இரவுக்கு ஆயிரம் கைகள் - 38

  • 750
  • 300

ராம் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். ஒரு வேளை சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருப்பாளோ ? இல்லை மின்சார ரயிலில் அடிபட்டிருப்பாளோ என யோசித்தான் . அவசர அவசரமாக ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டான் . அவனுடைய ஊகம் சரிதான் . ரெண்டு நாள் கழித்து அவர்கள் அழைத்தார்கள் . குறிப்பிட்ட தேதியில் நீலா ரயில்வே ட்ராக்கில் அடிபட்டு செத்துவிட்டாள் என சொன்னார்கள் .ட்ராக்கில் அடிபட்டு செத்தது நீலாதான் என காமாட்சி உறுதி செய்தாள். தேவிகா,ரம்யா, காமாட்சி மூவரும் வேதனையுடன் அழுதனர் . போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் அவ்வளவு தெளிவாக இல்லை . ராம் இது தற்கொலையா இருக்க வாய்ப்பில்லை. தவறி போய் ட்ரைனில் அடி பட்டிருக்கலாம் என்றான் .என் husband வெளிநாட்டுலே இருந்து வரட்டும் வந்த உடனே இவங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள் தேவிகா.. காமாட்சியிடம் சடலம் ஒப்படைக்க பட்டது , என்னவோ என் பொண்ணு மூளியா செத்துருக்காளே என சொன்னாள் காமாட்சி .அப்டின்னா