Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 12

சுபா என்ன சொன்னாள் விஷால்? பொங்கலுக்கு வரப்போ பேசிக்கலாம்ன்னு சொன்னாள் .விஷால் தேவையில்லாத குழப்பத்தை திவ்யாவும், தீபாவும் ஏற்படுத்தி விட்டதாக நினைத்தான். அனன்யா பர்த்டேவுக்கு ஷாப்பிங் போக வேண்டும் என்று சொல்லி இருந்தாள். இவன் மறந்து விட்டான். அவளே ஃபோன் பண்ணி நினைவு படுத்தினாள். எங்க இருக்க நீ இதோ வந்துட்டேன் அனன்யா . ஒண்ணும் அவசரமில்லை நிதானமாவே வா என்றாள். அவள் வீட்டிற்கு வந்தான். அவள் தயாராக இருந்தாள்.போலாமா? போகலாம் . அனன்யா என்ன இன்னும் நீ அதையே நினைத்து கொண்டு இருக்கிறாயா ? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மேக் அப் ஐட்டங்கள் வாங்கினாள் அனன்யா. பர்த்டே டிரஸ் சிறப்பாக அமைந்திருந்தது .பொங்கல் முடிந்துதான் அனன்யா பர்த்டே வருகிறது. சுபா அப்போது இருக்க மாட்டாள் . என்ன யோசனை? சுபா உன் பர்த்டேவுக்கு இருக்க மாட்டாளே அதை பத்தி யோசித்து கொண்டிருந்தேன். ம் அவளுக்காக ஒரு முறை கேக் வெட்டினா போச்சு என்றாள் அனன்யா. நிஜமாவா ? ஆமாம். நாம அவளை மிஸ் பண்ண கூடாது .

ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பினார்கள். மணி 8 ஆகிவிட்டது . ஏதாவது சாப்பிட்டு வந்திருக்கலாம் என்றான் . மணி ஆகி விட்டது . இரு ஏதாவது செய்யுறேன் . உப்புமா சாப்பிடுகிறாயா என்றாள். வேணாம் அனன்யா ஏதாவது சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றாள். நீ சமைக்க போயிட்டா எனக்கு போர் அடிக்குமே. நீயும் வந்து ஹெல்ப் பண்ணு. சமையலுக்கு தேவையானதை நறுக்கி கொடுத்தான். நீ சமைக்க கற்றுக்கொள் விஷால் . நீ சொல்லி கொடுத்தா ஓகே தான் . ம் உப்புமா 10 நிமிடங்களில் ரெடி ஆகி விட்டது. இதை எடுத்துக்கொண்டு போய் dining டேபிள் மேல வை விஷால்.அவளும் வந்து உட்கார்ந்து கொண்டாள் . எப்படி இருக்கு உப்புமா ? நல்லா வந்திருக்கு என்றான்.அவளுக்கும் ஊட்டி விட்டான் .நாம இப்பவே ஃபேமிலி ஆயிட்ட மாதிரி ஃபீலிங்க் என்றான் விஷால். சரி நான் போகட்டுமா.. போகாதே விஷால் கொஞ்ச நேரம் இரு என்றாள். அவள் லேப்டாப்பில் சில சந்தேகங்களை கேட்டாள். இவனும் சொல்லி குடுத்தான்.

சுபாவுக்கு ஃபோன் பண்ணி இருந்தான் அனன்யா பர்த்டே பற்றி சொன்னான். நீ வரும் போதே கேக் வெட்டலாம்னு இருக்கோம் சுபா.
ரொம்ப சந்தோஷம் விஷால். நீ என்னைக்கு வர? நான் 12 தேதி போல வருவேன். சுபாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.அனன்யா பர்த்டேவுக்கு ஃபிரண்ட்ஸ் எல்லோரையும் invite பண்ண வேண்டும் என்று சொல்லி இருந்தாள்.இவனும் அவளும் நேரில் போய் சில ஃபிரண்ட்ஸ்களை அழைத்திருந்தனர். வேறென்ன பண்ண வேண்டும் அனன்யா . நான் நீ சுபா மூணு பேரும் ஒரு கேண்டில் டின்னர் போறோம் . wow சூப்பர் என்றான்.இவனுக்கு பைக்கில் போகும் போது சிறிய அடி பட்டுவிட்டது.அனன்யாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போனான். ஒண்ணும் பெரிய காயமில்லை . ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய்விடும் என்று சொன்னார்கள்.

சுபா ஃபோன் பண்ணி விசாரித்தாள் . ஒண்ணும் பெரிய அடி எல்லாம் இல்லை என்றான். நான் வேணா வரவா என்றாள். அனன்யாதான் எல்லாம் பார்த்துக் கொள்கிறாள். நீ கவலை பட வேண்டாம். ரெண்டு நாட்களில் காயம் சரி ஆனதும் அனன்யாவை போய் பார்த்தான் . நீ ஏண்டா மறுபடி வண்டி ஓட்டிட்டு வந்தே. இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே என்றாள். உன்னை பார்க்கணும் போல இருந்தது அதான் வந்தேன். சரி உள்ளே வா . காயப்போட்ட துணிகளை மடித்து வைப்பதற்காக எடுத்து வைத்திருந்தாள் . இவன் அவைகளை மடித்து வைக்க ஹெல்ப் பண்ணினான். நீ எங்கேயும் போக வேண்டாம் . மதியம் food ஆர்டர் பண்ணிக்கலாம் என்றாள். அதெல்லாம் எதுக்கு ? சும்மா சொல்லுறத கேளு . நான் உனக்கு veg soup பண்ணி தருகிறேன் என்றாள். சூப்பா என்றான்.

அவள் காய்கறி cut பண்ணும் அழகை ரசித்தான். நீ நல்லா சமைக்கிற அனன்யா என்றான். போதும் கிண்டல் பண்ணாதே .இருவரும் சூப் சாப்பிட்டனர். நல்லா இருக்குது . இன்னும் கொஞ்சம் தரட்டா . போதும் அனன்யா.ரொம்ப நாளாச்சு உன் பாட்டை கேட்டு . இப்போவா பாடவா? என்ன பாட்டு ? உனக்கு பிடிச்ச பாட்டு பாடு என்று சொன்னான். திருமண மலர்கள் தருவாயா என்ற பாடலை பாடினாள்.எனக்கு தூக்கம் வருது சரி .இந்த சோபாவுல படுத்து கொள் . தலையணை ஒன்றை கொண்டு வந்து கொடுத்தாள். நீ எங்கேயும் போகாதே அனன்யா என்றான். இல்லை போகலை .கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்த போது அவளும் நாற்காலியில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்தாள்.
இவன் அவளை தூக்கி சோபாவில் வைத்தான். அனன்யா அவனுடைய சட்டையை பிடித்து இழுத்தாள் . அவள் மேல் மெத்தென்று விழுந்தான். அவளுடைய மார்பில் இவன் முகம் பதித்தான். இறுக்க அணைத்து கொண்டாள். அவள் இன்னமும் தூக்கம் கலையாமல் இருந்தாள்.

ஆர்டர் பண்ணியிருந்த food வந்து விட்டது . நான் போய் குளிச்சிட்டு வரேன் வந்தவுடன் சாப்பிடலாம் என்றாள். சுபா வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன.அவள் குளித்து விட்டு வந்ததும் இன்னும் பேரழகியாக தெரிந்தாள் . அனன்யா அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளால் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது .இருவரும் சாப்பிட்டு முடித்தனர். தட்டுகளை கழுவி வைத்தனர். வெளியே எங்கேயாவது போவோமா ? சாயங்காலம் போவோம் என்றான்.இப்ப கால் வலி எப்படி இருக்கு . பரவாயில்லை . கொஞ்ச நேரம் அவள் மடியில் படுத்திருந்த படி டிவி பார்த்தான்.

சுபா 12 தேதி வந்து விட்டாள்.வந்ததும் நேராக கிளம்பி இவன் வீட்டுக்கு வந்தாள். இவன் தூங்கி கொண்டிருந்தான்.மெதுவாக விஷால் என்று கூப்பிட்டாள். இவன் எழுந்து, சாரி சுபா நைட்டு படிச்சிட்டு இருந்தேனா அதான் தூங்கி போயிட்டேன். நீ எப்போ வந்தே . இப்போதான். இரு காப்பி போட்டு எடுத்துட்டு வரேன் அதெல்லாம் வேணாம். இப்போ உன் கால் எப்படியிருக்கு . பரவாயில்லை . அப்போ நான் கிளம்பட்டுமா இரு நான் போய் பிரஷ் பண்ணி குளிச்சிட்டு வரேன். சேர்ந்து அனன்யா வீட்டுக்கு போகலாம் என்றான். அவளுடைய கையை பிடித்து கொண்டான். உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன் என்றான்.

அனன்யா தன்னுடைய புது லேப்டாப் சுபாவிடம் காட்டி கொண்டிருந்தாள் . நீங்க ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் கிளாஸ் போறீங்கலாமே என்றாள். ஆமாம் ஜாலியா இருக்கு கிளாஸ் என்றான்.
சுபா ஏக்கத்துடன் லேப்டாப் உன்கிட்ட இருக்கா விஷால் என்றாள் . என்கிட்ட இல்லை .அப்பாகிட்ட சொல்லி உனக்கு ஒண்ணு வாங்கி தரேன் என்றாள். அதெல்லாம் வேணாம் சுபா, அப்பா தப்பா நெனைப்பாரு .சுபா மதியம் எங்க வீட்டுக்கு வந்துடுங்க நான் போய் சமைக்கிறேன் என்றாள். நான் வந்து வண்டியில் டிராப் செய்யவா வேணாம் விஷால் நானே போய் கொள்கிறேன்.

நாளைக்கு உன்னுடைய பர்த்டே கேக் வெட்டுவோமா என்று கேட்டான் . எனக்கு ஓகே விஷால்.மதியம் சுபா வீட்டுக்கு போன போது சுபா இன்னும் சமயலறையில் இருந்தாள். என்ன ஆச்சு சுபா அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் நானே .. சரி இதை முன்னாடியே சொல்லி இருந்தா நாங்க ஹெல்ப் பண்ண வந்திருப்போம் இல்லையா ? நான் முடித்து விட்டேன். நீங்க போய் டைனிங் டேபிள் ல உக்காருங்க.
சுபா நீயும் உக்காரு . நாளைக்கு அனன்யா பர்த்டே கேக் வெட்டலாம்னு இருக்கோம் . எத்தனை மணிக்கு ஈவினிங் 5 மணிக்கு.தீபாவும், திவ்யாவும் வராங்க.சுபா வாங்க மேல போய் பேசுவோம் என்றாள்.
என்ன முடிவு பன்னீங்க ? எதை பத்தி எல்லாம் அதை பத்தி தான். அதெல்லாம் இப்போ வேணாம் சுபா.. சரி எப்போ உனக்கு தோன்றுகிறதோ அப்போ சொல்லு.

மறுநாள் மாலை 5 மணிக்கு தீபாவும், திவ்யாவும் வந்து விட்டனர். சுபா சந்தோஷமாக இருந்தாள்.அனன்யா கேக் வெட்டினாள் . ஹாப்பி பர்த்டே அனன்யா என்று பாடினார்கள்.சுபாவிடம் தீபாவும் , திவ்யாவும் பேசி கொண்டிருந்தார்கள். அனன்யா உற்சாகமாக இருந்தாள்.நாங்க போயிட்டு வறோம் என கிளம்பினார்கள் திவ்யாவும், தீபாவும் .நாம எல்லாம் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றான் விஷால்.தீபா இவனுக்கு நெருக்கமாக நின்று கொண்டாள். நெக்ஸ்ட் டைம் நாமெல்லாம் சேர்ந்து மூவி போகலாம் என்று சுபா சொன்னாள்.
அனன்யா கீழே உடை மாற்ற போயிருந்தாள். விஷால் சுபாவை கட்டிபிடித்து முத்தமிட்டான்.அவளுடைய பின்புறங்களை தழுவி கொண்டான். சுபா ஏக்கத்தில் விஷால் ஐ லவ் யு என்றாள் .அவள் அவனை தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டாள்.


பொங்கலுக்கு முதல் நாள் வீட்டில் சுத்தம் செய்து கொண்டிருந்தான் விஷால். அனன்யாவும், சுபாவும் எங்களுக்கும் வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். வீட்டை சுத்தம் செய்த போது நேற்று சுபா கூட நடந்ததை நினைத்து பார்த்தான். அவளுக்கு விஷால் மேல் எவ்வளவு ஆசை. சாயங்காலம் இருவரும் வீட்டுக்கு வந்து விட்டனர்.பொங்கல் ஷாப்பிங் போகணும் நீயும் வா என்றனர்.சுபாவுக்கும், அனன்யாவுக்கும் வளையல் போன்றவைகளை வாங்கி கொடுத்தான். மூவரும் ஹோட்டல் போய் சாப்பிட்டனர்.நேத்து நான் டிரஸ் மாத்த கீழே போயிருக்கும் போது என்ன பண்ணிட்டு இருந்தீங்க. கிஸ் பண்ணிட்டு இருந்தோம் இதை சொல்ல சுபா தயங்கவில்லை.ம்ம் சூப்பர் .. கொஞ்சம் நேரம் தனியா விட முடியலையே ரெண்டு பேரையும் என்றாள் அனன்யா. சுபாவை வீட்டில் விட்டான். உள்ளே வா விஷால் உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு .


சுபா இரு ஒரு நிமிஷம் டிரஸ் மாத்திட்டு வரேன் என்றாள். இந்த நைட்டி புதிதா என்றான். அன்னைக்கு வாங்குணோமே அதுதான் . நல்லா இருக்கு . தண்ணி கொடு சுபா என்றான். கொண்டு வந்து கொடுத்தாள். இன்னும் ரெண்டு நாளிலே லேப்டாப் வந்துவிடும் என்று சொன்னாள். எதுக்கு சுபா இதெல்லாம். அதெல்லாம் அப்படித்தான். நீ வா உட்கார் என்றாள். அவள் அவன் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அனன்யா எப்படி உன்னை நல்லா பாத்துக்கிறாளா ? நல்லா பார்த்து கொள்கிறாள் . நீ எப்படி படிக்கிறே சுபா.. அதுக்கென்ன நல்லாதான் போகுது. என்னவோ ஏன் மனசுல ஏக்கம் ரொம்ப அதிகமா இருக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு என்றாள் சுபா. கொஞ்ச நாள் படிப்பு முடிஞ்சவுடனே வந்துட போற இதுல என்ன இருக்கு. ம்ம் அதுவும் சரிதான். அவள் அவன் அருகில் வந்தாள்.

பொங்கலுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர் சுபாவும் அனன்யாவும் .விஷால் அவர்களுக்கு ஹெல்ப் செய்தான். காலையிலேயே அவர்கள் அவன் வீட்டுக்கு வந்து விட்டனர்.இரண்டு பெண்களும் புது புடவையில் இருந்தனர். இவன் வேஷ்டி சட்டையில் இருந்தான். பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டனர் .சுபா சாமிக்கு படையல் போட்டாள் .அனன்யா ,சுபா , விஷால் மூவரும் பொங்கல் சாப்பிட்டனர்.சாயங்காலம் பார்க்கலாம் விஷால் என்று சொல்லிவிட்டு விடை பெற்றனர்.

சாயங்காலம் போல அனன்யா ஃபோன் செய்தாள். வீட்டுக்கு கெஸ்ட் எல்லாம் வந்து இருக்காங்க.. நாம நாளைக்கு மீட் பண்ணலாம் விஷால் சரி அனன்யா . சுபா இவனை தேடி வந்து விட்டாள். வா எங்கேயாவது போகலாம்.ஷாப்பிங் மால் போகலாம் என்று சொன்னாள். இரு ஒரு 5 நிமிடத்தில் கிளம்பி விடுகிறேன் என்றான். என்னை எப்பவுமே இதே போல லவ் பண்ணுவியா விஷால் என்றாள்.. நிச்சயமா .அனன்யா அவங்க அப்பாகிட்ட சொல்ல போறேன்னு சொல்லி இருக்கிறாள் நீ என்ன நினைக்கிற. எனக்கு இப்போ இருக்கிற இந்த நிம்மதியே போதும் . புதுசா பிரச்சனை வேணாம் . சரி அப்ப சொல்ல வேண்டாம்னு நீயே அனன்யாகிட்ட சொல்லிடு. ஓகே விஷால்.

ஏன் விஷால் உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கும் .. இதென்ன கேள்வி சும்மா சொல்லேன்.எல்லாமே பிடிக்கும்.. அனன்யா ஃபோன் செய்தாள். எங்க இருக்கீங்க . ஷாப்பிங் மாலில் . என்ஜாய் பண்ணுங்க என்றாள் . விஷால் நீ நான் நெனைக்கிற மாதிரி உலகம் இல்ல சுபா. நெறைய கண்டிஷன் போட்டுதான் வாழ வேண்டி இருக்கு என்றான் . அவனுடைய கையை இறுக்கமாக கோர்த்துக்கொண்டாள் சுபா.