நெருங்கி வா தேவதையே - Part 37

  • 315
  • 84

எதிர்பார்த்த மாதிரி அருண், ஜோ, சுகன்யா மற்றும் பூஜாவின் ப்ராஜக்ட் 2 மாதங்களில் நிறைவு பெற்றது. ரஷ்மி, ராகவ் ப்ராஜக்ட் லேட் ஆனது. ரஷ்மி இன்னும் 6 மாதத்தில் படிப்பு முடிந்துவிடும் அப்புறம் என்ன என்றான் ராகவ். வேலைக்கு போக வேண்டியதுதான் என்றாள். ம் அப்படியா அப்போது உன்னை தினமும் சந்திப்பது கஷ்டம் அப்படித்தானே என்றான். டேய் இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது என்றாள். என் உலகமே நீதானே என்றான். அவள் அவனை அணைத்துக்கொண்டாள்.நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்டா என்றாள்.நாளைக்கு எல்லோரும் ஊருக்கு போகிறார்கள் தெரியும் அல்லவா என்றாள் ரஷ்மி.ம் தெரியும் என்றான் ராகவ், நாம் மட்டும் இங்கு இருப்பது போர் அடிக்கிறது என்றாள் ரஷ்மி. நாம் ஒரு நாள் பாண்டிச்சேரி போய் வருவோமா என்றான். நிச்சயமாக என்றாள் ரஷ்மி. மறுநாள் ரயில்வே ஸ்டேஷன் போயிருந்தார்கள் எல்லோரையும் ஊருக்கு அனுப்பி வைக்க. அருணும் பூஜாவும் என்ன செய்வது என்று