இந்த நாட்டை விட்டுப் போறேன் !

  • 14.3k
  • 1.9k

கே.தினகர் “ஏலே! செருக்கிவுள்ளே! எந்திரிலே!” இலுப்படியான் குடிசை வெளியே உள்ள மரத்தடியில் சுருண்டு படுத்துக்கிடந்த சுடலையை காலால் எட்டி உதைத்தான். தினம் இந்த கொடுமைதான். இலுப்படியான் சாவுக்கு தப்பு அடிக்கும் குலத்தொழில் செய்பவன்.சின்ன கிராமம் ஆரம்பிச்சு பக்கத்துல உள்ள டவுன் வரைக்கும் சாவுக்கு இலுப்படியானைத்தான் கூப்பிடுவாங்க. அவன் வித்தியாசமான ஒரு வித டண்டணக்கா தப்பு அடிச்சா செத்துப் போன பிணமே எழுந்து ஆடும். இலுப்படியான்