Yayum Yayum book and story is written by Nithyan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Yayum Yayum is also popular in Science-Fiction in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
யாயும் யாயும் - நாவல்கள்
Nithyan
மூலமாக
தமிழ் Science-Fiction
கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் அனைவரும் அங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது க
1. வருகை
கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் ...மேலும் வாசிக்கஅங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது க
2. தேவதை2024"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்."இல்லையே" என்று மாயா சொன்னாள்."அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர பிற அனைத்து மாணவர்களும் "ப்ச்" என்று சலித்துக் கொண்டனர்."எப்பா டேய்! மொக்க மோகா, கீழ விழுந்ததுல உனக்கு ஏதாவது தலையில கீது பட்டுருச்சா" என்றான் மோகனது நண்பன் ...மேலும் வாசிக்கஅணியில் இருந்தவர்களில் ஒருவன், "மாப்ள இவன காலுல அடிச்சதுக்கு பதிலா வாய்ல போட்டிருக்கணும் டா" என்றான்.பிற அனைத்து மாணவர்களும் மெல்ல சிரித்து விட்டு, மோகனை அவனது ஹாக்கிக் குழுவிடம் விட்டு விட்டு அவரவர் பயிற்சிக்கு திரும்பினர். ஓடிக்கொண்டிருந்த மாயாவை அவன் மெல்ல சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மாயா திரும்பாமலே தெரிந்து கொண்டாள்.மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு மொத்தக் கல்லூரியே பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் போட்டியில் வென்று விட வெறித் தனமாக பயிற்சி எடுத்துக்
3. தந்தைஅந்த நள்ளிரவில் இருளும் அமைதியும் ததும்பிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று அங்கு ஆந்தையின் அலறல் கேட்டது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. தார் சாலையில் சருகுகள் உராயும் ஓசை அந்த இரவின் அமைதியை உடைப்பது போல இருந்தது. வீட்டின் கதவை திறந்து கொண்டு மாயா வெளியே வந்தாள்.என்ன செய்தும் அவளால் அன்று தூங்க ...மேலும் வாசிக்ககண்களை மூடினால், மோகனின் முகம் அவனது கள்ளமற்ற காதல் பொழியும் கண்கள் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்பதற்காக தன்னைத் தானே வெறுக்கக் கூடிய அவளது நிலையை நினைத்து அவள் மீதே அவளுக்கு சுய இரக்கம் உண்டானது.காற்றில் அவளது அவிழ்த்து விடப்பட்ட தலைமுடி அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த தார் சாலையில் நடந்து கொண்டே இருந்தாள். இப்படி நடந்த படியே எங்காவது கண் காணாத இடத்திற்கு போக முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சாலை முடிகிற வரை
4. Welcomeமோகன் முகத்தில் ஒரு பெரும் சிரிப்புடன் நடந்து வந்தான். அன்று நடந்ததை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டான். ஒரு வழியாக அவன் மாயாவிடம் பேசி விட்டான். அவனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.வீட்டின் கதவைத் தட்டினான். வீட்டிற்கு முன்பு கலைவாணி மனநல மருத்துவர் என்று பொன்னிற பலகையில் கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. ...மேலும் வாசிக்கஅத்தை கதவைத் திறந்தாள். மஞ்சள் நிற டாப்சும் வெளிறிய நீல நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தாள். அவளுக்கு முப்பத்தெட்டு வயது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். உறவில் அத்தை என்றாலும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அக்கா போலவும் பாசத்தைக் காட்டுவதில் அம்மா போலவும் இருந்தாள்."ஏண்டா இப்படி பல்லைக் காட்டிட்டு வர?" என்று கேட்டாள்."ஒன்னுமில்லையே" என்று சொல்லிவிட்டு அவளைத்தாண்டி வீட்டிற்குள் சென்றான்."ஏய், என்னமோ இருக்கு சொல்லுடா" என்று பின்னால் வந்தபடியே கேட்டாள்."அட ஒண்ணுமில்லை த்தை" என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தனது அறைக்கு ஓடினான்."டேய். சரி
5. மறைக்க முடியாதவைகலைவாணி அந்நகரிலேயே மிகச்சிறந்த உளவியலாளராக இருந்தாள். அத்தனைப் பட்டங்கள், அத்தனை விருதுகள். வாழவே முடியாத பலரும் அவளைத் தேடி வந்திருக்கிறார்கள். பலரை அவர்களது தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டிருக்கிறாள். பலருடைய கவலைகளை அவள் எடுத்துக் கொண்டு மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ அவள் உதவி இருக்கிறாள். ஆனால், இன்று அவளது கவலையை ...மேலும் வாசிக்கசொல்லித் தீர்ப்பது என்று தெரியவில்லை.விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமே இருந்த நிலையில் மோகன் திடீரென வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்.அதுவும் அவனுக்கு என்னவென்றே புரியாத ஒரு அபூர்வ சக்தியுடன்.தனது காரை எடுத்துக் கொண்டு கலைவாணி அந்த நகரம் முழுக்க சுற்றித் திரிந்தாள். போலீசுக்கோ அல்லது தெரிந்த ஏதாவது நண்பர்களுக்கோ உதவிக்கு அழைக்கலாம் என்றால், பின்னர் அதுவே ஆபத்தாக முடியுமென்று அவள் அஞ்சினாள். அதனால், அவளே தனியொருத்தியாக அந்த மழை இரவில் மோகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள்.எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. அவள் நம்பிக்கை மெல்ல மெல்ல