யாயும் யாயும் - 3

  • 165

3. தந்தைஅந்த நள்ளிரவில் இருளும் அமைதியும் ததும்பிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று அங்கு ஆந்தையின் அலறல் கேட்டது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. தார் சாலையில் சருகுகள் உராயும் ஓசை அந்த இரவின் அமைதியை உடைப்பது போல இருந்தது. வீட்டின் கதவை திறந்து கொண்டு மாயா வெளியே வந்தாள்.என்ன செய்தும் அவளால் அன்று தூங்க முடியவில்லை. கண்களை மூடினால், மோகனின் முகம் அவனது கள்ளமற்ற காதல் பொழியும் கண்கள் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்பதற்காக தன்னைத் தானே வெறுக்கக் கூடிய அவளது நிலையை நினைத்து அவள் மீதே அவளுக்கு சுய இரக்கம் உண்டானது.காற்றில் அவளது அவிழ்த்து விடப்பட்ட தலைமுடி அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த தார் சாலையில் நடந்து கொண்டே இருந்தாள். இப்படி நடந்த படியே எங்காவது கண் காணாத இடத்திற்கு போக முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சாலை முடிகிற வரை