Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 18

இரண்டு நாட்கள் கழித்து தீபா புது சிஸ்டம் வாங்க வேண்டுமென அனன்யாவையும் , விஷாலையும் அழைத்து கொண்டு கடைக்கு போயிருந்தாள். இருவரும் தற்போதுதான் புது லேப்டாப் வாங்கி இருந்ததால் ,அவர்கள் இருவரும் சொன்ன மாடல் லேப்டாப் வாங்கி கொண்டாள் தீபா. ட்ரீட் ஒண்ணும் இல்லையா என்றான் விஷால். நாளைக்கு ஐஸ் கிரீம் ஷாப் கூட்டிட்டு போ என்றான். சரி நாளைக்கு ஈவினிங் 7 மணிக்கு, அதோட நைட் ஸ்டடி என்றாள் அனன்யா.

எதுக்கு அனன்யா நைட் ஸ்டடி? இப்பல்லாம் நீ இல்லாம தூங்கவே முடியலடா அதான் சொன்னேன்.7 மணிக்கு வந்து விட்டார்கள் மூவரும் . சுபாவுக்கு வீடியோ கால் பண்ணி பேசினார்கள் . என்ஜாய் பண்ணுங்கள் என்றாள். தீபா லேப்டாப் எப்படி இருக்கு ? நல்லா ஸ்பீட் ஆக இருக்கு என்றாள். நெட் கனெக்ஷன் குடுத்து விட்டாயா ? நாளைக்குதான் வராங்க .அப்ப ஓகே.அனன்யாவும் இவனும் ஒரு ஐஸ் கிரீமை பகிர்ந்து கொண்டனர். போதுமா இன்னும் ஆர்டர் பன்னவா என்றாள் தீபா. போதும் போதும் என்றான் விஷால்.ஸ்வெட்டர் வாங்கணும் என்றாள் அனன்யா . வாங்கலாமே போவோம் என்று போனார்கள். அவள் இவனுக்கு ஒரு jerkin சேர்த்து எடுத்தாள் .

குளிர் அன்று மீடியம் ஆக இருந்தது . முன்பே டீ போட்டு பிளாஸ்க் இல் எடுத்து வந்தாள் தீபா. நீ படி விஷால். நான் கீழே போய் கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறேன் என்றாள். இவன் பொறுப்புடன் படிக்க தொடங்கினான். 11 மணி போல மேலே வந்தாள் அனன்யா. இவ்ளோ நேரமா டிவி பார்த்தே ?சீரியல் எல்லாம் இப்பதான் முடிஞ்சுது . இது வேறயா என்றான். டீ குடித்தார்கள் இருவரும் . புது ஸ்வெட்டர் போட்டு வந்திருந்தாள் அனன்யா.நல்லா இருக்கு என்றான். தீபா வாங்க என் ரூமுக்கு உள்ள போகலாம் என்றாள். வேண்டாம் இங்கேயே இருக்கலாம் .காத்து நல்லா வருது . இல்ல விஷால் . எனக்கு லேப்டாப் ல சில சந்தேகம் . இருவரும் அவளுக்கு சந்தேகங்களை விளக்கினர் .

அனன்யா விஷாலை பார்த்தாள் . லேப்டாப் ல ஏதாவது படம் பார்க்கலாமா ? படம் போட்டா தீபா தூங்கிடுவாளே அதெல்லாம் இப்போ இல்லை விஷால் என்றாள். ஏதோ ஒரு காதல் படம் பார்த்தார்கள் மூவரும். விஷால் தூங்கி விழுந்தான். டேய் தூங்காத என்றாள் அனன்யா. பிறகு போய் முகம் கழுவி வந்தான். படம் சின்ன படம் அதற்குள் முடிந்து விட்டிருந்தது . சரி தீபா இன்னும் கொஞ்ச நேரம் படிச்சுட்டு வரேன் . வேண்டாம் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றாள் தீபா. இவன் சோபாவில் படுத்திருந்தான் . அனன்யா கீழே படுத்திருந்தாள். தீபா உள்ளே போய் விட்டாள் . இவன் முழித்து பார்த்த போது மணி 2 ஆகி இருந்தது . அனன்யா தூங்கி கொண்டிருந்தாள். விஷால் ரொம்ப குளிருது டா. அதான் ஸ்வெட்டர் போட்டிருக்கியே . கால் பகுதியிலே குளிருதுடா . இவனுடைய பெட் ஷீட் போர்த்தி விட்டான்.மெல்ல அவளுடைய கால்களை பிடித்து விட்டான். கால்களை அகட்டினாள் . இன்னும் மேல விஷால் என்று அவன் கையை பிடித்து தொடையில் வைத்தாள். மெதுவாக பிடித்து விட்டான். அவள் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யு அனன்யா என்றான். என்னை கல்யாணம் பண்ணிக்கோடா சீக்கிரம் என்றாள்.


மறுநாள் இவனுக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது .தும்மல் மேல் தும்மலாக போட்டுக்கொண்டிருந்தான். தலைவலியும் இருந்தது . அனன்யா ஃபோன் செய்தாள் . இவன் கொஞ்சம் தலைவலி என்று சொன்னான். சரி நீ ரெஸ்ட் எடுத்துக்க என்றாள்.மதியம் வரேன் என்றாள். தீபாவுக்கு எப்படியோ தகவல் போய் அவளும் வந்துவிட்டாள்.இருவரும் தைலத்தை கால்களிலும் நெஞ்சிலும் தேய்த்து விட்டனர். இதுக்கு எதுக்கு ரெண்டு பேரும் லீவு போட்டீங்க என்றான்.இருவரும் உன்னை கவனிச்சிக்க என்றனர். சுபா வேறு ஃபோன் செய்தாள்.மதியம் food ஆர்டர் பண்ணினார்கள். இவனுக்கு அனன்யா ஊட்டி விட்டாள். அவளும் அப்படியே கொஞ்சம் சாப்பிட்டாள் . தீபா எல்லவற்றையும் ஒழுங்குபடுத்தி சுத்தபடுத்தினாள் . நீ கொஞ்சம் தூங்கு விஷால் என்றாள் தீபா. அனன்யா ஒரு தாலாட்டு பாடலை பாடி அவனை தூங்க வைத்தாள். பகலில் தூங்கி விட்டதால் நைட் கண்ணு முழிக்க வேண்டியதுதான் என நினைத்தான் விஷால். தீபா வீட்டுக்கு போகவில்லை. அனன்யா ஃபோன் செய்தாள். இப்போ எப்படி இருக்கு ? ஓகே தான்.நான் வேணும்னா வர வா என்றாள்.அதெல்லாம் வேணாம் ரெஸ்ட் எடு என்றான். மறு நாள் காலேஜ் சீக்கிரமாகவே போய் விட்டான். அவள் உட்காரும் இடத்தில் போய் படுத்து கொண்டான். இப்போ எப்படி இருக்கு என்றாள் . பரவாயில்லை . சாயங்காலம் டாக்டர் கிட்ட அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருக்கேன் போவோம். எதுக்கு அனன்யா ? சொன்னா கேக்கணும் என்றாள்.டாக்டர் விஷாலை பரிசோதித்து விட்டு சில மருந்துகளை எழுதி கொடுத்தார்.நாளைக்கு பார்க்கிறேன் விஷால் என்று விடை பெற்று போனாள்.

எப்பவும் போல காலேஜ் போனான். தீபா அவனை பார்த்து விசாரித்தாள் . நேத்து ஹாஸ்பிடல் போனியா ஏன் என்கிட்ட சொல்லல . அதுவா அனன்யா எனக்கே தெரியாம appointment வாங்கி விட்டாள். நீ பேசாம ஒரு ரெண்டு நாள் என் வீட்டுல வந்து இரு என்றாள். அதெல்லாம் வேண்டாம் தீபா. சரி இப்போ ஓகே தானே . ஓகே தான்.அப்போ நாளைக்கு ஒரு ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போறோம் என்றாள். ஜாலியா போயிட்டு வாங்க என்றாள் அனன்யா.பஸ்ல போறோமா இல்ல டிரைன்ல போலாம் என்றாள்.கூட தீபா அம்மாவும் வந்திருந்தாள் . என்ன அமைதியா வருகிறாய் என்றாள். அனன்யா இல்லாம நான் எங்கேயும் போனதில்ல அதான் அவ நினைப்பா இருக்கு .

கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது . சுபாவுக்கும் , அனன்யாவுக்கும் போட்டோக்கள் அனுப்பினான். திரும்ப வரும் போது அவள் அம்மாவை அங்கேயே தங்க சொல்லி விட்டார்கள். இவனும் , தீபாவும் மட்டும் திரும்ப வந்தனர். நான் அனன்யாவை வர சொல்லுறேன். நீ தனியா இருக்க வேண்டாம். சரி விஷால் . நீயும் வா விஷால். அது வந்து சும்மா வா விஷால்.. அனன்யா வந்துவிட்டாள். தீபா , அனன்யா இருவரும் ரூமில் படுத்துக்கொண்டனர் . இவன் ஹாலில் படுத்துக்கொண்டான் . அனன்யா ஃபங்சன் எப்படி போச்சு நல்லா இருந்ததது . போட்டோஸ் அனுப்பி இருந்தேனே .பாத்தேன் நல்லா இருந்தது . விஷால் இருமும் சத்தம் கேட்டு இருவரும் வந்து பார்த்தனர் . என்ன ஆச்சு விஷால் டேப்லெட் போட்டியா இல்லையா?மறந்துட்டேன் டேய் ஏண்டா இப்படி பண்ணுற ..தீபா அந்த தைலம் கொண்டு வா. கொஞ்சம் வெந்நீர் குடிக்கிறியா .. எதுக்கு அனன்யா நீ போய் தூங்கு. சொன்னா கேக்கணும் நீ போய் வெந்நீர் கொண்டு வா தீபா.கோபத்தில் அனன்யா முகம் சிவந்து போய் விட்டது .

சாரி அனன்யா பேசாத என்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் டேப்லெட் எடுத்துக்க என்று. சாரி அனன்யா என்று அவளை இழுத்து அணைத்தான். அனன்யா கண்களில் கண்ணீர் . என்ன ஆச்சு லைட் போடு தீபா . நான் செஞ்ச தப்புக்கு நீ ஏன் அழனும். எனக்கு என்னவோ அழுகை வருது. உன்னை சரியாய் பார்த்துக்க முடியலைல.என் பட்டு குட்டி நீ . நீ அழுதா என்னால தாங்க முடியாது என்றான். தீபா நீ போய் படுத்துக்க இதை பார்த்த தீபாவும் அழுதாள்.மாடிக்கு போலாமா ரொம்ப குளிரா இருக்குமே .. உனக்கு மறுபடி இருமல் வரும். சரி நீ போய் படு . நான் கீழேயே படுத்துக்கிறேன் . தீபாவும் வந்து படுத்து கொண்டாள்.
ஏதாவது வேணும்னா என்னை எழுப்பு என்றாள் அனன்யா.

மணி 12 இருக்கும் .. விழிப்பு வந்து விட்டது . அனன்யா என்ன விஷால் என்றாள். பாத்ரூம் போகணும். போய்ட்டு வா . பால் சுட வைத்து தர வா என்றாள். நீ இன்னும் தூங்கலையா ? தீபா போய் சுட வைத்து எடுத்து வந்தாள்.பாலை குடித்தான் . வேற ஏதாவது வேணுமா விஷால். அவளுடைய மடியில் படுத்து கொண்டான். தீபா அவனுடைய கால்களை பிடித்து விட்டாள்.அனன்யா அவன் தூங்கியதும் மெதுவாக சோபாவில் வைத்தாள். காலை 5 மணிக்கெல்லாம் அனன்யா எழுந்து வந்த போது தீபா விஷாலை தொட்டு பார்த்து கொண்டிருந்தாள் . ஜுரம் இருக்கா இல்லை மறுபடி இருமல் வந்ததா ? இல்லை என்றாள் தீபா. விஷால் எழுந்து இருக்கும் போது மணி காலை 8 ஆகி இருந்தது . காலேஜ் போற டைம் ஆகி விட்டதே என்றான். இன்னைக்கு லீவு என்றாள். நீ, நான், அனன்யா மூணு பேரும். எதுக்காக நீ சரியா சாப்பிடுறது இல்ல, தூங்குறது இல்ல அதான் இன்னைக்கு ரெஸ்ட் .

அனன்யா எங்கே? வீட்டுக்கு போயிருக்கா அவ வீட்டுக்கா இல்ல உன் வீட்டுக்கு எதுக்கு டேப்லெட் எடுக்க . நீ எங்கேயும் போக கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிட்டா. ம்ம்.. நீ குளிக்க hot வாட்டர் ரெடி . சரி தீபா. அவளே உன்னை வந்து குளிப்பாட்டுவா ..எதுக்கு அனன்யா இதெல்லாம்.இந்தா காய்கறி நீ சொன்ன எல்லாம் வாங்கிட்டேன். நீ வா குளிக்கலாம் . நான் குளிச்சுக்கிறேன் . சொன்னா கேக்கணும் இல்லேன்னா சுபாவை வர சொல்லிடுவேன் , அதெல்லாம் வேண்டாம் அப்போ நீ போய் டவல் மாத்திட்டு வா. வெந்நீர் சூடு போதுமா . போதும் .நானும் குளிக்க போறேன் என்றவாறு போய் குளித்து விட்டு வந்தாள். என்ன மாதிரியான அன்பு இது என்று அவனுக்கு புரியவில்லை.டிபன் சாப்பிட்டுவிட்டு இந்த டேப்லெட் போட்டுக்கோ விஷால் என்றாள்.

அவளும், தீபாவும் சாப்பிட்டனர். பக்கத்துல இருக்க கோவிலுக்கு போயிட்டு வந்து விடுகிறோம் என்றனர். அரை மணி நேரத்தில் வந்து விட்டனர். திருநீரும் , குங்குமமும் வைத்து விட்டாள் தீபா.தீபா நான் கடைக்கு போய் விட்டு வந்து விடுகிறேன் என்று போனாள்.அனன்யா பய பக்தியோடு சாமி பாட்டு ஒன்றை உருக்கமாக பாடினாள்.டீ போட்டு தரவா என்றாள். சரி போடு என்றான்.டீ அருமையாக இருந்தது . சூப்பர் என்றான். தீபா வந்ததும் ,நான் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டு வரேன் என்றாள் நீ இவனை கவனமா பார்த்துக்கொள் என்றாள். துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தாள் தீபா. மாடிக்கு போய் இருவரும் காய போட்டனர்.ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டாள் அனன்யா.
கிச்சன் உள்ளே போனாள் அனன்யா . தீபாவும் இவளும் ஏதோ சமைத்து கொண்டிருந்தனர். அனன்யா இங்கே வா என்று கூப்பிட்டான் விஷால் . சுபா ஃபோன் பண்ணினாளா என்றான் .எப்படி இருக்கா நல்லா இருக்கா .ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுத்து வைத்திருந்தாள் .மதியம் சூப்பர் மார்க்கெட் போய் பணம் கொடுக்கணும் நான் போய்ட்டு வரேன் என்று கிளம்பினாள் தீபா.
இவனும், அனன்யாவும் சாப்பிட்டனர் . அனன்யா நான் மேல இருக்கேன் ஏதாவது வேணும்னா கூப்பிடு என்றாள்.

இவன் மேலே போய் பார்த்தான் . அவள் தீவிரமாக படித்து கொண்டிருந்தாள். தீபா வந்ததும் அனன்யா கீழே வந்தாள்.தீபா உள்ளே போய் தூங்கி கொண்டிருந்தாள், பாவம் தீபா நைட் புல்லா தூங்கலை என்றாள் அனன்யா. காயப்போட்ட துணிகளை எடுத்து வந்தான். இருவரும் சேர்ந்து மடித்தனர். விஷால் அனன்யாவை பார்த்தான். என்ன வேணும் விஷால்.சோபாவில் உட்கார்ந்தாள். இங்கே வா என்று அவனை மடியில் கிடத்தினாள் . நான் இருக்குற வரை நீ எதை பத்தியும் கவலை படக்கூடாது என்றாள். அவனை தட்டி கொடுத்தாள். தூங்கி போனான். அவளும் சோபாவில் சாய்ந்த படியே தூங்கினாள்.

மாலை மணி 4 ஆனதும் இவனை எழுப்பினாள். பால் வாங்கிட்டு வரியா என்றாள். சரி . தீபாவையும் எழுப்பினாள். தீபா இருவருக்கும் டீ போட்டு குடுத்து தானும் குடித்தாள்.தீபா அம்மா வந்து விட்டார்கள். நாங்க வரோம் என்று அனன்யாவும் , விஷாலும் விடை பெற்று கொண்டனர்.விஷால் அனன்யாவை வீட்டில் விட்டான். உள்ளே வா என்றாள். உடை மாற்றி வந்தாள். நாளைக்கு காலேஜ் வரும் போது ரோஸ் வாங்கிட்டு வா என்றாள்.தீபாவுக்கும் சேர்த்து வாங்கிட்டு வா என்றாள்.கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்றான் விஷால்.