காலையில் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தினேஷ் நின்று கொண்டிருந்தான். என்னப்பா வேணும் ?எங்க அம்மாவை காணோம் சார் என்றான். எத்தனை நாளா ? 10 நாள் ஆச்சு சார்.உன் பேரென்ன தினேஷ். வீடு எங்க இங்க தென்றல் நகர். எழுதி கொடுத்துட்டு போ நாங்க பார்க்கிறோம் என்றார்கள். மீரா காணாமல் போன விஷயம் ராக்கிக்கு லேட் ஆகத்தான் தெரிந்தது. ராக்கியும் சௌமியாவும் கடைக்கு சென்ற போது கடை பூட்டியிருந்தது. மீரா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ரம்யா ஃபோன் எடுக்கவில்லை. தினேஷ் வீட்டுக்கு போன போது அவன் அழுது கொண்டிருந்தான். நான் போலீஸ் ல கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கேன் சார் என்றான். ரம்யா வீடு எங்கே என்று தெரியுமா என கேட்டான். தெரியுமே . நீயும் வருகிறாயா என்றான் . சரி போகலாம் .நீ எதுவும் சாப்பிட்டாயா ? வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட வைத்து அழைத்து சென்றான்.