யாயும் யாயும் - 5

  • 108

5. மறைக்க முடியாதவைகலைவாணி அந்நகரிலேயே மிகச்சிறந்த உளவியலாளராக இருந்தாள். அத்தனைப் பட்டங்கள், அத்தனை விருதுகள். வாழவே முடியாத பலரும் அவளைத் தேடி வந்திருக்கிறார்கள். பலரை அவர்களது தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டிருக்கிறாள். பலருடைய கவலைகளை அவள் எடுத்துக் கொண்டு மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ அவள் உதவி இருக்கிறாள். ஆனால், இன்று அவளது கவலையை யாரிடம் சொல்லித் தீர்ப்பது என்று தெரியவில்லை.விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமே இருந்த நிலையில் மோகன் திடீரென வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்.அதுவும் அவனுக்கு என்னவென்றே புரியாத ஒரு அபூர்வ சக்தியுடன்.தனது காரை எடுத்துக் கொண்டு கலைவாணி அந்த நகரம் முழுக்க சுற்றித் திரிந்தாள். போலீசுக்கோ அல்லது தெரிந்த ஏதாவது நண்பர்களுக்கோ உதவிக்கு அழைக்கலாம் என்றால், பின்னர் அதுவே ஆபத்தாக முடியுமென்று அவள் அஞ்சினாள். அதனால், அவளே தனியொருத்தியாக அந்த மழை இரவில் மோகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள்.எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. அவள் நம்பிக்கை மெல்ல மெல்ல