ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 24

ஒரு வழியாக சுபாவை சமாதானப்படுத்தி விட்டு ரூமுக்கு வந்தான் விஷால். சுபாவுக்காக அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது. இப்போது அவனுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது மறுபடியும் சுபாவுக்கு போன் பண்ணினான் சுபா சாப்பிட்டியா என்றான். இல்லை சுபா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்றான். தயவு செஞ்சு சாப்பிட்டு படுத்துக்கோ என்றான். சரி விஷால், நாளைக்கு போன் பண்றேன்.அனன்யாவுக்கு போன் பண்ணி சுபாவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுமாறு சொன்னான். நீ கவலைப்படாத விஷால் நான் பேசுறேன் அன்றைய தின வேலைகளில் மூழ்கினான்.இரவு 8 மணி போல சுபா ஃபோன் செய்தாள். என்ன விஷால் பண்ற என்றாள். கொஞ்சம் வேலையா இருக்கேன் பத்து மணிக்கு பிறகு கூப்பிடட்டுமா என்றான் சரி விஷால். பத்து மணிக்கு போன் செய்தான் சொல்லு சுபா போன் பண்ணி இருந்தாயே நான் ஊருக்கு போயிட்டு அம்மாவை பார்த்து பேசிட்டு வரேன்