6. உடன்படிக்கை மோகன் நீண்ட நாட்களாக தன்னை ஒரு இன்ட்ரோவர்ட் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அது ஒரு பாதி மெய் தான் என்பதை நேற்று உணர்ந்து கொண்டான். நேற்று அவன் மாயாவிடம் பேசியதை அவனால் இன்று வரை நம்ப முடியவில்லை. அதுவும் முதல் தடவை பேசிய போதே அவளை தேவதை என்று சொல்லியதை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.அவளது நினைவு, நாளுக்கு நாள் அவனுக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. நேற்று கனவில் மாயா வந்ததை நினைத்துப் பார்த்தான். அதை நினைக்கையில் அந்தக் கனவைக் தொடர்ந்து வந்த கெட்டக் கனவையும் நினைத்துப் பார்த்தான். கூடவே, அவனது அத்தையின் நினைவும் வந்தது. "அவளோட பையனா இருந்திருந்தா நல்லா பாத்திருப்பா, அவன் அண்ணன் பையன்னு சொல்லித் தான் இப்படி விட்டுட்டான்னு யாரும் என்னைய பார்த்து கேட்கும் படி வைச்சிராத" என்று அவள் கூறியது காதில் ஒலித்தது.அவனது அத்தை அவனுக்காக செய்த அத்தனை தியாகங்களும் அவனுக்குத் தெரியும். அவளுக்காக