தன் ஆஃபீஸ் வேளைகளில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்தான்...ரகுவும் ஸ்கூலுக்கு செல்ல ஆரம்பித்தான்...மோகன் இப்பொழுதெல்லாம் முன்னர் போல் இரவு பத்து மணி வரை வேலையாக இருந்தாலும் இரவு ஏழு மணிக்கே வீட்டிற்கு வந்துவிடுவான்...ரகுவுடன் பொழுது கழிக்க...இப்பொழுதெல்லாம் ரகு மோகனின் மாரில் தான் படுத்து உறங்குவான்...அப்படி உறங்கும் வேளையில் தான் ரகு தன் மனத்தில் நீண்ட நாட்களாக தேக்கிவைத்திருந்த கேள்வியை மோகனிடம் கேட்டான் "நீதான் அம்மாவ கொன்னையா...."ரகுமோகன் அதிர்ச்சியுடன் ரகுவை பார்க்கிறான்."நா ஏன் அம்மாவ கொல்லனும்..."மோகன்"பிறகு ஏன் அம்மா கூட அன்னைக்கு சண்டை போட்டுட்டு இருந்த..."ரகு"சண்டை போடல ரகு பேசிட்டு இருந்தோம்...அம்மாவும் அப்பாவும் எப்பையும் சண்டை போட்டதில்ல...""ஏன் என்ன அன்னைக்கு அம்மா முகத்த பாக்க விடல...""நீ பயந்துடுவனு ரகு...நீ ரொம்ப சின்ன பையன் அதான் உன்ன பாக்க விடல...""அம்மா ஏன் இப்படி நம்ம எல்லாரையும் விட்டு போயிடுச்சு...""அம்மா எங்கையும் போல....நம்ம கூட தான் சாமியா இருக்கு எப்பையும் நம்ம ...மேலும் வாசிக்க

4

அதிதி அத்தியாயம் - 4

"ஜுலிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு.." ரிச்சர்ட்"அப்பா..."மோகன் அதிர்ச்சியுடன்"அதுதான் கரெக்டான சாய்ஸ்னு எனக்கு தோணுது ரகுவும் அவளுக்கு உன்ன பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும் நம்ம பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும்...அவ கண்டிப்பா உனக்கு எல்லா வகைளையும் சப்போர்டிவா இருப்பா...என்ன சொல்ற.." ரிச்சர்ட்"இல்லப்பா ஜுலி எப்படிப்பா...ரெண்டாந்தாரமா...அவ என்ன நினைப்பா..அவளா எங்கேயோ இருக்கணும்பா.." மோகன்"அதைபத்திலா நீ யோசிக்காத நான் உன்னோட பெர்மிஸன் மட்டும் தான் கேட்டேன்..." ரிச்சர்ட்"அவ ஓகே சொல்லிட்டாளா.." மோகன்"சொல்லிட்டா..." ரிச்சர்ட்மோகன் யோசிக்கிறான்"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..என்னால இப்ப கல்யாணம் பண்ண முடியாது.." மோகன்"சரி ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்க வெயிட் பண்ணுவாங்க இன்னு கொஞ்ச நாள்.." ரிச்சர்ட்"அவங்கள எப்படிப்பா நம்மாளுக்காக வெயிட் பண்ண சொல்ல முடியும்... அது தப்பில்லையா" மோகன்ரிச்சர்ட் சிரித்தவாறே எழுகிறார்"அப்பா என்ன கிளம்பிட்டிங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல ரகு வந்துருவான்...""இல்ல மோகன்...எனக்கு அர்ஜென்ட் ஒர்க் ஒன்னு இருக்கு...நா இன்னொரு நாள் வந்து ரகுவ பாத்துக்குறேன்...போயிட்டு வரேன்..."ரிச்சர்ட் ...மேலும் வாசிக்க

5

அதிதி அத்தியாயம் - 5

மறுநாள் ஜூலியும் மோகனும் வீட்டிற்கு வந்துவிட்டனர்...இரண்டு நாட்களில் கல்யாணத்திற்கு வந்து இருந்த சொந்தங்கள் அனைவரும் திரும்பி தங்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர் ஷர்மி உட்பட அந்த வீட்டில் கோலாகல கொண்டாட்டங்களில் இருந்து சாதாரண அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர் ஆனால் ஒர் திருத்தும் முன்பு மோகன் ரகு இப்பொழுது மோகன் ரகு ஜூலியாக மாறி இருந்தது...ரகு ஜூலி சாப்பிடும் பொழுது அவன் சாப்பிட மாட்டான் அவள் சாப்பிட்டு முடித்தவுடன் தான் டைனிங் டேபிலிற்கு செல்வான்.ஜூலி ஹாலில் இருக்கிறாள் என்றால் அவன் டி.வி பார்க்கக்கூட ஹாலிற்கு போக மாட்டான்.மோகன் ஜூலியை அம்மா என்று அழைக்க சொல்லுவான் ஆனால் ரகு அவன் பேச்சை கேட்கமாட்டான்...சாப்டயா என்றால்"இல்லை நா சாப்டுட்டேன்.."என்ன வேணும்"சுகர் கொஞ்சம் கொடு..."ரகு என்ன தேடுட்டு இருக்க"என் புக்..." என பதில் வரும் எல்லாம் வேண்டா வெறுப்பாக இருக்கும் ஒருநாள் இதைக்கவனித்த மோகன் "ஐ ஷே கால் ஹெர் மாம்..."மோகன்ரகு எதுவும் பேசாமல் அமைதியாக ...மேலும் வாசிக்க

6

அதிதி அத்தியாயம் - 6

ஜூலியின் கண்ணில் இருந்து கண்ணீர் ததும்புகிறது...தன் கண்ணை துடைத்தவாறு அழுதுகொண்டே தன் ரூமிற்கு ஓடுகிறாள்.மோகன் கோவத்தில் ரகுவை கை ஓங்குகிறான் ஓங்கிவிட்டு அடிக்காமல்"சீ..உங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு சாவுறதுக்கு பேசாம அவளுக்கு பதிலா நான் தூக்கு போட்டிருக்கலாம்...செய்..."தன் தலையில் அடித்துக்கொண்டு ஜூலியை சமாதானம் செய்ய அவள் பின்னால் ஓடுகிறான்.ரகு அன்றிரவு முடிவு செய்தான் ஜுலி இந்த வீட்டை விட்டு போகும் வரை தான் சாப்பிடப்போவதில்லை என்று..சொல்லி ஒரு நாள் சாப்பிடாமலும் இருந்துவிட்டான்.ஜூலியும் தான் ஒரு இரண்டு நாள் தன் தந்தை வீட்டிற்கு சென்று வருகிறேன் என் மனதிற்கும் கொஞ்சம் ஆறுதளாக இருக்கும் என மோகனிடம் சொல்லிவிட்டு சென்றாள்..மோகனும் ஜுலி சென்றதை காரணமாக சொல்லி ரகுவை சாப்பிட வைத்துவிட்டான்.அடுத்த வாரத்தில் மல்லிகா இறந்து ஓர் வருடம் ஆயிருந்தது...அவளுக்கு சடங்கு செய்யும் பொருட்டு ஷர்மி உட்பட சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர்.அப்பொழுது ரகு ஷர்மியை தனியாக அழைத்து அழுதுவிட்டான்"சித்தி...என்ன கூட்டிட்டு போ....இங்க இருக்க எனக்கு புடிக்கல....நா ...மேலும் வாசிக்க

7

அதிதி அத்தியாயம் - 7

எப்ரல் 13,1985 ரோகனும் ரகுவும் இரயிலில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்... இம்முறை ஜன்னல் சீட்டிற்காக இருவரும் அடித்து பிடித்து கொள்ளவில்லை...ஏனென்றால் இருவருக்கும் அந்த வாய்ப்பு ஏற்கனவே அங்கு வயதான ஓர் தாத்தா உட்கார்ந்திருந்தார்...தன் ஒன்பது வருடங்கள் பெங்களூர் வாசத்தை முடித்து விட்டு ரகு தன் சொந்த ஊரையும் தன் தந்தையையும் பார்க்க சென்று கொண்டு இருக்கிறான்...இத்தனை வருடங்களில் பெங்களூர் அவனுக்கு அடைக்கலம் மட்டுமே தரவில்லை பல உறவுகளையும் நினைவுகளையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது...சென்னையில் வீட்டினுள்ளே கூண்டு பறவை போல் வாழ்ந்த ரகுவிற்கு வாழ்க்கை என்பது என்னவென்று வழிக்காட்டி சிறகடித்து பறக்க கற்று தந்தது பெங்களூர்.அங்கிருந்து பிரிய மனமின்றி வேறு வழியுமின்றி மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.இரயில் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலே ரோகன் உறங்கிவிட்டான்...ரகுவுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. அவனது பேச்சுதுணைக்கு ரோகனும் இல்லை அதனால் தன் கண்ணை மூடிக்கொண்டு தன் பெங்களூர் வாழ்க்கையை மனதினுள் நினைத்து பார்க்க ...மேலும் வாசிக்க