சிவாவின் மலரே மௌனமா.. Part 3

  • 4.7k
  • 2.2k

Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.மலர் அவள் மறையும் முன் என்னை திரும்பி பார்த்தவள்.. கைகளால் Bye என்று எனக்கு மட்டுமே தெரியும் படி தலையாட்டியபடியே கைகளால் சைகை செய்து மறைந்தாள்.நான் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.அவள் போனதுக்கப்பறம் எனக்கு ஒரு வகையான Mixed Feelings ஆக இருந்தது. ஒரு பக்கம் என் மனதில் உள்ளதை மலருக்கு ஏதோ கொஞ்சம் தெரியப்படுத்தி விட்டோம், என் மனதில் அவள் இருக்கிறாள் என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்ற சந்தோஷம், இன்னொரு பக்கம் அவள் பிடி கொடுத்து பேசாதது வருத்தம்.. இது எல்லாமே என்னை போட்டு வதைத்தாலும்.. கடைசியில் மலர் வந்து என் கையை பிடித்து Feelings டன் பேசியது எனக்கு ஏதோ பாசிட்டிவாக பட்டது. இதையேதான் நந்தா விடம் மலரைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவனும் இதேதான் அபிப்ராயபட்டான். மறுபடியும் நந்தா என்னை Remaind பண்ணான்.