இரண்டு ஆண்டுகள் கடந்து போனதே தெரியவில்லை. இப்போது எல்லோரும் கல்லூரியின் மூன்றாமாண்டு துவக்கத்தில் இருந்தனர். ரஷ்மி, ராகவை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தாள். காற்றே என் வாசல் வந்தாய் மியூசிக் ஆல்பம் சூட்டிங் வெவ்வேறு லொகேஷன்களில் நடைபெற்றது. பிரதீபாவுக்கு தானும் ஒரு கிரியேட்டிவ் மெம்பர் ஆக இருப்பதில் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. ரஷ்மி ராகவ் இருவரும் தன்னுடைய வரிகளை பாடும் போது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இன்னும் என்ன improvement செய்ய வேண்டும் என பிரவீனாவிடம் அடிக்கடி பேசி வந்தாள் பிரதீபா. ஜோ வின் சூட்டிங் தொடங்கி விட்டிருந்தது. அந்த பாட்டு ரொம்ப பிரமாதமாக வந்திருந்தது. ஜோவும் டான்ஸ் சிறப்பாக ஆடினான். எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பூஜா அருண் எமோஷனல் வாதங்கள் ஸீன் வைப்பது தான் எப்படி என பிரவீனா குழம்பினாள். ரொம்பவும் கடுமையாக இருக்க கூடாது அதே சமயம் ரொம்ப மென்மையாகவும் இருக்க கூடாது என்று