Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 13

விஷாலுக்கு புது லேப்டாப் வந்துவிட்டது . சுபா அதை எடுத்துக்கொண்டு ஆவலுடன் விஷால் வீட்டுக்கு சென்றாள். அனன்யாவுக்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருந்தாள். எப்படி இருக்கு விஷால். நல்லா இருக்கு தாங்க்ஸ் சுபா. அனன்யா வந்து பார்த்தாள். சூப்பர் என்றாள். ட்ரீட் குடு விஷால் என்றனர் இருவருமே . கண்டிப்பாக என்றான் விஷால்.அன்று இரவு மூவரும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றனர்.என்ன வேணுமோ வாங்கிக்குங்க என்றான் விஷால். நான் டயட் ல இருக்கேன் என்றாள் சுபா , நானும் தான் என்றாள் அனன்யா.சாப்பிட்டு முடித்ததும்,வீட்டுக்கு கொண்டு போய் விட்டான் இருவரையும். அனன்யா ஃபோன் பண்ணினாள். என்ன விஷால் தூங்கி விட்டாயா .. இல்லை சொல்லு அனன்யா. அப்பாகிட்ட சொல்லவா வேண்டாமா .. வேண்டாம் அனன்யா . இப்போதான் நாம மூணு பேரும் சந்தோஷமா இருக்கோம். அதை கெடுத்துக்க வேணாம். சரி விஷால் good நைட்.

அனன்யாவுக்கு ஒரு சாரி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்தான் விஷால். சுபாவையும் , அனன்யாவையும் கூட்டிக்கொண்டு கடைக்கு போனான். என்ன வாங்க போறோம் என்றாள் அனன்யா உனக்கு saree. என்கிட்டதான் நெறைய இருக்கே . நான் வாங்கி குடுத்தது ஒண்ணு இருக்கட்டுமே என்றான். புடவையில் அனன்யா இன்னும் அழகாக தெரிந்தாள். சுபாவும் ஒன்று எடுத்துக்கொண்டாள் .தாங்க்ஸ் விஷால் என்று இருவரும் சொன்னார்கள்.அனன்யா சாரி கட்டிய போட்டோவை விஷாலுக்கு அனுப்பியிருந்தாள் . சுபா நேராகவே வந்து விட்டாள். சூப்பர் சுபா என்று பாராட்டினான் .

விடுமுறை முடிந்து காலேஜ் போகும் நாள் வந்து விட்டது.அனன்யாவை
பார்த்து லேப்டாப் செட்டிங்கில் இருந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டான்.சுபா ஊருக்கு போய் ரெண்டு நாட்களாகி இருந்தது. சுபா உன்கிட்ட ஏதும் சொன்னாளா என்றான் விஷால். ..இல்லை அவளுக்கு போகவே மனசில்லை.. அனன்யா எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது .. என்னை தூங்க வெச்சிட்டு போயேன் என்றாள்.நான் ஒரு கதை சொல்லவா ? ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி இருந்தாளாம். அனன்யா அவன் மடியில் தலை வைத்தவாறே கதை கேட்டாள் ..அவள் ரொம்ப அழகாம்... அவ அழகுல மயங்குன ராட்சசன் கிட்ட மாட்டிக்கிட்டா. அவளுக்காக என்ன வேணா செய்ய தயாரா இருந்தான். அவனும் அவளுக்காக என்னென்னவோ செஞ்சான். டிரஸ், நகை இன்னும் என்னென்னவோ கொடுத்து பார்த்தான். அவ மயங்கல அப்போதான் அந்த மாளிகைல வேலை செய்யுற வேலைக்காரன் ராஜகுமாரிய பார்த்தான் . இவளை எப்படியாவது காப்பாத்தணும் அப்டின்னு நினைத்தான்... அனன்யா தூங்கி விட்டாள். அவளை படுக்கையில் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டான் . அங்கே இல்ல இங்கே என்று உதட்டை தொட்டுக்காட்டினாள் .குட் நைட் விஷால் .

மறுநாள் இவன் வாங்கி கொடுத்த சாரியில் college வந்திருந்தாள் அனன்யா.ரொம்ப அழகு என்றான் விஷால்.நேற்று நீ என்ன பண்ணின? கதை சொன்னேன் நீ தூங்க. அதுக்கப்புறம் ? கிஸ் பண்னினேன் .. எங்க கிஸ் கொடுத்த லிப்ஸ் ல. அவ்ளோதானா ? நான் என்னென்னவோ நினைச்சுட்டேன்..தூக்கத்துல.. இன்னைக்கு நைட் ஃபோன் ல கதை சொல்லுறியா கண்டிப்பா.அனன்யாவும் இவனும் லைப்ரரி போய் விட்டு வருவதற்குள் எல்லோரும் கிளம்பி விட்டார்கள் . மழை வேறு வந்து விட்டது .மழையில் நன்றாக நனைந்து விட்டாள். நாளைக்கு ஜுரம் வர போகிறது என்றான். வந்தா நல்லது நீ என் கூடவே இருப்பே இல்ல என்றாள்.

ஜுரம் இவனுக்கு வந்து விட்டது . டாக்டர் சாதாரண காய்ச்சல் தான் என்றார். மாலை வந்து அனன்யா பார்த்தாள். நேத்து நீ என்னை ஈரத்தோட கட்டி பிடித்து இருக்க கூடாது என்றாள். என்னவோ உன்னை புடவையில் பார்த்ததும் மூட் ஆயிடுச்சு . சரி ரெஸ்ட் எடு நான் வெந்நீர் போட்டு எடுத்துட்டு வரேன். ரொம்ப ஜுரமா இருக்கா என தொட்டு பார்த்தாள்.மறுநாள் காலேஜ் போனான் . இப்போ எப்படி இருக்கு பரவாயில்லை..ரிசல்ட் வந்து விட்டிருந்தது . இவன் எல்லா
பேப்பர்களையும் கிளியர் செய்திருந்தான். அனன்யாவும் நல்ல மார்க் வாங்கியிருந்தாள் .

நீ நல்ல மார்க் வாங்கிட்டே, நான் வெறும் பாஸ் என்றான் விஷால்.அதனால் என்ன அடுத்த முறை நெறைய மார்க் வாங்கு என்றாள் . நைட் ஸ்டடி பண்ணுவோம் என்றாள் அனன்யா சிரித்து கொண்டே . நிஜமாவா என்றான் . ம் ஆனால் தீபா வருவா உனக்கு ஓகே என்றாள் சொல்லு . எனக்கு ஓகே தான். நான் தீபா கிட்ட பேசுறேன். அனன்யா விஷாலுக்கு ஃபோன் செய்தாள். தீபா ஓகே சொல்லிட்டா . இன்னைக்கு நைட் 8 மணிக்கு அவ வீட்டுக்கு வந்துவிடு .அனன்யா மறுபடி அதே சாரியில் வந்திருந்தாள் .தீபா வாங்க வாங்க என்று இவனை வரவேற்றாள்.என்ன அனன்யா இவ வேற நடுவுல என்றான். அவ 10 மணிக்கெல்லாம் தூங்க போயிடுவா .

அனன்யா இப்போ ஜுரம் இல்லையே என்று தொட்டு பார்த்தாள். சொன்ன மாதிரி தீபா 10 மணிக்கெல்லாம் கீழே போய் தூங்க போய்விட்டாள்.அந்த கதை சொல்லு என்றாள் ஆர்வமாக எதுக்கு நீ தூங்குறதுக்கா ? என்றான். அவள் இவனுக்கு மேத்ஸ் சொல்லி கொடுத்தாள்.அனன்யா பசிக்குது என்றான். ஏன் சாப்பிடவில்லையா? இது அந்த பசி இல்லை. கொஞ்சம் இரு கீழ போய் பார்த்துட்டு வரேன்.தீபா டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள்.தீபா அங்கேயே ஒரு பெஞ்சில் தூங்க தொடங்கினாள். இவன் ஏக்கத்துடன் அனன்யாவை பார்த்தான்.நேத்து அந்த தீபா வந்து காரியத்தையே கெடுத்து விட்டாள் என்றான் விஷால் . இல்லேன்னா மட்டும் நீ என்று அனன்யா அலுத்து கொண்டாள்.

விஷால் வகுப்பு முடிந்ததும் என்னை வந்து பார் என ஹெச் ஓ டி சொல்லி இருந்தார். நான் உன்னை ஏற்கனவே வார்ன் பண்ணி இருந்தேன். இன்னைக்கு அனன்யா அப்பாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு . நான் எப்படியோ சமாளித்து விட்டேன். என்ன சொன்னாரு சார் அவர் . நீ நைட் ஸ்டடி போறியா . அதை உடனே நிறுத்து . தேவையில்லாம மாட்டிக்காதே என்றார். சரி சார் நான் போகலை . அனன்யாவுடன் பழகுவதை கொஞ்ச நாள் நிறுத்து . சார் ?? வேற வழி இல்லைப்பா .
அனன்யா விஷாலுக்கு ஃபோன் செய்தாள் .விஷயத்தை கேள்விபட்டதும் அவளும் அப்செட் ஆனாள் .சுபா ஃபோன் பண்ணினாள் . அவர் சொல்லுறதும் நியாயம்தானே கொஞ்ச நாள் பொறுமையா இரு என்றாள். அது வந்து நான் பேசாம போயிட்டதா அனன்யா நினைப்பாள் . அதெல்லாம் அவகிட்ட நான் பேசிக்குறேன் . நீ வம்புல மாட்டிக்கிட்டு என்னையும் தவிக்க விடாதே என்றாள். சரி சுபா. அனன்யாவை பார்க்காமல் இவனால் இருக்க முடியவில்லை. அவளும் எதுவும் பேசாமல் போனாள்.

அனன்யா வீட்டுக்கு போவதை விஷால் நிறுத்தி விட்டான். சுபாதான் அவ்வபோது ஆறுதலாக பேசி வந்தாள். அனன்யா நேற்று அழுததாகவும் சொன்னாள். இவனுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது . தன் மீதே வெறுப்பும் வந்தது .அவளுடைய நினைவுகள் மறக்க முடியாத வலியை ஏற்படுத்தியது. அவள் ஃபோன் பண்ண மாட்டாளா என்று ஏங்கினான் . எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள பழகினான். ஒரு வாரம் ஓடி விட்டது . அனன்யா வகுப்புக்கு வருவதும் அமைதியாய் போவதும் தொடர்ந்தது . அனன்யா கொடுத்ததாக தீபா ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுத்தாள். அன்புள்ள விஷாலுக்கு என்னை முதலில் மன்னித்து விடு . உன்னை பிரிய முடியாமல் தான் இந்த தற்காலிக முடிவை எடுத்துள்ளேன் . உன்னை என்றும் மறக்க மாட்டேன் . இப்படிக்கு உன் அன்பு அனன்யா . இவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது .

எப்படியாவது அனன்யாவுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய் என சுபாவிடம் கேட்டுகொண்டான் .கிளாஸ் டூர் போவதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகி இருந்தது . அனன்யா வரவில்லை சொல்லி விட்டாள். இவனும் வரவில்லை என்று சொல்லி விட்டான். இன்னும் சில பேர் போகவில்லை.வகுப்பில் 10 பேர் மட்டுமே இருந்தனர்.அனன்யாவை பாட சொல்லி கேட்டனர். அவள் மறுத்து விட்டாள்.அவள் தன் இயல்பில் இருந்து மாறிவிட்டாள் .சுபா இவனுக்கு ஆறுதல் சொன்னாள் . நானும் லீவு கேட்டேன் குடுக்கலைடா, இல்லேன்னா இந்நேரம் நானே அங்கு வந்து இருப்பேன் என்றாள்.இரவு ஒரு மணி இருக்கும் அனன்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது . தூக்கம் வரலை உன் குரலை கேக்கணும் போல இருந்தது என்றாள். இவன் அனன்யா நீ எதுக்கும் கவலைபடாதே என்றான்.

சுபா எப்படியோ இரண்டு நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். சுபா வீட்டில் அனன்யா விஷாலுக்காக காத்திருந்தாள். விஷாலை பார்த்ததும் என்ன என்னை கழட்டி விடலாம்னு நினைத்தாயா என்றாள். என்ன சுபா இது என்றான் விஷால். அவ ரொம்ப கஷ்டபடுறா நீ இல்லாம .அனன்யாவையும் விஷாலையும் தனியாக விட்டாள்.அனன்யா விஷாலை கட்டிக்கொண்டாள். என்னால உன்னை விட்டு இருக்க முடியாது ..ம் என்னாலயும் தான். எங்கேயாவது போய் விடலாமா .. அதெல்லாம் வேண்டாம்.அப்பா ஏதாவது சொன்னாரா? இல்லை பிறகு ஏன் பயப்படுற .. அவளை சமாதானபடுத்தினான். சரி நான் போறேன் என்றாள். சுபா நீ இருக்குற வரை அவ கூடவே இரு என்றான் . சரி விஷால்.

விஷால் அனன்யா உன்னை இவ்ளோ லவ் பண்ணுகிறாள் என்பதே எனக்கு ஆச்சரியமா இருக்கு என்றார் ஹெச் ஓ டி . அவள் ஆளே மாறிவிட்டாள் என்றார். சார் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். சரி வர சண்டே ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறேன் என்றார்.ரொம்ப தாங்க்ஸ் சார். ஆனா நீ அவளை கேர் புல்லா பாத்துக்கணும் . சரி சார். சண்டே கிளாஸ் என்றதும் பாதி பேர் வரவில்லை. கிளாஸ் முடிந்ததும் இவனும் அனன்யாவும் மட்டுமே வகுப்பில் இருந்தனர்.விஷால் இங்கே வா என்றாள்.அவள் அருகில் போய் அமர்ந்தான்.உனக்காக இடியாப்பம் பண்ணி இருக்கிறேன் சாப்பிடு என்றாள். நீ சாப்பிட்டியா என்று கேட்டான். இருவரும் ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டனர்.நான் கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன் என்று இவன் மடியில் படுத்துகொண்டாள்.
அரைமணி நேரம் கழித்து எழுந்தாள் . சாரி நைட்டு தூங்குறதே இல்லையா அதான் தூங்கிட்டேன் என்றாள் . விஷால் உன்னை பழையபடி பார்க்கணும் அனன்யா என்றான்.

அடுத்த வாரம் நாம திவ்யா ரூமுக்கு போவோமா நான் அவகிட்ட பேசுறேன் என்றாள். அது சரியா வருமா .. விஷால் எனக்கு உன்கூட இருக்கணும் வேற ஒண்ணும்இல்லை என்றாள். உன் விருப்பம் போல செய் என்றான். சுபா உனக்கு ஃபோன் பண்ணுவா என்றாள். ரொம்ப நேரம் ஆச்சு நான் கிளம்புறேன். நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணுவோம் என்றாள் . சுபா இப்போதான் அனன்யா பேசுனா நீ தைரியமா இரு விஷால் என்றாள்.எப்போது சண்டே வரும் என்று ஆவலாக காத்திருந்தான் . அடுத்த சண்டே அனன்யா ஸ்பெஷல் கிளாஸ் வந்திருந்தாள். கிளாஸ் முடிந்ததும் இருவரும் திவ்யாவின் ரூமுக்கு போனார்கள். நான் உனக்கேதாவது பண்ணி தரேன் விஷால் என்ன வேண்டும் என்றாள். அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ வந்ததே போதும். திவ்யா ஃபிரண்ட்ஸ் கூட சினிமாவுக்கு போயிருக்கிறாள் . அவர்கள் வர 3 மணி நேரம் ஆகும் என்றாள்.

அனன்யா நான் கேசரி பண்ணி தரேன் என்றவாறு சமயலறைக்குள் நுழைந்தாள் . இவனும் பின்னாலே போனான். அவளை கட்டி அணைத்தான். பொறு விஷால் கேசரி பண்ணுகிறேன். அதை விட இது ஸ்வீட் என்று அவளுடைய உதட்டில் முத்தமிட்டான் . இப்படியே பண்ணு கேசரி கருகி விடும் என்றாள். சரி சரி நான் உன்னை டிஸ்டர்ப் செய்யவில்லை .கேசரி கொண்டு வந்து கொடுத்தாள்.சாப்பிட்டான். அவள் அவனை மடியில் படுக்க வைத்து கொண்டாள். என் செல்லத்துக்கு என்ன வேணும் என கொஞ்சினாள் .அடங்கிய குரலில் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் என்ற பாடலை பாடினாள். இவன் தூங்கி விட்டான். விஷாலை எழுப்பினாள்.நாம அடுத்த வாரமும் வருவோம் அப்போ உனக்கு பிடித்த சாரி கட்டி கொண்டு வருகிறேன் என்றாள். அனன்யா ஐ லவ் யு என்றான் . அவள் இவனை கட்டிகொண்டு நான் உன்னைய விட்டு எங்கேயும் போக மாட்டேன்டா என்றாள்.