7. காஃபி வித் அப்பாமாயா தனது கைப்பேசியை எடுத்தாள். கீதா அழைத்திருந்தாள். " ஒரு நிமிஷம் ப்பா" என்று சொல்லிவிட்டு மாயா அந்த அழைப்பை எடுத்தாள்."ஹ்ம் சொல்லுடி""மச்சி நீ ஃபிஸிக்ஸ் அசைன்மெண்ட் முடிச்சுட்டியா டி?""நான் அசைன்மெண்ட் முடிச்சுட்டேன் டி. உனக்கு வாட்ஸ் அப் பண்றேன். நீ காப்பி பண்ணிக்கோ""...""..."வாசகர்களுக்கு ஆர்வமில்லாத ஒரு சில தேவையில்லாத விஷயங்களைப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிற போது,"ஹேய், அந்த ட்ராமா பத்தி யோசிச்சியா டீ?""இல்லடி, நான் தான் சொன்னேனே அதெல்லாம் முடியாதுன்னு""அதான், அப்பவே சொல்லிட்டயேடி. மறுபடியும் யோசிச்சியான்னு கேட்டேன்?""இல்லைடி மறுபடியும் அதைப் பத்தி யோசிக்க எனக்கு நேரமுமில்லை விருப்பமுமில்லை""ஏய், ரொம்ப பண்ணாதடி. நான் நடிக்கப் போறேன்னல்ல? நீயும் வா எருமை, நல்லா இருக்கும்.""ஏன்டி, வேண்டாம்னு சொன்னா உனக்கும் புரியாதா? எனக்குப் பிடிக்கல டி"முத்துக்குமரன் மாயாவின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.பின்னர் வந்து "என்னம்மா பிரச்சினை?" என்று கேட்டார்."அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா" என்றாள்."நீ வந்ததுள்ள இருந்து இதை மட்டும் தான் சொல்லிட்டு