Nizhal Tharum Vasantham book and story is written by kattupaya s in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Nizhal Tharum Vasantham is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து 2 வருஷம் ஓடி விட்டது. அவனுடையது நல்ல காலேஜ் தான். இவனும் நன்றாகத்தான் படித்தான். ஆனால் இன்டர்வியூ என்று வரும் போதுதான் நெருக்கடிகள் அதிகம் வருகின்றன. இதற்கிடையில் ...மேலும் வாசிக்கபோல சௌமியா உடன் காதல். அவள் விட்டு விட போவதில்லை. குடும்ப சூழ்நிலை பரவாயில்லை. தம்பி வேலைக்கு போகிறான். அவன் பார்த்து கொள்கிறான். அவன் டிப்ளோமா முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது. தானும் அளவாய் படித்திருக்க வேண்டும் என எண்ணினான்.ரொம்ப படித்தவர்களால்தான் நாட்டில் தொல்லை.சௌமியா வேலைக்கு போகிறாள். அவள் அப்பா பெரிய காண்ட்ராக்ட் கம்பெனி நடத்துபவர். அவர் நினைத்தால் வேலை கிடைக்கும் ஆனால் அதை அவன் விரும்பவில்லை.தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை விட எவ்வளவோ முயன்றும் அது நேர்முக தேர்வில் வெளிப்பட்டு விடுகிறது.சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள்
விதி - விதியின் போக்கிலே தான் நாம் அனைவரும் போய்க்கொண்டு இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் அதன் கைப்பாவைகள் ஆகிறோம் என்று சொல்லி முடித்தார் ஸ்வாமிகள். விதியின் திட்டமிடலில் இருந்து தப்ப முடியாதா ஸ்வாமி என்று சுபா கேட்டாள் . வழி இருக்கிறது. நம்முடைய சரீரத்தை கட்டுப்படுத்துவதான் மூலம் நம்முடைய ஆசைகள் பேராசைகளாய் மாறுவதை ...மேலும் வாசிக்கமூலம் ஓரளவுக்கு விதியின் போக்கை தடுக்கலாம் என முடித்தார். ரொம்ப நன்றி ஸ்வாமி என்றாள் சுபா. ஸ்வாமிகள் நல்ல விஷயமா பேசுறார் பிரேம் .. ஆமா அது ஒரு வகையில் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது தான். நாளைக்கு வீடு பாக்க போகணும் மார்னிங் 10 மணிக்கெல்லாம் வந்துடு என்றாள். நல்லா யோசிச்சுக்க நாளைக்கு நம்ம ரெண்டு பேரையும் யாராவது தப்பா பேச வாய்ப்பிருக்கு என்றான் பிரேம். அதை பத்தி எனக்கு கவலை இல்லை. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி வரேன் என்றான்.
வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகி விட்டிருந்தது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை.. சுபா கொஞ்சம் பொறுமை இழந்தவளாக காணப்பட்டாள் . ஏன் பிரேம் எனக்கு மட்டும் இப்படி நடக்குது என்றாள். இன்று வக்கீலை பார்த்து பேசிவிட்டு வருவோம் என்றான். காலை 11 மணிக்கு வர சொல்லியிருந்தார். இவனும் பர்மிஷன் போட்டு விட்டு ...மேலும் வாசிக்ககூட போனான். இவர்களை வரவேற்ற வக்கீல் பிரேம் குறித்து விசாரித்தார். இது ஒரு சாதாரண கேஸ் உனக்கு ஜீவனாம்சம் கூட வேணாம்னு சொல்லிட்ட அப்புறமும் மதன் ஏன் இப்படி பண்ணுகிறார் என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் பேசி பாருங்களேன் சார் என்று பிரேம் சொன்னான். நிச்சயம் பேசுகிறேன் எனக்கு சுபாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீங்கள் மனம் தளர வேண்டாம் எப்படியும் 3 மாதத்துக்குள் விவாகரத்து வாங்கி விடலாம் என்றார். இவர்கள் விடை பெற்றுக்கொண்டார்கள். சௌமியாவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவளுக்கு ஃபோன்
பிரேம் சுபாவை சமாதானபடுத்தினான்.அவன் அவளை தவறாக நினைக்கவில்லை என்றும் கூறினான். அவளுடைய சூழ்நிலை காரணமாகவே அவ்வாறு கோர்ட்டில் கூறினாள் என்பதை உணர்ந்திருந்தான். மதன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான் சுபாவை அவமானபடுத்த நினைத்தவன் கடைசியில் தானே பிரேமையும் சுபாவையும் சேர்க்க காரணமாகிவிடுவோமோ என யோசித்தான. சுபா இப்படி செய்வாள் என பிரேம் எதிர் பார்த்திருக்கவில்லை. ஆனால் ...மேலும் வாசிக்கஅப்படியே விட்டுவிட மனமுமில்லை .சுபா தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் .அத்தோடு அந்த பிரச்சனை முடிந்ததாக பிரேம் நினைத்தான். ஆனால் மதன் அதை பெரிது படுத்தி பார்க்க நினைத்தான்.தீபாவின் காதலன் யார் என்று தெரியாத சூழலில் அவளிடம் அது பற்றி பேச வேண்டாம் என நினைத்தான். தீபாவை விட்டு பிடிப்போம் என நினைத்தான். அதன்படியே லீவு போட்டுவிட்டு அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினான். இதெல்லாம் நமக்கு தேவையா என அவன் மனம் கேட்ட போதும் தீபாவின் எதிர்காலம் கருதி இதை செய்வதில் தப்பில்லை என
நவீனை பார்த்து பேச விரும்பும் பிரேம் அவன் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்கிறான். அபிஷேக் பிரேமுக்கு ஃபோன் செய்து எப்படியாவது நவீனை விட்டுவிடும் படியும் இனிமேல் அவன் தீபா வழிக்கே வரமாட்டான் என்றும் கூறுகிறான். குமரகுருவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்கிறான். இவன் தயங்கியவாறே குமரகுருவிற்கு ஃபோன் செய்தான். அவர்கள் சுபாவை கடத்தி மிரட்டியிருக்கிறார்கள் என்னை ...மேலும் வாசிக்கசும்மா விட சொல்கிறாயா என்றார். அவனை நான் விட்டாலும் போலீஸ் சும்மா விடமாட்டார்கள் அதற்கான ஏற்பாட்டையும் செய்து விட்டேன் என்றார். சிறிது நேரம் பேசாமல் இருந்தவர் அவனை சும்மா விட வேண்டும் என்றால் நீ என் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா அவனை விட்டு விடுகிறேன் என்றார். இவன் மனதில் ஒரு நிமிடம் சௌமியா வந்து போனாள். வேண்டாம் சார் தெரிந்தே அந்த பாவத்தை செய்யாதீர்கள் என்றான். எது பாவம் என பெண் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் யோசித்து சொல் நான் தீபாவிடமும் பேசுகிறேன்