தி ஈகிள்ஸ் குழுவின் காற்றே என் வாசல் வந்தாய் ஆல்பம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. எல்லா பாட்டுக்களும் நல்ல ரீச் கிடைத்தது. கிருஷ்ணன், சௌமியா உட்பட எல்லோரும் மகிழ்ந்து போனார்கள்.மியூசிக் ஆல்பம் விமர்சனமும் மோசமில்லாமல் இருந்தது. கிருஷ்ணன் ஓரளவுக்கு நல்ல லாபம் அடைந்தார். என்ன ராகவ் யோசிக்கிறாய் என்றாள் ரஷ்மி. பேசாமல் படிப்பை விட்டு சினிமாவுக்கு போய்விடலாமா ஆசையை பாரு.. படிப்பு முடிச்சு நல்ல வேலைக்கு போய் என்னைய கல்யாணம் பண்ணுற வழியை பாரு என்றாள். கிருஷ்ணன் தி ஈகிள்ஸ் டீம் மொத்தமும் கூப்பிட்டு பார்ட்டி தந்தார். பிரதீபாவுக்கு நன்றி சொன்னார். பூஜாவுக்கும், அருணுக்கும் மோதிரம் அணிவித்தார். ஆல்பம் யுட்யூப் மூலம் பல லட்சம் பேரை சேர்ந்தது. பூஜா அப்பா கிருஷ்ணனுக்கு நன்றி சொன்னார். காலேஜ் ஃபைனல் இயர் ப்ராஜக்ட் சம்பந்தமாக எல்லோரும் சென்னைக்கு கிளம்பினர் . அருண்,ஜோ, ராகவ் ஒரு குழுவாகவும்,பூஜா, ரஷ்மி ,சுகன்யா ஒரு குழுவாகவும்