காலையிலேயே மண்டபம் களை கட்டியிருந்தது . நிச்சயதார்த்ததுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ரஷ்மி அப்பா செய்து கொண்டிருந்தார். அருண், ஜோ, பூஜா, சுகன்யா ஆகியோர் வந்திருந்தனர். தென்றல் தன் கணவனோடு வந்திருந்தாள். ராகவும் நிச்சயதார்த்ததுக்கு வந்திருந்தான். எல்லோருக்கும் அது கேள்விக்குறி நிரம்பிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கூடவே கிருஷ்ணனும் சௌமியாவும் நிச்சய ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தனர். சௌமியா ரஷ்மி கூடவே நிழல் போலவே இருந்தாள். பூஜா என்னடா நடக்குது இ ங்கே என்றாள் அருணிடம் . எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா என்றான். ஒருவேளை கல்யாணம் அப்ப ரஷ்மி ராகவ் ஓடி போவார்களோ என்னவோ என்றான். நிச்சயதார்த்தம் நிறைவு பெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ராகவ் அமைதியாய் இருந்தான். அவன் ரஷ்மி மேல் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் காரணமாக அமைதியாய் இருந்தான். நண்பர்கள் விடை பெற்றுகொண்டனர். சௌமியா, பிரதீபா , ராகவ், கிருஷ்ணன் ஆகியோர் மட்டும் இருந்தனர். அப்போது ரஷ்மி வந்து எல்லோரும் சாப்பிட்டீர்களா என