நான் இப்போ வக்கீலா பிராக்டிஸ் பன்றேன். சுமதியை எனக்கு சின்ன வயசிலேர்ந்தே தெரியும். ரொம்ப தைரியமான பொண்ணு . அவ ஆனந்தை காதலிக்க ஆரம்பிச்சா ஆனா அவன் இவளை கை விட்டுவிட்டான். ஆனந்தும், சுமதியும் நெருக்கமா இருந்த வீடியோவை அரவிந்த் கூட ஷேர் பண்ணினான். அரவிந்த் சுமதியை மிரட்டினான் . அந்த வீடியோவை வெச்சு முரளி கூட மிரட்டினான் . சுமதி எதுக்கும் பயப்படலை. அப்போதான் ரம்யா நிச்சயதார்த்ததுல அரவிந்த், ஆனந்த் ரெண்டு பேரையும் சந்திச்சா.சுமதியை மூணாவது மாடிக்கு அழைத்து போய் பேசுனப்போ என்ன நடந்ததுன்னு தெரியல அப்போதான் ஆனந்த் கீழே விழுந்துட்டான்.இப்போ கோமா ல இருக்கான். சுமதி எனக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொன்னா. அடுத்த நாளே சுமதி சூசைட் பண்ணிக்கிட்டா. ஆனந்தை தள்ளி விட்டது யாருன்னு கண்டு பிடிக்க போலீசால முடியல. அது யாருன்னு தெரிஞ்சா நாம அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்றாள் . நானும் நிறைய