என்னை சாய்தாலே!! - 1

ஒருத்தன்...காதலை ஒரு விளையாட்டா நினைக்கிறான். ஒருத்தி...காதலை உயிரா நினைக்கிறாள். ️ஆதிரன் × ஆருத்ராஅவளை சாய்க்க நினைத்தவன்...கடைசியில் அவளிடமே சாய்ந்தால்? 🫠️ஈகோ... மோதல்... ஈர்ப்பு... காதல்... கோவம் பொறாமை என்று கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் அவர்களுக்குள் நடக்கப்போகும்ஒரு அழகான காதல் மோதல்! என்னை சாய்த்தாலே... ️‍ஹீரோ அறிமுகம் லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி. அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜையைச் சுற்றி, உலக நாடுகளின் பெரும் தொழிலதிபர்கள் அமர்ந்திருந்தனர்.அறையில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அந்தத் திறந்திருந்த கதவையே உற்று நோக்கின. அங்கே ஒருவனைக் எதிர்பார்த்து அந்த மௌனம் நீடித்தது.கீழே, கட்டிடத்தின் முகப்பில் அந்த கருப்பு நிற சொகுசு கார் வந்து நின்றது. முதலில் வெளியே வந்தது அவனது பளபளக்கும் இத்தாலியன் ஷூக்கள்.ஆறு அடி உயரம்! நேராகச் செதுக்கியது போன்ற உடல்வாகு, ஜிம்முக்குப்