இரவுக்கு ஆயிரம் கைகள் - 8

  • 1.1k
  • 285

தீபுவின் இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது . மயங்கி சரிந்தாள்.தீபு தீபு என ராம் அரற்றினான். அவசரமாக அள்ளி எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான் . சின்ன பொண்ணு சார் எப்படியாவது காப்பாத்துங்க என ராகவ் டாக்டர்களிடம் மன்றாடினான் . ரஞ்சனியும் ஊரிலிருந்து வந்து விட்டாள். ஆபரேஷன் செய்து குண்டை அகற்றினார்கள் .deepu கொஞ்ச நாள் ஆஸ்ப்பிடல்லேயே இருக்கட்டும் அதுதான் நல்லது என மருத்துவர்கள் சொன்னார்கள் . தீபு இன்னும் கண் விழிக்கவில்லை .ராஸ்கல்ஸ் என்று கறுவினான் ராம் . செத்தீங்கடா என்று தனக்கு தானே பேசிக்கொண்டான். போலீஸ் வந்து விசாரித்தார்கள் . மூணாம் நாள்தான் தீபு கண் திறந்து பார்த்தாள். வெரி சாரி தீபு என்றான் ராம் உணர்ச்சி வசப்பட்டவனாய் இருந்தான் . நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ராம் நாங்க தான் இங்க இருக்கோம்ல என்றான் ராகவ். எல்லாரும் இருக்கறப்ப தானே இது நடந்துச்சு . நீங்க கூட