அனைத்து ஒளிகளுக்கும் தலைவியான ஒளிர்மீண் , ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை ஆகாய கங்கையில் உள்ள அனைத்து கிரகங்களிலும் உள்ள உயிரினங்களின் கண்களுக்கு ஒரு பெரும் நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும். நிசிருளி, பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கருப்புதுவளையின் தலைவி இறைவனிடத்தில் ஒளிர்மீண் தேவியின் உடைய இடம் வேண்டும் என்று பிராத்தனை செய்தாள். ஆனால் இறைவனோ ஒளியின் தலைவி ஒளிர்மீண் இருளின் தலைவி நிசிருளி என்று கூறிவிட்டு மறைந்தார். அதனால் கோபமடைந்த நிசிருளி தன்னிடம் உள்ள இருள் சக்தியை வைத்து கால கிரகத்தில் உள்ள தீய சக்திகளை எழுப்பினாள். ஒளி அதிகரிக்கும் இடங்களில் இருள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கு தீய சக்திகளின் உதவியோடு இறைவனிடமே போர் எடுத்து சென்றாள். இறைவனுக்காக பஞ்ச சக்திகள் நிசிருளியை எதிர்த்தார்கள். ஆனால் இருள் தேவியினுடைய சக்தி தீயவர்களோடு இணைந்ததால் பஞ்ச சக்திகள் தோற்று போகும் நிலையில் இருந்தார்கள். என்னுடைய இடம் கிடைக்காததால்